Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி

சச்சின் சாதனையை தகர்த்த கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து சச்சின் நிகழ்த்தியிருந்த சாதனையை நெருங்கி வரும் விராட் கோலி, அவரது வேறு சில சாதனைகளை முறியடித்துள்ளார். 

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபது ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. இருபது ஓவர் தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்ததால் மூன்றாவது வீரராக எந்தவொரு நெருக்கடியும் இன்றி விராட் கோலி களமிறங்கினார். 

 

ஸ்ட்ரைக் ரேட் அதிகம் - அபாயகரமான ஷாட்கள் இல்லை

கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் கண்டு சிறப்பான ஃபார்மில் இருந்த கோலி, அதனை அப்படியே தொடர்ந்தார். தொடக்கம் முதலே நேர்த்தியாக ஆடி முத்திரை பதித்தார்.

இந்திய அணிக்கு தொடக்க ஜோடி கொடுத்த சிறப்பான அடித்தளத்தை பயன்படுத்திக் கொண்ட அவர், அணியின் ரன் வேட்டையை அப்படியே தொடர்ந்து ரசிகர்களின் உத்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். 

அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ரஜிதா பந்துவீச்சில் கொடுத்த கேட்சை குசால் மென்டிஸ் தவறவிட, கிடைத்த வாய்ப்பை விராட் கோலி கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

சொந்த ஸ்ட்ரைக் ரேட்டை 125க்கு குறையாமல் பார்த்துக் கொண்டாலும், பந்தை வானத்தை நோக்கி பறக்கவிடுவதை அவர் தவிர்த்தார். 

சச்சின் சாதனையை தகர்த்த கோலி

பட மூலாதாரம்,TWITTER/ BCCI

ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதம்

80 பந்துகளில் சதம் விளாசி அசத்திய அவர், முடிவில் 87 பந்துகளில் 113 ரன் சேர்த்து கடைசி ஓவர்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 12 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் அவர் விளாசியிருந்தார். 

 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி அடுத்தடுத்து அடிக்கும் இரண்டாவது சதம் இது. கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் கண்ட அவர், தற்போது இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலேயே மூன்று இலக்க ரன்களை தொட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ஒருநாள் போட்டிகளில் 45, ஒட்டுமொத்தத்தில் 73-வது சதம்

கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 45-வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் 73-வது சதமாகவும் இது பதிவானது. தற்போதைய நிலையில், கோலி 265 ஒரு நாள் போட்டிகளில் 45, டெஸ்டில் 27, இருபது ஓவர் போட்டிகளில் ஒரு சதம் கண்டுள்ளார். 

 

சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்த சதங்கள் வரிசையில் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்திய பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே கோலியைக் காட்டிலும் அதிக சதங்கள் (100 சதங்களுடன்) முதலிடத்தில் இருக்கிறார். 

இலங்கைக்கு எதிராக அதிக சதம் - சச்சின் முந்தினார்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் வரிசையில் சச்சினுடனான இடைவெளியை வேகமாக குறைத்து வரும் கோலி, அவரது மற்ற சில சாதனைகளை தகர்த்துள்ளார். 

 

ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை சச்சினிடம் இருந்து கோலி தனதாக்கிக் கொண்டுள்ளார். இலங்கைக்கு எதிராக சச்சின் 8 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அவரைத் தாண்டி கோலி 9 சதங்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இருவருமே 9 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ளனர். 

சச்சின் சாதனையை தகர்த்த கோலி

பட மூலாதாரம்,TWITTER/ BCCI

சொந்த மண்ணில் அதிக சதம் - சச்சின் சாதனை சமன்

ஒருநாள் போட்டிகளில் 257 இன்னிங்ஸ்களில் 12,500 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

 

சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 20 சதங்களுடன் கோலி சமன் செய்துள்ளார். இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 99 போட்டிகளிலேயே அதனை சாதித்துள்ளார். 

ஒருநாள் போட்டி: சதத்தில் சச்சினை விரைவில் முந்த வாய்ப்பு

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 5 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா 29 சதங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் கோலியைப் பின்தொடர்கிறார். 

 

சச்சின் தனது கடைசி 5 சதங்களை அடிக்க 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். கோலியைப் பொருத்தவரை 2020-ம் ஆண்டுக்குப் பிறகு 2 சதங்கள் மட்டுமே கண்டுள்ளார். ஆனால், அவையிரண்டுமே அடுத்தடுத்த ஆட்டங்களில் வந்துள்ளன.

இதே பார்மை கோலி தொடர்ந்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் கண்ட வீரர் என்ற சாதனையை அவர் முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

https://www.bbc.com/tamil/articles/cev0nqn9248o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு சதம் அடிக்க முடிந்தது எப்படி? கோலி கூறிய மந்திரம்

கோலி

பட மூலாதாரம்,BCCI/TWITTER

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ரன்களைக் குவிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான விராட் கோலி, சமீப காலமாக தனது ஆட்டத்தைப் புதுப்பித்து உலகத்தை வியக்க வைத்திருக்கிறார்.

2019 நவம்பர் முதல் 2022 செப்டம்பர் வரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்று விமர்சித்தவர்களுக்கு பதில்கூறும் விதமாக இன்னொரு சதத்தை இந்திய மண்ணில் பதிவு செய்திருக்கிறார்.

“ஒவ்வொன்றும் கடைசி ஆட்டம்தான்” என்கிறார் விராட் கோலி. அதுதான் அவருடைய மந்திரம். இத்தனை ஆண்டுகளில் எப்போதும் போலத்தான் தான் தயாராகி ஆட வந்ததாக அவர் கூறுகிறார்.

இத்துடன் அவர் கிரிக்கெட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று பலமுறை பேசப்பட்டது உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் ஏதோ ஒரு வகையின் தன்னை நிரூபித்து மீண்டு வந்திருக்கிறார். 

 

ஆசிய கோப்பை டி20 போட்டியில் சதம் அடித்த தருணம் அப்படிப்பட்ட தருணங்களுள் ஒன்று. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டமும் அவர் மீண்டு வந்துவிட்டார் என்பதற்கான இன்னொரு அடையாளமாக பார்க்கப்பட்டது. 

இப்போது தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்து இப்போதைக்கு தாம் கிரிக்கெட்டை விட்டு விலகப்போவதில்லை என்று மறைமுகமாக அறிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 80 பந்துகளில் அவரால் சதம் அடிக்க முடிந்தது. 87 பந்துகளில் 113 ரன்களைக் குவித்திருக்கிறார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் 45-வது சதம். ஒட்டுமொத்தத்தில் 73-வது சதம். 265 ஒரு நாள் போட்டிகளில் 45 சதங்களும், டெஸ்டில் 27 சதங்களும், டி20 போட்டிகளில் ஒரு சதமும் அடித்திருக்கிறார் கோலி.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வரிசையில் இரண்டாவது இடத்தில் கோலி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் மட்டுமே கோலியைக் காட்டிலும் அதிக சதங்கள் முதலிடத்தில் இருக்கிறார். 

கோலி

பட மூலாதாரம்,BCCI/TWITTER

"விரக்தியடைந்தால் வெற்றி இல்லை"

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக் கொண்ட கோலி இத்தனை ஆண்டுகளில் தாம் கற்ற அனுபவத்தை ஓரிரு வாக்கியங்களில் கூறிவிட்டுச் சென்றார்.

“ஆட்டம் மிக எளிமையாகவே இருக்கிறது. நாம்தான் அதை நமது சொந்தப் பற்றுகளால் அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம். அந்தப் பற்று இல்லாவிட்டால் அச்சமில்லாமல் ஆட முடியும்” என்று கூறினார் விராட் கோலி.

ஆட்ட நேரத்தில் விரக்தி அடைந்தால் அது எதற்கும் உதவாது என்று கூறிய கோலி, "நான் தயாராவது எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். எனது நோக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். சில சமயங்களில் விரும்பும் ரன்களை நான் பெறமுடியவில்லை. ஆனால் இன்று நான் பந்தை நன்றாக அடிப்பது போல் உணர்ந்தேன். விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் நான் மறுமுனையில் நீடித்து மற்ற நண்பர்களுடன் பேட் செய்ய வேண்டியிருந்தது” என்று கூறினார்.

அவரது பேட்டிங்கின்போது, கோலி இரண்டு முறை ஆட்டமிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முதலில் 52 ரன்களிலும், பின்னர் மீண்டும் 81 ரன்களிலும் அந்த வாய்ப்பை இலங்கை தவறவிட்டது. 

“அதிர்ஷ்டம் காரணமாக நான் சதம் அடித்திருக்கலாம். இந்த சிறிய அதிர்ஷ்டத்தை நான் பெற்றதற்கு நன்றி கூறுகிறேன். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்."

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்கு எதிராக அதிக சதம் 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் வரிசையில் சச்சினுடனான இடைவெளியை வேகமாக குறைத்து வரும் கோலி, அவரது மற்ற சில சாதனைகளை தகர்த்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை சச்சினிடம் இருந்து கோலி தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சச்சின் 8 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அவரைத் தாண்டி கோலி 9 சதங்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இருவருமே 9 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ளனர். 

 

கோலி

பட மூலாதாரம்,BCCI/TWITTER

சொந்த மண்ணில் அதிக சதம்

ஒருநாள் போட்டிகளில் 257 இன்னிங்ஸ்களில் 12,500 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 20 சதங்களுடன் கோலி சமன் செய்துள்ளார். இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 99 போட்டிகளிலேயே அதனை சாதித்துள்ளார். 

சச்சின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சதத்தில் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு

ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 5 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா 29 சதங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் கோலியைப் பின்தொடர்கிறார். 

சச்சின் தனது கடைசி 5 சதங்களை அடிக்க 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். கோலியைப் பொருத்தவரை 2020-ம் ஆண்டுக்குப் பிறகு 2 சதங்கள் மட்டுமே கண்டுள்ளார். ஆனால், அவையிரண்டுமே அடுத்தடுத்த ஆட்டங்களில் வந்துள்ளன.

இதே பார்மை கோலி தொடர்ந்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் கண்ட வீரர் என்ற சாதனையை அவர் முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

https://www.bbc.com/tamil/articles/clmz9n9leepo

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ச்சின் விளையாடின‌ கால‌த்தில் கூட‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள்

 

கோலி விளையாடுற‌ இந்த‌ கால‌த்தில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் மிக‌ மிக‌ குறைவு

 

அது தான் கொஞ்ச‌ம் பின்ன‌டைவு 😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைப்பதில் புதிய எல்லைகள் தொட்ட விராட் கோலி: சச்சினை விஞ்சுவது எட்டும் தூரத்தில்

சாதனை படைப்பதில் புதிய எல்லைகள் தொட்ட விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

15 ஜனவரி 2023

இலங்கை உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலியும் பல்வேறு சாதனைகளை இந்த ஆட்டத்தின் மூலம் படைத்துள்ளார். 

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் (114*) அடித்திருந்தார். அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் சுமார் 3 ஆண்டுகளுக்கு அவர் சதம் அடிக்கவில்லை. இதனால், விராட் கோலி ஃபார்மில் இல்லை என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில்தான், 10, டிசம்பர் 2022ல் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்தார். அடுத்த ஒரே மாதத்தில் இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து, தொடர்ச்சியாக இரு சதங்களை அவர் பதிவு செய்திருந்தார். ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 166* ரன்கள் எடுத்து 50 நாட்களுக்குள்ளாக தனது மூன்றாவது சதத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். 

 

திருவனந்தபுரம் கிரீன் ஃபீல்டு மைதானத்தில் ஒரு  பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இந்த ஆட்டத்தில் விராட் கோலி அடித்த 166* ரன் உள்ளது. 2வது அதிகபட்ச ஸ்கோராக இதே ஆட்டத்தில் சுப்மன் கில் எடுத்த 116 ரன் உள்ளது. 

 

சச்சினின் சாதனை முறியடிப்பு

ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 21 சதங்களுடன் கோலி முந்தியுள்ளார்.  இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 100 போட்டிகளிலேயே அதனை தாண்டியுள்ளார். 

இலங்கைக்கு எதிராக விராட் கோலி இதுவரை 10 சதம் அடித்துள்ளார். ஒரு நாட்டின் அணிக்கு எதிராக தனிப்பட்ட ஒருவர் அடித்துள்ள அதிகபட்ச சதம் இதுவாகும். மேற்கு இந்திய அணிக்கு எதிராக விராட் கோலி 9 சதங்கள் அடித்துள்ளார். இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 9 சதங்கள் அடித்துள்ளது அடுத்த இடத்தில் உள்ளது. 4வது இடத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 8 சதங்களுடன் விராட் கோலியே உள்ளார். 

ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2012ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 183 ரன்கள் எடுத்துள்ளதே அவரது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 

மேலும், இந்த ஆட்டத்தில் விராட் கோலி மொத்தம் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அவர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 7 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

 

சாதனை படைப்பதில் புதிய எல்லைகள் தொட்ட விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலியின் ஜனவரி 15 மேஜிக்

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம்(122) அடித்திருந்தார். அதேபோல், 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 153 ரன்களும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 104 ரன்களும் விராட் கோலி எடுத்திருந்தார். அதேபோல், ஜனவரி 15ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இந்திய அணி படைத்துள்ள சாதனைகள்

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையான ஆட்டத்தில் இலங்கை அணி 76 ரன்களில் ஆட்டம் இழந்ததால் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிக ரன் (317) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

மேலும், ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 96 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டு அணிக்கு எதிராக மற்றொரு நாட்டு அணி பதிவு செய்துள்ள அதிகபட்ச வெற்றி இதுவாகும். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 95 வெற்றிகளை பதிவு செய்து 2வது இடத்தில் உள்ளது. இதேபோல், டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள 19 வெற்றியும் ஒரு நாட்டு அணிக்கு எதிராக மற்றொரு நாட்டு அணி பதிவு செய்துள்ள அதிகபட்ச வெற்றியாகும். 

https://www.bbc.com/tamil/articles/cxx4l1wwxz7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலி: 'நமத்து போன வெடி' என்ற ஏளனத்தை கடந்து வெடித்துச் சிதறும் சாதனைகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விதான்ஷு குமார்
  • பதவி,பிபிசி இந்தி விளையாட்டு செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
விராட் கோலி

பட மூலாதாரம்,ANI

கடந்த ஆண்டு வரை 'நமத்துப் போன வெடி' என்று ஏளனம் செய்யப்பட்ட ஒரு வீரர் ஒரே இன்னிங்ஸில் வெடித்துச் சிதறி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

இந்தச் சம்பவம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்துள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்தியவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பெர்ஃபார்மன்ஸ் தான் இப்போது முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் பந்து பவுண்டரியை நோக்கிச் செல்வதைத் தடுக்க முயன்றபோது இரண்டு ஃபீல்டர்கள் நேருக்கு நேர் மோதி பந்தை நிறுத்த வேண்டியிருந்தது. இதனால் காயமடைந்த வீரர்களுக்காக போட்டியே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

 

அதன் பிறகு நடந்த போட்டியின் முடிவு இந்திய அணியின் பக்கம் ஒருதலைபட்சமாக மாறியது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து அம்சங்களிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டதால், எதிர்த்து ஆடிய இலங்கை அணியின் ஆட்டத் திறன் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி போல இருந்தது.

ஆனால் இந்தப் போட்டியிலிருந்து பல சுவாரஸ்யமான கதைகள் உருவாகின்றன. அவை போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுகின்றன. கடந்த போட்டியின் மறக்க முடியாத சில அம்சங்களைப் பார்ப்போம்.

மிகப்பெரிய வெற்றி

விராட் கோலி

பட மூலாதாரம்,TWITTER/BCCI

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 390 ரன்கள் குவித்தது. 16வது ஓவரில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது, இலங்கை வீரர்கள் ஆபத்து முடிந்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ரோஹித் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும்போது, அவர் ஒரு பெரிய சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பார் என்று தோன்றியது.

ஆனால் 3வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி, முதலில் ஷுப்மன் கில்லுடனும், பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் மூன்றாவது விக்கெட்டுக்கு ஆடி இரண்டு சத பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.

கில் 97 பந்துகளில் 116 ரன்களோடு ஆட்டமிழந்த நிலையில், குறைந்த ஒருநாள் போட்டிகளே ஆடியிருந்தாலும் தனது வாழ்க்கையின் சிறந்த இன்னிங்ஸை ஆடிய ஷ்ரேயாஸ் தனது பங்குக்கு 38 ரன்கள் சேர்த்தார்.

ஆனால் இந்த இன்னிங்ஸ்கள் அனைத்தும் விராட் கோலியின் மேஜிக்கிற்கு முன்பு கானல் நீர் போலவே காட்சியளித்தன. இந்த இன்னிங்ஸில் கோலி 110 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 166 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150ஆக இருந்தது. இந்த இன்னிங்ஸில் மட்டும் அவர் எட்டு சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளை விளாசினார்.

இலங்கை படுதோல்வி

இலங்கை

பட மூலாதாரம்,TWITTER/OFFICIALSLC

இந்திய அணி 390 ரன்கள் குவித்த நிலையில் இலங்கை அணி கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி ஜெயசூர்யா, சங்கக்காரா, டி சில்வா ஆகியோரைக் கொண்ட கிளாசிக் அணி அல்ல.

இவர்கள் இருந்த அணி எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும், தீவிரமாக துரத்தும். ஆனால் அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் ஆட்டம், தண்ணீரில் நனைந்த பட்டாசை வெடிக்க முயல்வது போல இருந்தது.

ஒட்டுமொத்த இலங்கை அணியும் 22 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 73 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி. இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு அயர்லாந்தை 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது தான் சாதனையாக இருந்தது.

இந்த வெற்றியின் மூலம், இந்தியா 96 முறை இலங்கையைத் தோற்கடித்துள்ளது. இது தனிப்பட்ட ஒரு நாட்டுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி பெற்ற அதிகபட்ச வெற்றியாகக் கருதப்படுகிறது.

'கிங் கோலி'

விராட் கோலி

பட மூலாதாரம்,ANI

"கால்பந்து உலகில் மெஸ்ஸி தான் கோட்(GOAT - Greatest of All Time) என்றால், என்னைப் பொருத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தான் கோட்."

நேற்றைய போட்டிக்கு பிறகு ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ(ESPNcricinfo) நிகழ்ச்சியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஃபர்வேஷ் மகரூஃப் கூறிய வார்த்தைகள் இவை.

இந்தியா பெற்ற இந்த வெற்றியின் மூலம் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய ஹீரோவாக பார்க்கப்படுகிறார். இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தையும், தனது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது சதத்தையும் அடித்துள்ளார் கோலி. 46 சதங்களுடன் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை உடைக்க நெருங்கி வருகிறார்.

2019க்கு பிறகு விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகள் சதம் அடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு இந்த வறட்சியை முறியடித்த அவர், தற்போது 4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

அதேநேரம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின், சங்கக்காரா, பாண்டிங், ஜெயசூர்யா ஆகியோருக்கு அடுத்தபடியாக 5வது இடத்தில் உள்ளார். ஆனால் பேட்டிங் சராசரியின்  அடிப்படையில், அவர் அனைவரையும்விட சிறந்தவராக விளங்குகிறார். இவர் ஆடியுள்ள 258 போட்டிகளில், இவரின் சராசரி  58ஆக இருக்கிறது. இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 12 ஆயிரத்து 754 ரன்கள் குவித்துள்ளார். 

இதே இன்னிங்ஸில், அவர் சச்சினின் மற்றொரு சாதனையையும் முறியடித்தார். அது, ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த சாதனை. இலங்கைக்கு எதிராக 10 சதங்கள் அடித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலி தனது அரை சதத்தை எட்ட 48 பந்துகள் எடுத்துக் கொண்ட நிலையில், சதத்தை அடுத்த 37 பந்துகளில் எட்டினார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 135.1 ஆக இருந்தது. ஆனால் சதமடித்த பின்னர் அவர் எதிர்கொண்ட 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி, 66 ரன்களை குவித்தார் கோலி. அவரின் கடைசி 25 பந்துகளில் ஸ்ட்ரைக் ரேட் 264 ஆக இருந்தது.

இஷான் கிஷானுக்கு பிறகு, குறைந்த பந்துகளில் 150 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையையும் கோலி இதன்மூலம் படைத்தார். இஷான் கிஷன் 103 பந்துகளில் 150 ரன்கள் குவித்துள்ள நிலையில், நேற்றைய ஆட்டத்தில் கோலி 106 பந்துகளில் இந்த சாதனையை எட்டினார். 

கோலி ஒரே இன்னிங்கிஸில் அதிக சிக்சர்களை அடித்ததும் நேற்றைய போட்டியில்தான். இந்த ஆட்டத்தில் மட்டும் மொத்தம் 8 சிக்சர்களை கோலி பறக்கவிட்டு இருந்தார். அதில் தோனி போல அடித்த ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸ்-உம் அடங்கும்.

டி20 போட்டிகளில் நின்று ஆடும் வீரர்களுக்கு பெரியளவில் வாய்ப்பு இருக்காது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 ஓவர்களுக்கு ஒர் அணி தாக்குப்பிடித்து ஆட, ஒன் டவுன் இறங்கும் வீரரின் நிதானம் அவசியம். இதைத்தான் இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரரான ராகுல் டிராவிட் செய்து வந்தார்.

நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒன் டவுன் இடத்தில் நங்கூரமாக நின்று, ஸ்கோரை உயர்த்த தன்னால் பங்களிக்க முடியும் என்பதை விராட் கோலி மீண்டும் ஒரு முறை நிருப்பித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cw4ex9dp7qpo

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ன் மிசின் ப‌ழைய‌ ப‌டி வேலை செய்ய‌ தொட‌ங்கிட்டு

 

இப்ப‌டியே போனால் இன்னும் கூடுத‌ல் செஞ்சேரி அடிக்க‌லாம் ❤️🙏 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.