Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கே போரைத் தொடங்குவது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மன்னாரில் சில இடங்களில் இராணுவம் போரைத் தொடங்கி விட்டாலும், நேற்றைய தினக்குரல் இதழில் விதுரன் எழுதிய ஆக்கத்தை இங்கே இணைக்கிறேன்

எங்கே போரைத் தொடங்குவது?

-விதுரன் -

தெற்கில் அரசுக்கெதிராக தோன்றிவரும் புதிய அரசியல் நிலைமைகளை சமாளிக்க வடக்கில் பாரிய படை நடவடிக்கையை ஆரம்பிக்க அரசு முயல்கிறது. கிழக்கை கைப்பற்றியது போல், வடக்கையும் மிக விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சூளுரைத்ததன் மூலம் அவசர இராணுவ வெற்றிக்காக அரசு காத்திருப்பது தெளிவாகிறது.

கிழக்கைப் போன்று, வடக்கின் கள நிலையில்லையென்பது நன்கு தெரிந்தும் கிழக்கைப் போன்று வடக்கையும் கைப்பற்றுவோமென அரசு கூறிவருவதன் மூலம் இராணுவ வெற்றியின் மூலம் அரசியல் வெற்றியைப் பெற்றுவிட அரசு தீவிர அக்கறை காட்டி வருவது தெளிவாகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் வருகை, எதிரணிகளின் நடவடிக்கைகளை மேலும் தூண்டி வருவதுடன் ஆளுந்தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் ஜே.வி.பி., அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் வரை இந்த ஆட்சி கவிழுமென்ற பேச்சுக்கே இடமில்லை.

நாட்டின் மிக மோசமான நிலையை நன்குணர்ந்துள்ள ஜே.வி.பி. ஆட்சிமாற்றத்தின் தேவையை வலியுறுத்தினாலும் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்ப்பதை விட ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து விடக் கூடாதென்பதில் கவனமாயிருக்கிறது. இதனால் நாட்டில் தற்போதைய நிலையில் ஆட்சிமாற்றமொன்றுக்கு ஜே.வி.பி.உதவமாட்டாதென்று நிச்சயமாகிவிட்டது.

ஜே.வி.பி.யுடன் பேசி ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தி விட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த அதேநேரம் மங்கள சமரவீர, ரணிலுடன் இணைந்ததை ஜே.வி.பி.கடுமையாக விமர்சித்து வருவதன் மூலம் ஆட்சி மாற்றமொன்றுக்கு ஜே.வி.பி.எவ்விதத்திலும் உதவப் போவதில்லையென்பதுடன் நாட்டின் தற்போதைய மோசமான நிலையைப் பயன்படுத்தி ஐ.தே.க.ஆட்சியமைக்க முயல்வதை தடுத்து நிறுத்த முயலுமென்பதும் வெளிப்படை.

இதன் காரணமாகவே, ஜே.வி.பி.யின் ஆதரவைப் பெறுவது இனிச் சாத்தியமில்லையென இந்தக் கட்சிகள் உணர்ந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மேலும் பிளவையேற்படுத்தி அதன் மூலம் ஆளுந்தரப்பை பலவீனமாக்கி அங்கிருந்து குறிப்பிட்டளவானோரை தம் பக்கமிழுத்து புதிய அரசமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்கவும் அதிலிருப்போரை தம் வசமிழுக்கவும் மங்கள சமரவீரவும் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை பயன்படுத்த முனைகின்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீதுள்ள கோபத்தால், சந்திரிகாவும் மங்கள மற்றும் ரணிலுடன் இணைந்து செயற்பட முற்படுகின்றார். இவர்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுமுள்ளதால் சுதந்திரக் கட்சிக்குள்ளிருக்கும் சந்திரிகா விசுவாசிகளும் ஜனாதிபதியின் எதிர்ப்பாளர்களும், சில பேரம் பேசல்களுடன் எதிரணி பக்கம் சென்று விடலாமென்ற அச்சம் அரசுக்குள்ளது.

இதனால் ஆட்சிமாற்றத்தை தடுக்கும் முயற்சிகளில் அரசு தீவிரம் காட்டுகிறது. ரணிலையும் மங்களவையும் சந்திரிகா சந்தித்ததன் மூலம் அரசிலுள்ள சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் பலருக்கு மறைமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு போன்று சந்திரிகாவையும் ஜனாதிபதி மகிந்தவையும் சந்திக்க வைத்து சந்திரிகாவுடன் ரணிலும் மங்களவும் மேற்கொண்ட சந்திப்புகளின் முக்கியத்துவத்தை இல்லாது செய்யும் முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், ஜனாதிபதியை சந்திரிகா உடனடியாகச் சந்திப்பது அரசைப் பலப்படுத்தும் செயலென்பதால் மகிந்தவை சந்திரிகா சந்திப்பாரா என்பது கேள்விக்குறியே.

இவ்வாறு, ஆட்சிமாற்றத்திற்கும் ஆட்சியைத் தக்கவைக்கவும் மாறி மாறி காய்நகர்த்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மக்களின் கவனத்தை இவற்றிலிருந்து திசை திருப்பி விடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில் அரசு மக்களின் கவனத்தை திடீரென திசை திருப்புவதாயின், அதற்கு வடக்கே களமுனையில் சில முக்கிய வெற்றிகளைப் பெற்றாக வேண்டும்.

கிழக்கில் புலிகளைப் பின்வாங்கச் செய்ததுபோல் வடக்கிலும் புலிகளை பின்வாங்கச் செய்து விட வேண்டுமென அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. இதனால் வடக்கில் சில அவசர வெற்றிகளைப் பெற்று, வடக்கிலும் புலிகள் பலவீனமாகத்தானிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினக்குரல் விதுரண்ணே எப்ப எங்க தொடங்குவானோ? என்ன பகிடியாண்னே? எப்பண்னே நிப்பாட்டினான் திரும்ப தொடங்கிறதுக்கு. :angry:

Edited by Aadhi

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைக்கும் ஏற்றால் போல நல்லாய் கதையள் எழுதிறியள் ஆனால் முடிக்கேக்க மட்டும் கொஞ்சம் வித்தியாசமாய் முடிக்கறியள்

இதையும் ஏலுமெண்டால் சோத்து எழுதிப்பாருங்கோ

1.கத்திமுனையில நடக்கறது

2.படிக்கட்டில நடக்கிறது

3.லிப்டில ஏறிப்போறது

4.சும்மா நடக்கிறது

5.வாள் முனையில நடக்கறது

அதோட எங்க தொடங்கலாம் என்று யோசிக்கிறயளோ!

மாத்தறையில தொடங்கி கொழும்பில முடிக்கலாம் - என்ன ரணிலின்ர மக்கள் அலையோ என்று கேட்காதையுங்கோ !

புலிகளின்ர தாக்குதலால இடம்பெயரப் போற தென்பகுதி மக்களை எங்க இருத்தலாம் எண்டதைத் தான் சொன்னான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.