Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேலும் ரூ. 3400 கோடிக்கு ஆயுதக் கொள்வனவு மற்றோர் ஊழலுக்கு தயார் என்கிறது ஐ.தே.க.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ரூ. 3400 கோடிக்கு ஆயுதக் கொள்வனவு மற்றோர் ஊழலுக்கு தயார் என்கிறது ஐ.தே.க.!

ராஜபக்ஷ அரசு இந்த வருட இறுதிக் குள் மேலும் 30 கோடி அமெரிக்க டொலர் (சுமார் மூவாயிரத்து நானூறு கோடி ரூபா) பெறுமதியான யுத்தத் தளபாடங்களை விமானப் படையினருக்குக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மற்றொரு ஊழல் மோசடிக்கு ஆரம்ப ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு குற்றம் சுமத்தும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் வர்த்தகம் கட்டுமட்டில்லாமல் தொடர்வதாகவும் சீறி யிருக்கின்றது.

"மிக்' ரக யுத்த விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசா ரணைகள் இன்னும் முடுக்கி விடப்படாத நிலையில் மீண்டும் ஒரு ஊழல் நடவடிக்கை யில் ஈடுபட அரசு முடிவெடுத்துள்ளது என் றும் ஐ.தே.கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ராஜபக்ஷவின் குடும்பம் ஈடுபட்டுவரும் தொடர் வர்த்தக நடவடிக்கையில் ஒன்றே இது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலை வரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரி யெல்ல இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:

ராஜபக்ஷவின் குடும்பம் இந்த நாட் டின் தேசியப் பிரச்சினை மற்றும் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றிற்குத் தீர்வைக் காண்பதை விட்டுவிட்டுப் பணம் உழைக்கும் நடவடிக்கையிலேயே கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுள்ளது.

யுத்தத்தைக் காரணங்காட்டி அதனூடாக கோடிக்கணக்கான ரூபா பணத்தை இந்த அரசு சம்பாதித்து வருகின்றது. அண்மையில் மிக் ரக விமானங்களை அரசு கொள்வனவு செய்தது, அதில் பல கோடி ரூபாவை அவர்கள் சம்பாதித்தனர்.

இப்போது மீண்டும் விமானப் படைக்காக மூவாயிரத்து நானூறு கோடி ரூபா செலவில் யுத்தத் தளபாடங்களைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இதன் ஊடாக மேலும் பல கோடி ரூபாவைச் சம்பாதிப்பதே ஆட்சியாளர்களின் திட்டமாகும்.

இது போலவேதான் ஐயாயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை எச்.எஸ்.பி.ஸி. வங்கியில் கடனாகப் பெற அரசு முடிவெடுத்துள்ளது. அப்பணம் அபிவிருத்திப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படப் போவதில்லை. அதைக் கொண்டு அவர்கள் வர்த்தகம் செய்யப்போகிறார்கள்.

பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பயங்கரவாதத்தை ஒழிக்கப்போகிறார்கள் எனப் பொய் கூறிக்கொண்டு, ஆயுதங்களை வாங்கிக்குவித்து, அதன் ஊடாகப் பணம் சம்பாதிப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே இந்தநாட்டு மக்கள் பொருட்களின் விலையேற்றத்தால் வாழமுடியாமல் துன்பப்படுகின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பணத்தைப் பயன்படுத்தாது இவ்வாறு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது ஏற்புடையதல்ல.

இந்த ஆயுதக் கொள்வனவு தொடர்பாக நாடாளுமன்றிற்கோ அல்லது கணக்காய்வார் நாயகத்திற்கோ அரசு அறிவிக்கவில்லை. மிகவும் இரசியமாகவே இந்தக் கொள்வனவை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விடயத்தை நாமாகவே முகர்ந்து பிடித்தோம்.

அரசு ஊழலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு இரகசியமாக இக்கொள்வனவை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பது நிச்சயம். இதற்கு அரசு உடனடியாக பதில் கூறவேண்டும் என்றார்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.