Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதாபிமான அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள் ; இந்திய, இலங்கை அரசுகளிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள் ; இந்திய, இலங்கை அரசுகளிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை

By T. SARANYA

28 JAN, 2023 | 04:40 PM
image

(ஆர்.ராம்)

தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இந்திய, இலங்கை அரசுகள் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர் சங்க இராமநாதபுர மாவட்ட தலைவர் யேசுராசா தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கும் இடையில் எல்லைதாண்டி வந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள 17 படகுகள் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த வழக்கில் முன்னிலையாவதற்காக படகுகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக 10 பேர் கொண்ட தமிழக மீனவர்கள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்நிலையில், இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த படகுகளில் மூன்று அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. ஏனைய படகுகள் தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர்  குறித்த படகுகளை நம்பி தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுக்கும் மீனவக் குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன.

தற்போது கூட, இரண்டு இலட்சம் ரூபா செலவு செய்தே நீதிமன்றில் முன்னிலையாவதற்கு வருகை தந்திருக்கின்றார்கள். அத்துடன் இவர்களின் படகுகள் முதற்தடவையாகவே தெரிந்தோ தெரியாமலோ இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்துவிட்டன.

ஆகவே,  குறித்த படகுகளின் உரிமையாளர்களையும் அதனை நம்பி வாழ்வாதாரத்தினைக் கொண்டிருப்பவர்களையும் மனிதாபிமான ரீதியில் கருத்திற்கொண்டு சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டும் என நாம் இலங்கை அரசாங்கத்தினைக் கோருகின்றோம்.

அத்துடன்,  இந்திய, இலங்கை அரசாங்கங்கள் கூட்டிணைந்து இந்த விடயத்தில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும் கோருகின்றோம். அத்துடன், இந்தப் படகுகள் மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்காது என்றும் உறுதி அளிக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/146950

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.