கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03 / In English & Tamil
அடுத்த வருடம் அவர்கள் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கிறிஸ்துமஸ் சத்தமாக இருந்தது. பிரகாசமாக இருந்தது. மேலும் வணிக ரீதியாக இருந்தது. கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] நெருப்பிடம் [fireplace] அருகே தொங்கவிடப்பட்ட காலுரை [ஸ்டாக்கிங்ஸ் / Stockings] காணப்பட்டது.
குழந்தைகள் சாண்டா கிளாஸ் [Santa Claus] புகைபோக்கியில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தனர். அடுத்த நாள் குழந்தைகள் எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ந்தனர்.
அன்று இரவு, சாரா கேட்டாள், “சாண்டா [Santa Claus] பரிசுகளை கொண்டு வந்ததாக நீங்கள் எப்போதாவது நம்பினீர்களா?”
சாமுவேல் சிரித்தான். “நான் குழந்தையாக இருந்தபோது, ஆம். ஆனால் நான் ஏன் என்று ஒருபோதும் கேட்டதில்லை.” அவன் கொஞ்சம் இடைநிறுத்தினான். அதன் பின், “நாங்கள் மரபுகளில் பிறந்தவர்கள். நாங்கள் அவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறோம். பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்புவதை ஏன் நம்புகிறார்கள் என்று கேட்பவர்கள் மிகக் குறைவு.”
அப்பொழுது, தனது சாதாரண வகுப்பில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை அறிவியல் பூர்வமாகக் கற்றுக் கொடுத்த தனது பள்ளி ஆசிரியரை சாரா நினைவு கூர்ந்தார், ஏன் என்றால், அவர் கிரகணங்களின் போது உண்ணாவிரதம் இருந்தார். அதேவேளை, சாரா, அவனின் பதிலை சங்கடமாக உணர்ந்து, ஒரு பெருமூச்சு விட்டாள். ஏனென்றால் அவளும் அப்படியே, ஒன்றும் ஏன் என்று கேட்பதில்லை.
அது சரி சாரா, கொஞ்சம் என்னைப் பார் என்றவன் நாம், "நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்" என்றான்.
மூன்றாவது கிறிஸ்துமஸ் அமைதியாக வந்தது. இந்த முறை, பைபிளைத் திறந்தது சாரா தான்.
அவள் லூக்கா, அத்தியாயம் 2 ஐ [Luke 2 / The Birth of Jesus] சத்தமாக, "அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று வாசித்து விட்டு, அவள் சாமுவேலைப் பார்த்து, “குளிர்காலத்தில் மேய்ப்பர்கள் அதைச் செய்வார்களா?” என்று கேட்டாள்.
“இல்லை,” என்று சாமுவேல் மெதுவாக பதிலளித்தான். பின், “பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். ” என்றான்.
அவன் அவளுக்கு மற்ற வசனங்களைக் எடுத்துக் காட்டினான்:
சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.]
வாசித்து முடிய அவன் அவளுக்கு சொன்னான்: “பைபிளே குளிர்காலம் கடுமையாக இருந்தது என்று காட்டுகிறது, எனவே இயேசு டிசம்பரில் பிறந்திருக்க முடியாது.” என்றான். சாரா கொஞ்சம் தயக்கத்துடன் மெதுவாக பைபிளை மூடினாள். கண்ணீர் அவள் கண்களை நிரப்பியது - கோபத்தால் அல்ல, விசுவாசம் எடுத்தவுடன் உடைவதில்லை என்பதால். “அப்படியானால் கிறிஸ்துமஸ் என்றால் என்ன?” என்று அவள் கேட்டாள்.
சாமுவேல் அவள் கையைப் பிடித்தான்.
“ஒரு தேதி இல்லை,”
“ஒரு மரம் இல்லை.
சாண்டா அல்ல.”
“இது பல நூற்றாண்டுகளாக வளர்ந்த கதை - வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரத்துடன் கலந்தது.”
“ஆனால் இயேசு?” என்று அவள் கேட்டாள்.
“அவருடைய செய்தி நிலைத்திருக்கிறது,” என்று சாமுவேல் பதிலளித்தான். “உண்மை. இரக்கம். நீதி. மனிதநேயம்.” அவர்கள் அமைதியாக சாளரத்தின் ஊடாக அயலவர்கள் கொண்டாட்டத்தை பார்த்து ரசித்தனர்.
ஆண்டுகள் கடந்தன. அவர்களின் வீட்டில் இன்னும் மெழுகுவர்த்திகள் இருந்தன - ஆனால் குறைவான அலங்காரங்களுடன். அவர்களின் குழந்தைகளுக்கு சாண்டா கிளாஸ் கதை இல்லை. ஆனால் நேர்மை இருந்தது.
ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும், அவர்கள் மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்றனர்.
சாரா இன்னும் பிரார்த்தனை செய்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிந்து கொண்டனர். அவர்கள் நம்பிக்கையை விட ஆழமான உண்மைகளைக் கற்றுக்கொண்டார்கள்.
ஒரு கிறிஸ்துமஸ் மாலையில், சாரா மெதுவாகச் சொன்னாள், "நான் இன்னும் நம்புகிறேன்." சாமுவேல் சிரித்தான். "நான் இன்னும் கேள்விகள் கேட்கிறேன்." அவள் அவன் மீது சாய்ந்தாள். "ஒருவேளை அது போதும்." என்றாள். சாமுவேல் தலையசைத்தான். ஏனென்றால் அவர்கள் அமைதியான உண்மையைக் கற்றுக்கொண்டார்கள்:
நம்பிக்கை கேள்விகளுக்கு அஞ்சுவதில்லை.
அன்பு உண்மைக்கு அஞ்சுவதில்லை.
மாயையிலிருந்து விடுபட்ட கிறிஸ்துமஸ்,
பலவீனமாகாது—ஆனால் மனிதனாக மாறுகிறது.
Brief of 'When the Candle Met the Question' / Part: 03
England and the Second Christmas
They moved to England the following year.
Christmas there was louder. Brighter. More commercial.
Stockings hung by the fireplace.
Children waited for Santa Claus to come down the chimney.
One night, Sarah asked,
“Did you ever believe Santa brought gifts?”
Samuel smiled.
“When I was a child, yes.
But I never asked why.”
He paused.
“We are born into traditions.
We accept them without questioning.
Even as adults, very few people ask why they believe what they believe.”
Sarah remembered her schoolteacher—who taught solar and lunar eclipses scientifically—yet fasted during eclipses.
She felt uneasy.
The Bible Opens
The third Christmas arrived quietly.
This time, it was Sarah who opened the Bible.
Luke, Chapter 2.
She read aloud about the shepherds guarding their flocks at night.
She looked at Samuel.
“Would shepherds do that in winter?”
“No,” Samuel replied gently.
“Historically, flocks were brought in before October 15 to protect them from cold and rain.”
He showed her other verses:
Song of Solomon 2:11 — “The winter is past.”
Ezra 10:9,13 — People trembling in heavy winter rain, unable to stand outside.
“The Bible itself shows winter was harsh,” he said.
“So Jesus could not have been born in December.”
Sarah closed the Bible slowly.
Tears filled her eyes—not of anger, but of loss.
Faith Does Not Break
“Then what is Christmas?” she asked.
Samuel took her hand.
“Not a date,” he said.
“Not a tree.
"Not Santa.”
“It is a story that grew over centuries—mixed with history, politics, and culture.”
“But Jesus?” she asked.
“His message remains,” Samuel replied.
“Truth. Compassion. Justice. Humanity.”
They sat silently.
A Different Celebration
Years passed.
Their home still had candles—but fewer decorations.
There was no Santa story for their children.
But there was honesty.
Every Christmas, they visited hospitals, orphanages, and old-age homes.
Sarah still prayed.
Samuel still questioned.
But neither tried to convert the other.
They had learned something deeper than belief.
Ending
One Christmas evening, Sarah said softly,
“I still believe.”
Samuel smiled.
“And I still ask questions.”
She leaned against him.
“Maybe that is enough.”
Samuel nodded.
Because they had learned the quiet truth:
Faith does not fear questions.
Love does not fear truth.
And Christmas, stripped of illusion,
becomes not weaker—but human.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
முற்றிற்று / Ended
துளி/DROP: 1954 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 03
https://www.facebook.com/groups/978753388866632/posts/32987342684247620/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.