Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் மீற்றர் வட்டி விவகாரம் : கடனாளிகளை அடித்து துன்புறுத்திய நபர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மீற்றர் வட்டி விவகாரம் : கடனாளிகளை அடித்து துன்புறுத்திய நபர் கைது

By NANTHINI

27 JAN, 2023 | 12:28 PM
image

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு, பணத்தை மீள வசூலிப்பதற்காக கடன் பெற்றவர்களை அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று (26) மாலை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

குறித்த நபர் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணியொன்றுக்கு அழைத்துவந்து, கொடூரமாக தாக்கி துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளி வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. 

தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. 

அதனை தொடர்ந்து மீற்றர் வட்டிக்கு பணத்தை வழங்கிவிட்டு,  பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்து துன்புறுத்தும் இருபதுக்கும் மேற்பட்ட காணொளிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அந்த காணொளிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) காரில் பயணித்தவரை வாகனத்தால் மோதி கொலைசெய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸாரிடம் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்றவர்களை அடித்து துன்புறுத்துகிற சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது. 

அத்துடன் அவர்கள் மருதனார்மடம் சந்தைக்கு அண்மையில் உள்ள தோட்டக்காணிக்கு கடன் பெற்றவர்களை அழைத்து, அங்கே பலரை அடித்து துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் வருவதாக கூறப்படுகிறது. 

இந்த கும்பலுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒரு பொலிஸ் அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதோடு,  பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்கச் செல்கிறபோதெல்லாம் அவர்களை அந்த அதிகாரி திருப்பி அனுப்பிவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த காணொளிகளில் இடம்பெற்றுள்ள துன்புறுத்தல் சம்பவங்கள் ஒன்றரை வருடத்துக்கு முன்பாக நடந்திருக்கின்றன. தற்போது அந்தக் குழுவுக்குள் முரண் ஏற்பட்டுள்ளதால், இது பற்றிய பல காணொளிகள் வெளியாகியுள்ளன. 

எனினும், துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவர்களால் எந்த முறைப்பாடும் பொலிஸில் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் காணொளியில் முகக்கவசம் அணிந்தபடி அடித்து துன்புறத்தும் நபரே யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார், இந்த துன்புறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/146815

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு  சமூக சீர்கேட்டுக்குபின்னால் இருப்பதும் சிங்கள கூலிப்படைகளே. இதை அழிக்க நம்ம தலைவர் வெளிக்கிட்டது முறையே. அதை விரும்பாதோர் கூடியழித்தனர் தம்மைக்காப்பாற்ற.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் வலிக்கின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

மீற்றர் வட்டிக்கு கொடுப்பதற்கு அவனிடம் பணம் எப்படி வந்தது என ஆராய்ந்தால் வரும் விஷயம். தகுதியற்றவரிடம் கடன், உதவி வாங்குவதும் தவறு, தகுதியற்றவர்களுக்கு கொடுப்பதும் தவறு. கண்டிப்பாக இவனது பின்னணி ஆராயப்படவேண்டும், அதற்கு யாராலும் முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.