Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை படிக்கும் சக்தி - சர்ச்சை சாமியாருக்கு சவால் விட்ட மூடநம்பிக்கை ஒழிப்பாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனதை படிக்கும் சக்தி - சர்ச்சை சாமியாருக்கு சவால் விட்ட மூடநம்பிக்கை ஒழிப்பாளர்

  • கீதா பாண்டே
  • பிபிசி
52 நிமிடங்களுக்கு முன்னர்
பாகேஷ்வர் தாம் சர்கார்

பட மூலாதாரம்,FB/BAGESHWARDHAMSARKAROFFICIAL

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவில் மதகுருக்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் சமீப நாட்களில் ஒரு சர்ச்சைக்குரிய சாமியார் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் பெயர் திரேந்திர கிருஷ்ண ஷாஸ்திரி. அவரை பாகேஷ்வர் தாம் சர்கார் என்ற பெயரில் அழைக்கின்றனர். அவரின் ஆதரவாளர்கள் அவருக்கு 'தெய்வீக சக்தி' உள்ளது என்றும் 'அவரால் நோயுற்றவர்களையும் பேய் பிடித்தவர்களையும் குணப்படுத்த முடியும்' என்றும் கூறுகின்றனர்.

மேலும் 'வியாபாரம் மற்றும் நிதி சிக்கலில் இருந்தும் பக்தர்களை அவர் விடுவிப்பார்' என்றும் கூறுகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் கோவிலின் முதன்மை பூசாரியான 26 வயது பாகேஷ்வர் தாம் சர்கார், வண்ணமயமான உடைகளை அணிந்து, 18ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவை ஆண்ட பேஷ்வா மன்னர்கள் அணிந்த தொப்பியை அணிகிறார்.

 

அதிகாரம் படைத்த அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் இவரை பின் தொடருவோர் பட்டியலில் உள்ளனர். இவர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்படுகிறார்.

சமீப வாரங்களில் இந்தியாவின் ஹிந்தி மொழி சேனல்கள் பல இந்த சாமியார் குறித்தும் அவருக்கு இருக்கும் 'சக்திகள்' குறித்தும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. மதமாற்றம், மாற்று மத திருமணங்கள் ஆகியவை குறித்து அவர் பேசியதை 'ப்ரேகிங் நியூஸாக' சேனல்கள் ஒளிபரப்பின.

சமூக வலைதளங்களில் அவரை பின் தொடருவோரின் எண்ணிக்கை சட்டென 75 லட்சத்துக்கும் மேல் அதிகரித்தது. முகநூலில் 34 லட்சம் பேரும், யூட்யூபில் 39 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சம் பேரும், டிவிட்டரில் 72 ஆயிரம் பேரும் அவரை பின் தொடருகின்றனர். அவரின் சில வீடியோக்கள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஜனவரி மாதம் ஷாஸ்திரி, தனக்கு பிறரை குணப்படுத்தும் சக்திகள் இருப்பதாகவும், மக்கள் மனங்களை படிக்கும் வல்லமை கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதை எதிர்த்து மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அமைப்பை நடத்தி வரும் ஷ்யாம் மானவ் கேள்வி எழுப்பியபோது ஷாஸ்திரி மேலும் பிரபலமடைந்தார்.

ஷ்யாம் மானவ், தான் தேர்வு செய்யும் 10 பேரின் மனதில் உள்ளதை சரியாக சொல்லிவிட்டால் 30 லட்சம் ரூபாய் தருவதாக சவால் விட்டார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஷாஸ்த்ரியை சந்தித்தபோது

பட மூலாதாரம்,FB/BAGESHWARDHAMSARKAROFFICIAL

 
படக்குறிப்பு,

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஷாஸ்த்ரியை சந்தித்தபோது

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் ஷாஸ்திரி முகாமிட்டபோது இந்த சவால் விடுக்கப்பட்டது. மானவும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்தான்.

சவாலை ஏற்காமல் ஷாஸ்திரி நகரை விட்டு ஓடிவிடுவார் என்று பலரும் கூறினர். அப்போதிலிருந்து பல்வேறு தொலைக்காட்சிகளில் நேர்காணல் அளித்துக் கொண்டிருக்கும் ஷாஸ்திரி தாம் எங்கும் ஓடப்போவது இல்லை என்றும் சவாலை ஏற்க தயாராக இருப்பதாகவும் ஆனால் மகாராஷ்டிராவில் சவாலை ஏற்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக அண்டை மாநிலமான சத்திஸ்கரில் தான் சவாலை சந்திக்க தயார் என்றும் அது இருவருக்கும் பொதுவான ஒரு இடம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் மகாராஷ்டிராவில் வைத்து தனக்கு அதீத சக்திகள் இருப்பதாக ஷாஸ்திரி கூறியதால் அங்கு வைத்துதான் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று மானவ் தெரிவித்தார்.

இந்த சர்ச்சை தொடங்கியதிலிருந்து மானவிற்கு அச்சுறுத்தல்கள் வருகிறது என்றும் அதனால் அவருக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு ஷாஸ்த்ரியும் தனக்கு அலைபேசி மூலமாக அச்சுறுத்தல்கள் வருவதாக காவல்துறையில் புகார் தெரிவித்தார்.

இந்த சர்ச்சையும் சேனல்களில் வெளியாகும் செய்திகளும் ஷாஸ்த்ரியை மேலும் பிரபலமாக்குகின்றன. அதில் ஒரு சேனலின் செய்தியாளர் மண்டியிட்டு, ஷாஸ்திரி நோயுற்றவர்களை குணமடைய செய்வார் மற்றும் மக்களின் மனதில் இருப்பதை சொல்வார் என்ற கூற்றுக்கு ஆதரவாக பேசுகிறார்.

மேஜிக் கலைஞரான சுஹானி ஷா பாகேஷ்வர் தாம் சர்காரின் கூற்றுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்

பட மூலாதாரம்,FB/SUHANISHAH

 
படக்குறிப்பு,

மேஜிக் கலைஞரான சுஹானி ஷா பாகேஷ்வர், சர்காரின் கூற்றுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்

பாகேஷ்வர் தாம் கோவிலின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்படும் வீடியோக்களில் ஆயிரக்கணக்கானோர் ஷாஸ்திரியின் உரையை கேட்க கூடியுள்ளனர். அதில் ஒரு வீடியோவில் '4 லட்சம் பேர் அங்கு கூடியிருப்பதாக' அவர் தெரிவிக்கிறார்.

மேடையில் தோன்றும் போது ஷாஸ்திரி சிரிக்கிறார், வசனங்களை பேசுகிறார், கேமராவுக்கு முன் கையை நீட்டி வேறு குரலில் பேசுகிறார்.

ஒரு கூட்டத்தில் வேஷ்டி அணிந்த ஒருவரை முகேஷ் என்ற பெயரில் அழைக்கிறார்.

அந்த நபர் மேடையில் தோன்றியதும், அவரிடம் பேசாமல் முகேஷையும் அவரின் குடும்பத்தையும் வருத்தும் பிரச்னைகளை ஒரு காகிதத்தில் எழுதுகிறார். அதை படித்த முகேஷ் அப்படியே அதை ஒப்புக் கொள்கிறார்.

மற்றொரு நிகழ்வில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனை கொண்ட தாயை அழைத்து அவருக்காக சில மந்திரங்களை எழுதுகிறார். "இதை தினமும் சொல்லுங்கள், இது உங்கள் மகனை குணமாக்கும். உங்கள் பணக்கஷ்டத்தை தீர்க்கும்" என்கிறார்.

இம்மாதிரியான செய்கைகள் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருகிறது. அதனால் அவருக்கு 'மூன்றாம் கண் இருப்பதாகவும் அதன்மூலம் அவர் இதயங்களுக்குள் நுழைய முடியும்' என்றும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஷாஸ்த்ரி மூட நம்பிக்கைகளை பரப்புவதாகவும், மலிவான தந்திரங்களைச் செய்து மக்களைக் கவர முயற்சிப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேஜிக் நிபுணர்கள் மற்றும் மனதை படிக்கும் நிபுணர்கள் சிலர், மனதைப் படிப்பது என்பது ஒரு கலை மட்டுமே அது எந்த தெய்வீக சக்தியாலும் ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பாகேஷ்வர் தாம் சர்கார்

பட மூலாதாரம்,FB/BAGESHWARDHAMSARKAROFFICIAL

"அவர் மனதை படிப்பார் என்று கூறும்போதும் அது ஏதோ ஒரு அதிசய சக்தி என்று கூற கூடாது, அது கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கலை. அது ஒரு தெய்வீக சக்தி என்று யாரானேனும் கூறினால் அது மூட நம்பிக்கை. அவர் பொய்யை பரப்புகிறார்," என தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார் சுஹானி, இவர் ஒரு மனதைப் படிக்கும் வல்லுநர்.

தான் மூட நம்பிக்கையைப் பரப்புவதாக தன்மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகவும் தான் அனைத்துவித பிரச்னைகளையும் தீர்த்துவிடுவேன் என்று கூறவில்லை என்றும் ஷாஸ்திரி தெரிவித்தார்.

சில இந்து மத தலைவர்களும் ஷாஸ்திரியின் சக்தி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவருக்கு அவ்வளவு சக்திகள் இருந்தால் ஜோஷிமத்தில் விரிசல் விடும் வீடுகளை காப்பாற்றற்றும் என்று இந்து மத தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஷாஸ்திரி அரசியல் ரீதியான சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இந்தியா ஒரு இந்து தேசம் என்று கூறி சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல ஒரு நபரை பார்த்து 'என்னை தொடாதே நீ ஒரு தீண்டத்தகாதவர்' என்று கடந்த வருடத்தில் ஷாஸ்திரி கூறும் வீடியோ ஒன்றும் வைரலானது.

ஆனால் பல வலது சாரி இந்து தலைவர்கள் ஷாஸ்த்ரிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்துக்கள் மதம் மாறுவதற்கு எதிராக அவர் பேசுவதால் அவர் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படுகிறார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

"யாரேனும் மதமாற்றம் குறித்துப் பேசினால்…அவர்கள் தவறாக குற்றம்சாட்டப்பட்டு தாக்கப்படுகின்றனர். பாகேஷ்வர் மகாராஜாவுக்கு எதிரான தாக்குதலுக்கு இதுதான் காரணம். அதனால்தான் நாங்கள் அவருக்கு உறுதுணையாக நிற்கிறோம்." என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கபில் மிஷ்ரா சமீபமாக டிவிட்டரில் தெரிவித்தார்.

ஷாஸ்திரி தன்னை அடிக்கடி 'பட்டிக்காடு' என்றும் 'படிக்காதவர்' என்றும் கூறி கொள்கிறார். கோவிலின் வலைதளத்தில் அவருக்கு மதம் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததாகவும், வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கோவிலுக்கு வந்ததாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள காடா என்ற கிராமத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் 1996ஆம் ஆண்டு பிறந்த ஷாஸ்த்ரி, குடும்பத்திற்கு வருமானம் ஈட்டப் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு ஷாஸ்திரி ஒரு வருட காலமாக காணாமல் போய்விட்டார் என அவருடன் பள்ளியில் படித்த நபர் ஒருவர் பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார். மேலும் அவர் திரும்பி வந்த பிறகே அரசியல் தலைவர்கள் மற்றும் பிற சக்திவாய்ந்த மனிதர்கள் அவரை பார்க்க கோவிலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"அதேபோல ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இன்று பத்துக்கு மேற்பட்ட கார்கள் ஷாஸ்த்ரியின் காரை பின் தொடர்ந்து செல்கின்றன. சில நேரங்களில் தனியார் விமானத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்.

https://www.bbc.com/tamil/india-64545084

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.