Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழிணையம் 25 ஆவது அகவை

Featured Replies

மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு  இன்று (30.03.2023)  யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது.

முதலாவது கருத்துக்களம் பாமினி எழுத்துருவில் அமைந்திருந்தது.  அதனால் பாமினி எழுத்துருவில் பரிச்சயமானவர்கள் மட்டுமே கருத்தாடலில் ஈடுபடக்கூடியதாக இருந்தது. எனினும் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களின் நீண்ட கடும் முயற்சியின் பயனாக 2003ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் நாள்  ஒருங்குறி எழுத்துருவிலமைந்த இரண்டாவது கருத்துக்களம் திறக்கப்பட்டது.  இந்த இரண்டாவது களத்தினை உருவாக்க அக்காலகட்டத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரின் ஒத்துழைப்பு கூடியவரை பிழைகளைத் தவிர்க்கவும், பிரிவுகளை செம்மையாக்கவும், களவிதிகளை மேம்படுத்தவும்  உதவியது.  கருத்துக்களத்தில் மட்டுறுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் மொழியில் பண்புடன் விவாதிக்கும் கலாச்சாரம் இணையத்தில் உருவாக்கப்பட்டது. 

பின்னர் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தற்போதைய யாழ் இணையம், இயங்குதளம், தரவுத் தளம், கருத்துக்கள மென்பொருள், முகப்பு மென்பொருள் என பல்வேறு சிக்கலான அடுக்குகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு அடிக்கடி மேம்படுத்தப்படுகின்றது.  எதுவித வர்த்தக நோக்கங்களும் இன்றி முற்றிலும் சேவை நோக்கைக் கொண்டே யாழ் இணையம் தொடர்ந்தும் இயங்கிவருகின்றது.

யாழ் இணையம் ஆரம்பித்த நாள் தொட்டே பல்வேறு தரப்பினரையும் தன் வசம் ஈர்த்துக்கொண்டு தனக்கே உரிய தனித்துவத்துடன் வளர்ச்சி கொண்டது. இணையத்தில் நீண்ட பல காலம் தொடர்ந்து இயங்குகின்ற இணையத்தளங்களில் யாழ் இணையமும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் மொழியில் மாத்திரம் எழுதிப் பலர் பங்குகொண்டு ஆக்கபூர்வமான கருத்தாடல்களில் ஈடுபடக்கூடிய தமிழ் இணையத்தளம் யாழ் இணையம் ஒன்றே. 

யாழ் கருத்துக்களம் உலகில் பல மூலைகளிலும் வாழும் தமிழர் இணையம் மூலம் கைகோர்க்கும் இடம். எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமிக்கிற இடமும் இதுதான். மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்களும் கூடுகிற இடமும் இதுதான். நம்பிக்கையோடு கதை, கவிதை என படைப்பாக்கங்களை எழுதப் பழகுகிற பயிற்சிக் கூடமும் இதுதான். தமிழில் மூர்க்கமாக விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், செல்லமாகச் சண்டைகள் போடவும், ஊடல் கொள்ளவும், தேடல் கொள்ளவும், பாடல் போடவும், கவிதை படிக்கவும் ஒரு இடம் உண்டென்றால் - அது யாழ் கருத்துக்களம் தான்.

இதற்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் துணைநிற்பதோடு அதுசார்ந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. தமிழ்த் தேசியச் சிந்தனையை வலுப்படுத்தி, தமிழர்களின் வரலாற்றைத் திரிபுகள் இன்றி அடுத்த அடுத்த சந்ததிகளுக்கும் பரவச் செய்து, தமிழர்களை நமது தாயகத்தில் தலைநிமிர்ந்து பெருமையுடன் வாழ வைக்கவேண்டியதற்கான வேலைகளைச் செய்வதற்குத் தொடர்ந்தும் துணைபுரிகின்றது.  அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட மக்களின் குரலாகவும், கருத்துச்சுதந்திரம், அனைவருக்கும் சமத்துவம், சமவுரிமை, மனிதநேயம், சுரண்டல்கள் அற்ற சமூகம் என்ற முற்போக்கு சிந்தனைகளை முன்னகர்த்தும் கருத்துக்களை விதைக்கும் இடமாகவும், யாழ் இணையம் இருக்க விளைகின்றது.  அந்த வகையில் யாழ் கருத்துக்களம் தரமானதும், சமூகத்திற்குத் தேவையானதும், பண்பானதுமான கருத்தாடல்களையே தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது.

போர் முற்றுப்பெற்ற 2009 இன் பின்னர், யாழ் கள உறுப்பினர்களின் பங்களிப்புடன் போரினால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற தாயக மக்களுக்கு சிறு துளியான உதவிகளையும் புரிந்தது. எனினும் இத்தகைய உதவிகளை தாயகத்தில் தொடர்ந்தும் செயற்படுத்த முடியாத நிலையினால் இவை இடைநிறுத்தப்பட்டன.

கடந்த சில வருடங்களாக உலகம் கோவிட்-19, உக்கிரேன் மீதான ரஷ்யாவின் யுத்தம், பாரிய பொருளாதார வீழ்ச்சி எனப் பல நெருக்குவாரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நெருக்கடி மிகுந்த உலகில், போலிச் செய்திகளும், சதிக்கோட்பாட்டை பரப்பும் தகவல்களும் பரவலாகவே பரவி சாதாரண மக்களை குழப்பத்திற்குள் உள்ளாக்குகின்றன. தவறான கருத்தியல்களைத் திணிக்கின்றன. யாழ் கருத்துக்களம் மூலமாகவும் நம்பகத்தன்மையற்ற தகவல்களை இடையிடையே ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ பரப்ப முயற்சிக்கின்றபோதிலும், அவை அவதானிக்கப்பட்டு நீக்கப்படுகின்றன. யாழ் களம் தொடர்ந்தும் நம்பகத்தன்மையான செய்திகளையும், தகவல்களையும் பகிரும் இடமாகவே இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளது.

யாழ் இணையம் என்கிற இந்த மிகச் சிறப்பான இணையத்தளத்தை உருவாக்கி, அதை நெறிப்படுத்தி வந்த மென்பொருள் சிற்பி மோகன் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல், எவருடைய பணஉதவியும் இல்லாமல், தனது பணத்தை செலவிட்டு, தனது குடும்பம், வேலை, பிற வேலைகள் என பலவற்றுக்கு மத்தியிலும், நேர நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் இந்தத் தளத்தை கடந்த வருட நடுப்பகுதி வரை நிர்வகித்தார். யாழ் இணையத்தை மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்தும் புதுப்பித்து, உலகத் தமிழரின் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் விளங்க தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு யாழ் இணைய நிர்வாகத்தினரினதும், உறுப்பினர்களினதும் நன்றிகள் என்றென்றும் இருக்கும்.

 


 "நாமார்க்கும் குடியல்லோம்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.