Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெல்லியில் அமைச்சர் உதயநிதி: முதல்வர் போல மரியாதை, 'பிஸி' ஆக நகரும் நிகழ்ச்சி - பிரதமரை நாளை சந்திக்க திட்டம் - என்ன பின்னணி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் அமைச்சர் உதயநிதி: முதல்வர் போல மரியாதை, 'பிஸி' ஆக நகரும் நிகழ்ச்சி - பிரதமரை நாளை சந்திக்க திட்டம் - என்ன பின்னணி?

உதயநிதி
6 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு மாநில அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சருக்கு தரப்படும் மரியாதை போல வரவேற்பும் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்ட மாநில அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு வருவது இது முதல் முறையாகும்.

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்தின் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் திங்கட்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் டெல்லி வந்துள்ளார்.

இதையொட்டி தமது பயணத்தை டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களுடனான அறிமுக நிகழ்வாகவும் பயன்படுத்திக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் தமது துறையுடன் தொடர்புடைய சில மத்திய அமைச்சர்களை சந்திக்க அவரது சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

 
தமிழ்நாடு இல்லம் ஏ.கே.எஸ். விஜயன்
 
படக்குறிப்பு,

டெல்லி விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் தமிழ்நாடு இல்ல டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்

இதில் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாகூர், ஸ்மிருதி இரானி ஆகியோர் முன்பே திட்டமிடப்பட்ட பல நிகழ்ச்சிகளில் திங்கட்கிழமை கலந்து கொண்டுள்ளனர். இதனால், உதயநிதிக்கு நேரம் ஒதுக்கித் தர இயலாத தங்களின் நிலை குறித்து மத்திய அமைச்சர்களின் செயலர்கள் உதயநிதி அலுவலகத்திடம் விளக்கியுள்ளனர்.

அதே சமயம், உதயநிதி பிரதமர் நரேந்திர மோதியை செவ்வாய்க்கிழமை மாலையில் சந்திக்க அவரது அலுவலகம் நேரம் ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. எனினும் இந்தத் தகவலை அமைச்சர் உதயநிதி அலுவலகமும் பிரதமர் அலுவலகமும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பிஸி ஆக நகர்ந்த முதல் நாள்

பிபிசி
 
படக்குறிப்பு,

டெல்லியில் அமைச்சர் உதயநிதியை சந்திக்கும் தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள்

இந்த நிலையில், தமிழக அமைச்சரின் முதல் நாள் பயணத்தை 'பிஸி' ஆக வைத்திருக்கும் வகையில், அவரை டெல்லியில் உள்ள தமிழ் சங்கம், டெல்லி முத்தமிழ் பேரவை, டெல்லி தமிழ் கல்விக் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் அடுத்தடுத்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவை எல்லாம் உதயநிதிக்கு வழங்கப்படும் கூடுதல் முக்கியத்துவம், மாநில அமைச்சரவையில் அவரை முதல்வருக்கு நிகரான அல்லது அதற்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கும் வகையில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி தமிழ் சங்கம்
 
படக்குறிப்பு,

டெல்லி தமிழ் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்தனர்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "உதயநிதி அமைச்சரான பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்ட அமலாக்கத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற அடிப்படையில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அத்துடன் திமுகவிலும் ஆட்சியிலும் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஆக உதயநிதியை திமுக தொண்டர்களும் அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்," என்கிறார்.

இதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளையும் குபேந்திரன் குறிப்பிடுகிறார்.

பிபிசி
 
படக்குறிப்பு,

டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் சத்யசுந்தரம் டெல்லி முத்தமிழ் பேரவை தலைவர் என்ற அடிப்படையில் தமது சங்க நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

"உதயநிதி அமைச்சரான பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு போன்றோர், தம்பியின் அமைச்சரவையில் நாங்களெல்லாம் பணியாற்ற விரும்புகிறோம் என பேசியிருப்பதை கவனிக்க வேண்டும். எனவே உயர் பதவியில் உதயநிதியை தயார்படுத்துவதற்கு அனைத்து காய்களும் நகர்த்தப்படுகின்றன," என்கிறார் குபேந்திரன்.

உதயநிதியை பிரதமர் நரேந்திர மோதி சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக பேசப்படுவது குறித்து அவரிடம் கேட்டோம்.

"தமிழ்நாட்டில் இருந்து செல்லும் தனிப்பட்ட அமைச்சரை பிரதமர் சந்திக்க வாய்ப்பில்லாமல் போகலாம். ஆனால், அமைச்சர் உதயநிதி அப்படி கிடையாது. அவருக்கு ஸ்டாலினின் மகன், கருணாநிதியின் பேரன் என்ற பின்புலம் இருக்கிறது. அந்த வகையில் முதல் முறையாக அமைச்சரான பிறகு நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்காக அவர் பிரதமரை சந்திப்பதில் தவறு கிடையாது. அவருக்கு நேரம் ஒதுக்கி பிரதமரும் அவரை அங்கீகரித்திருப்பதாகவே பார்க்கிறேன்," என்கிறார் குபேந்திரன்.

அசாதாரண சந்திப்பு

இதைத்தொடர்ந்து, டெல்லியில் பணியாற்றி வரும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த மத்திய குடிமைப்பணி குரூப் 1 அதிகாரிகள் அமைச்சர் உதயநிதியை திங்கட்கிழமை மாலையில் சந்தித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதுதான் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக தமிழகத்தில் இருந்து மாநில அமைச்சர்கள் டெல்லிக்கு அரசுமுறை பயணமாக வந்தால் அவர்களை டெல்லியில் உள்ள தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவாக சந்திப்பது கிடையாது. மாநில முதல்வர் வந்தால் மட்டுமே அத்தகைய பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படும்.

ஆனால், முதல் முறையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு சைரன் போலீஸ் வாகன பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது நிகழ்ச்சிகளை செய்தித்துறை அலுவலர்கள் மிக நெருக்கமாக கவனித்து ஊடகங்களிடம் தகவல் பரிமாறினர்.

முதல்வர் டெல்லிக்கு வரும்போது அவருக்கு டெல்லிவாழ் தமிழர்கள் விமான நிலையத்திலேயே, தமிழக பாரம்பரிய இசை கலைஞர்களின் நடனத்துடனும், மேள தாளத்துடனும் மரியாதை கொடுப்பர். அது உதயநிதிக்கு வழங்கப்படவில்லை. ஆனால், டெல்லி சிறப்புப் பிரதிநிதி நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றுள்ளார். அவருடன் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்ல அதிகாரிகள் குழுவும் சென்றிருந்தது.

முன்னதாக விமான நிலையத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று வரவேற்று தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்கு அழைத்து வந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cglj3p97vmgo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீட் விலக்கு: "பிரதமர் மோதியிடம் தமிழக மாணவர்களின் மனநிலையை விளக்கினேன்" - அமைச்சர் உதயநிதி பேட்டி

பிரதமர் மோதி
 
படக்குறிப்பு,

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை இன்று மாலையில் சந்தித்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நீட் விலக்கு மசோதா தொடர்பான தமிழக மாணவர்களின் மனநிலையை விளக்கியதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அமைச்சர் உதயநிதி. அதன் விவரம்:

"கடந்த முறை சென்னைக்கு வந்தபோது, டெல்லி வந்தால் தன்னை சந்தித்து விட்டுப் போகும்படி பிரதமர் கூறியிருந்தார். அதன்படி இப்போது அவரை சந்தித்தேன்.

பிரதமரின் தாயாரின் மறைவுக்கு அவரிடம் இரங்கல் தெரிவித்தேன். தமிழ்நாடு முதல்வரின் உடல்நிலை எப்படி உள்ளது என்று பிரதமர் கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் விளையாட்டுத் திட்டங்கள் குறித்து பிரதமர் கேட்டார். ரூ. 25 கோடி மதிப்பிலான முதலமைச்சர் கோப்பைக்கான 15 விதமான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருவதாக பிரதமரிடம் கூறினேன்.

உதயநிதி ஸ்டாலின்
 
படக்குறிப்பு,

டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அடுத்தமுறை கேலோ இந்தியா நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு வழங்குங்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தின் கிளையை சென்னையில் நிறுவுங்கள் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிரதமரிடம் பேசியபோது, அவர் சில விளக்கங்களை கொடுத்தார். அவரிடம், 'தமிழ்நாட்டு மக்களின் மனநிலை இதுதான். அதை தெரிவிக்க வேண்டியது எனது கடமை' என்றேன். இந்த விஷயத்தில் திமுகவின் சட்டப்போராட்டம் தொடரும் என்று அவரிடம் கூறினேன்" என்றார் உதயநிதி.

இதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பியபோது, மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு ரூ. 12.35 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ள மத்திய அரசின் செயல்பாடு குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு உதயநிதி, "இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கியது ஒன்றிய அரசு, அடிக்கல் நாட்டியது ஒன்றிய பிரதமர். இதை மக்களிடம் சொன்னது மட்டுமே நான். இது பற்றி நான் பிரதமரிடம் பேசவில்லை. தகவல் உரிமை சட்டத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நான் எதுவும் பேசவில்லை," என்றார்.

"அரசியல் குறித்தோ கூட்டணி குறித்தோ நான் எதுவும் பேசவில்லை," என்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் உதயநிதி தெரிவித்தார்.

பிரதமரிடம் பேசியபோது, தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டரங்கு அமைக்கும் தமிழக அரசின் முன்மொழிவு குறித்து கூறியதாகவும் அதை எப்படி பராமரிப்பீர்கள் என்று பிரதமர் தன்னிடம் கேட்டதாகவும் உதயநிதி தெரிவித்தார்.

அந்த விளையாட்டரங்குகளை அரசே பார்த்துக் கொள்ளுமா தனியார் பராமரிக்குமா என்று பிரதமர் கேட்டபோது அது குறித்து தாம் விளக்கியதாக உதயநிதி குறிப்பிட்டார்.

இதையடுத்து தாம் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் உதயநிதி கூறினார்.

பேனா சின்னம் கேள்வியை தவிர்த்த அமைச்சர்

அமைச்சர்
 
படக்குறிப்பு,

டெல்லியில் மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தபோது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் திட்டங்கள் குறித்து மாநில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விவாதித்தார்.

மக்கள் பிரச்னைகள் பல தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், கடலுக்குள் பேனா சின்னம் அமைப்பது அவசியமா என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் உதயநிதி, "அது அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு" என்று மட்டும் பதிலளித்தார்.

பிறகு அதே செய்தியாளர், தமிழ்நாட்டில் பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், கடலுக்குள் பேனா சிலை அமைப்பதை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டம் நடத்துவது பற்றி மீண்டும் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு பதிலளிப்பதை உதயநிதி தவிர்த்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

முன்னதாக, இன்று காலையில் இந்திய கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வளர்ச்சித்திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், திறன் மேம்பாடு திட்டங்கள் மற்றும் பயிற்சிகள், மகளிர் சுய உதவிக்குழு திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் அமைச்சர் உதயநிதி விவாதித்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, ஐஏஎஸ், தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவன மேலாண் இயக்குநர் திவ்யதர்ஷிணி, ஐஏஎஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை காலையில் டெல்லி வந்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டெல்லிவாழ் தமிழ் சங்க நிர்வாகிகள், முத்தமிழ் பேரவை நிர்வாகிகள், டெல்லி தமிழ் கல்விக்கழக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

அதைத்தொடர்ந்து மாலையில் அவரை டெல்லியில் பணியாற்றி வரும் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்ற பிறகு டெல்லிக்கு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் வந்திருப்பதால் அவரது தலைநகர் வருகை அரசியல் தளத்தில் பரவலாக கவனிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c3gz25n9d9vo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.