Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு : காணி உரிமையாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை வழங்க நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு : காணி உரிமையாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை வழங்க நடவடிக்கை

By VISHNU

26 JAN, 2023 | 04:29 PM
image

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று (26) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றுவருகிறது.

01__1_.jpg

காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் வருகை தந்து குறித்த காணி உரிமையாளர்கள் பதிவு செய்ய முடியும். காணி கிராம சேவையாளர் பிரிவுகளான J 246 , J256, J240 இற்குள் அடங்குகின்றன. 

01__3_.jpg

மேலும் குறித்த காணி உரிமையாளர்களுக்கான கடிதமும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. பிரதேச செயலகத்துக்கு வந்து இடத்தின் வரைபடத்தில் காணியை இனங்காண முடியும் அதில் இலக்கம் இடப்பட்டுள்ளது.

01__2_.jpg

https://www.virakesari.lk/article/146766

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விமான நிலையத்தை விஸ்தீகரிப்பதற்கும் அதன் சூழலில் உள்ள காணிகளை சுவீகரிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டுவிட்டதா அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கட்டுமான திட்டங்கள் சுற்று சூழல் ஆய்வுகள் பற்றி ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டுவிட்டதா? இந்த விபரங்கள்  எதுவுமே செய்திகளில் வெளிவந்ததாக தெரியவில்லை.

இராணுவத்தின் பலாலி விமானபடைத்தளத்துக்கு ஏற்கனவே அத்துமீறி சுவீகரித்து ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை இனிமேல் கேள்விக்கு இடமின்றி  நிரந்தரமாகவே அவற்றை சூறையாடும் ஒரு கபட நடவடிக்கையாகத்தான் இதை பார்க்கமுடியும். பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமா என்பதே சந்தேகமாயுள்ள இத்தருணத்தில் காணிகளுக்கு நஸ்ட ஈடு என்ற போர்வையில் இராணுவத்தின் அடாவடி செயலை நியாப்படுத்தி சர்வதேசத்துக்கும் உலக நாணய நிதியத்துக்கும் காதில் பூசுற்றும் போலி விளையாட்டு இது.

ஏற்கனவே யாழ் விமான நிலையம் முழு அளவில் பாவனைக்கு எடுக்கப்படவில்லை. வாரத்துக்கு நான்கு நாட்கள் (திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி) சென்னையிலிருந்து அலையன்ஸ் விமானசேவையின் விமானம் ஒன்று மட்டும்  வந்துபோகிறது. இலங்கை விமான சேவையோ இந்த விமான நிலையத்தை  எட்டியும் பார்ப்பதில்லை.  இன்னிலையில் விமான நிலையம் விஸ்தீகரிக்கப்பட வேண்டும் என்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

போர்க்காலத்திலும் அதற்கு முன்னரும் பெரிய விமானங்கள் அதிகளவிலான பறப்புகளுடன் இதே விமான நிலையதினூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுவந்தது அனைவரும் அறிந்ததே. இந்த விமான நிலையத்தை இலங்கையின் இதர விமான நிலயங்களுடன் இணைத்து பறப்புகளை அதிகரிப்பதுதான் மிக அவசியமான முதற்கட்ட விஸ்திகரிப்பாக இருக்க முடியும்.

போருக்கு முன்னர் பல ஆண்டுகளாக சிறப்பான முறையில் பாவனையில் இருந்த பலாலி விமான நிலையத்தை இலங்கை இராணுவத்தின் விமானப்படை கையகப்படுத்தி தனக்கு நிரந்தர  விமானத்தளமாக வைத்துக்கொண்டு அதற்கு அருகாமையில் முற்றிலும் புதிய இடத்தில் தற்காலிக கொட்டகை ஒன்றையும் தொழில் நுட்பம் குறைந்த புதிய ஓடுபாதையையும் அமைத்து அதைத்தான் இப்போது சிவில் விமான சேவைக்கு விட்டிருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் அவசரமாக முன்னெடுக்கப்படும் இச் செயற்பாடு ஒரு தேர்தல் வியூகமாகவோ அல்லது  உலக நாணய நிதியத்தின் கடனுதவி, இனப்பிரச்சனைக்கான  தீர்வுத்திட்டம், இராணுவ விஸ்தரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புபட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

தமிழ் அரசியல்வாதிகள் இதுபற்றி துளியளவும் கரிசனை கொண்டதாக தெரியவில்லை.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் காணி சுவீகரிப்பு. நம்ம தலைவர்கள் குடுமிப்பிடி சண்டையில் அதிக கவனம் செலுத்துவதால் இதுகளுக்கெல்லாம் நேரமில்லை அவர்களுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.