Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குண்டுமழைக்கும் மத்தியில் வவுனியாவில் பிழைத்தவன்- வைகோ

Featured Replies

எதற்கும் அஞ்சேன் என்கிறார் வை.கோ

குண்டுமழை பொழிந்து கொண்டிருந்த இலங்கையின் வவுனியா காட்டுப் பகுதியிலேயே உயிர் பிழைத்த நான், எதற்கும் அஞ்சப் போவதில்லை என தனது வழமையான கோபவேசத்துடன் உரை நிகழ்த்தியிருக்கின்றார் ம.தி.மு.கவின் பொதுச் செயலர் வைகோ.

விருதுநகரில் புதனன்று இடம பெற்ற ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய வேளையே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்ததுகையில் :-

விருதுநகரில் நடக்கும் இச்செயல் வீரர்கள் கூட்டத்திற்கு புது உத்வேகத்தோடு வந்துள்ளீர்கள். இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கான காரணத்தை மாவட்டச் செயலரும், சிவகாசி எம்.பியும் என்னிடம் தெரிவித்தபோது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வந்ததால் தான் இவ்வளவு கூட்டம் என்றார்கள்.

மற்றோருவர் மதுரைக்கு வந்தபோது ஏற்பட்ட பதற்றம் தான் இக் கூட்டத்திற்குக் காரணம் என்றார். அது எப்படியிருந்தாலும், வைகோ மீது வைத்துள்ள பாசத்தால் பற்றால் நீங்கள் இங்கு வந்தமை கண்டு எனக்கு மகிழ்ச்சி. நான் தொண்டர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. ஆகையால், அதுவரை இயற்கை என்னை உயிர்வாழ அனுமதிக்கும்.

இலங்கையின் வடக்கே வவுனியா காடுகளில் சிதறும் பொழியும் குண்டுகளுக்கும் மத்தியில் உயிர் பிழைத்தவன் நான். அப்போது என்னுடன் இருந்த புலி வீரன் கூறினான். 'உங்களுக்கு ஆயுள் கெட்டி" என்று. ம.தி.மு.க எதற்காக உருவாக்கப்பட்;டதோ, அதை நிறைவேற்றும் காலம் வரும் வரை என்னை இயற்கை அன்னை அழைக்கமாட்டார்.

தமிழர்களின் உரிமைகளைக் காக்க உயிர்களைக்காக்க அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கத்தின் வழித்தோன்றல் தான் ம.தி.மு.க இதை அழிக்க இரண்டு மக்களவை உறுப்பினர்கள் மூலம் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார் முதல்வர்.

அதன் பின்னர், கூட்டப்பட்ட தி.மு.க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ம.தி.மு.கவில் இருந்து வருபவர்களுக்கு அனுபவம் பார்க்காது தகுதியும் வாய்ப்பும் தரப்படும் என்றும் கூறினார்.

அதன் பின் கூட்டப்பட்ட ம.தி.மு.க பொதுக் குழுவில் ஆயிரத்து 400 உறுப்பினர்களில் ஆயிரத்து 327 பேர் கலந்து கொண்டு தங்களின் விசுவாசத்தைக் காட்டினர். டாக்டர்.கிருஸ்ணன் எம்.பி., சிப்பிப்பாரை ரவிச்சந்தரன் எம்.பி. ஆகியோரை விலை கொடுத்து வாங்க முயற்சித்தனர். எனினும் அது கைகூடவில்லை.

ம.தி.மு.க - அ.தி.மு.க. கூட்டடணி அருமையாக உள்ளது. வெகு விரைவில் மத்திய அரசு கவிழும். மறுபடியும் மறுமலர்ச்சி உதயமாகும். அடுத்து மதுரையில் நடைபெறும் மண்டல மாநாட்டிற்கு உங்களை அழைக்கிறேன். கட்டுக்கோப்பான நம் இயக்கத்தை ஒருவராலும் அசைக்க முடியாது. என்றார்.

நன்றி : சுடர் ஒளி

வைகோ ஆதரவாளர்களுக்கு இது சமர்ப்பணம்.

ஜனா

வை.கோ விற்கு ஈழத் தமிழர்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்கள். கருணாநிதி, ஜெயலலிதா, சுப்பிரமணியம்சுவாமி, சோ போன்ற சுயநலவாதிகள், தமிழீழ எதிர்ப்பாளர்கள் முன்னால் வை.கோ தனியான ஒரு ஆலமரமாக நின்று ஈழத்தமிழர்களிற்கு நிழல் கொடுத்து வருகின்றார்.

வை.கோ வின் கை தமிழ்நாட்டில் ஓங்கி அவர்வசம் விரைவில் அதிகாரமும் சென்றடைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வை. கோ வை மாறி மாறி அ.தி.மு.க, தி.மு.க பழிவாங்குவதால் தான் இவர் அடிக்கடி கட்சி மாறுகின்றார் என நினைக்கிறேன்.எது எப்படி இருப்பினும் ஈழ தமிழர்கட்காக எப்போதும் குரல் கொடுப்பவர்,கொடுப்பார் என்று நம்புவோமாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.