Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் கா மு ஷெரிப் - பாட்டும் நானே,பாவமும் நானே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர் கா மு ஷெரிப்.

கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர்.


கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்!
---+++++-------

கா.மு.ஷெரீப் ...

இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!

ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை, 
நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!

அந்தப் பாடல் :
“ஏரிக்கரையின் மேலே 
போறவளே பெண்மயிலே…!”
.
ஆம்...
இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !
.
சுமார் இருபது வருடங்களுக்குமுன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில இனிய நினைவுகளை , சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது .
.
சொன்னவர் சன் டி.வி. வீரபாண்டியன் !

இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் :
.
“இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண் ; காதலன் கைவிட்டுவிட்டான்.
.
பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர். 
இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். 
"குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார்.
.
" வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார்.
.
ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ?

"உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" 

என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.
.
குழந்தை பிறந்ததும் , அந்தப் பெண்ணைச் சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். 
.
பிறந்த அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி , வளர்த்து ஆளாக்கினார். 
.
அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.”
.
# நெகிழ்ந்து போனேன் 
வீரபாண்டியன் சொன்னதைப் படித்து விட்டு !
.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் , 
பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக , 
அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு. ஷெரிப்.

"அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள் 
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.”
.
இதுவும் கா. மு. ஷெரிப் எழுதிய பாடல்தான் ..!
.
# அந்தப் பாடலில் கா. மு. ஷெரிப் எழுதியிருப்பார் :

“துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்”
.
# இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..!
மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் !

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.

 ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.

 ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம்.

 இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.
.
# வாழ்க
 கா.மு.ஷெரிப் புகழ் ..!
வளர்க மனித நேயம்.!
--------++++---------

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எழுதிய இன்னும் சில பாடல்கள்:
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே - துளசி மாடம்
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன் - சிவகாமி
மல்லியக்கா மல்லியக்கா எங்கடிபோறே - மக்களை பெற்ற மகராசி
என்னைபோலே பாக்யசாலி யாரே உலகிலே - நல்ல தங்கை
எங்கிருந்தோ இங்கு வந்தரதியே - முல்லை வனம்
சரியென்று நீயே ஒருவார்த்தை சொன்னால் சந்தோசமாக வாழலாம் - முல்லை வனம்
வேட்டி கட்டின பொம்பளே - கல்யாணம் செய்துக்கோ
எங்கும் நிறை பரம்பொருள் ஒன்றே - கல்யாணம் செய்துக்கோ
வாழ்வது போனாலும் வறுமையே வந்தாலும் நீ துயர்கொள்ளாதே - மாங்கல்யம்
வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே தீபநன்நாளை அன்பாக கொண்டாடுவோம் - கூண்டுக்கிளி

இப்படி பல ....

பொதுவாக கவி கா.மு. செரிப் அவர்களின் "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் எசும் வையகம் இது தானடா" என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சிறப்பானவை. ஆயினும் திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடலை செரிப் அவர்கள்தான் இயற்றினார் என்பதை மறுக்கும் பல எதிர் கருத்துகளும் உண்டு.

 

 

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.