Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் தாக்கங்களும் இப்படியான சமூக சீர்கேடுகள் ஏற்பட காரணம். முன்பெல்லாம் கணவன் வேலைக்கு போக மனைவி வீட்டிலிருந்து பிள்ளைகளை கண்ணுங்கருத்துமாக ஒழுக்கமாக கல்வியில் சிறந்து விளங்க நல்லது கெட்டதுகளை சொல்லிக்கொடுத்து உதவினார், உறவுகள் பெரியோர் பக்க பலமாக இருந்தனர். இப்போ தலைவன், உறவுகளை இழந்து, வீட்டுத்தலைவியே சகல வேலைகளையும் தனியே செய்ய வேண்டிய நிலை, உதவிக்கு வரும் ஆண்களும் அவரின் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதும் வழமையாகி விட்டது. இந்தக்கொடுமைகளை அனுபவிக்கும் குழந்தைகள் வருங்காலத்தில் வாழ்க்கையில் பிடிப்பற்றவர்களாக, வெறுப்புற்றவர்களாக, பின்வாங்குபவர்களாகவோ, வன்முறை கொண்டவர்களாகவோ வளர வாய்ப்புண்டு. நமது அரசியற்தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இவ்வாறு தாக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு உதவலாம் ஆனால் அவர்கள் தங்கள் பதவிகளை தக்க வைப்பதிலேயே காலத்தை கடத்துகிறார்கள்.     

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

நமது அரசியற்தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இவ்வாறு தாக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு உதவலாம் ஆனால் அவர்கள் தங்கள் பதவிகளை தக்க வைப்பதிலேயே காலத்தை கடத்துகிறார்கள்.     

நல்ல மனிதர்களும், நல்ல குமுகாயமும், நல்ல சூழலும் அமைந்துவிட்டால் அவர்களது அரசியலை எதைவைத்து நகர்த்துவது. எனவே அரசியல்வாதிகள் குமுகாய உட்கட்டுமானத்தின் தளம்பலைப் பெரிதாக எடுத்து நடவடிக்கைகளில் இறங்கமாட்டார்கள்.  அவர்களுக்கும் அரசுக்கும் மக்கள் எப்போதும் அல்லாடிக்கொண்டு ஒரு அரைகுறை வளத்தோடும், பிரச்சினைகளோடும் வாழ்தலே வாய்ப்பானது என்ற தெளிவோடு நடப்பவர்கள். எந்தத் தமிழ் அரசியற் கட்சியிடமாவது இறுதிக்கட்ட இன அழிப்புக் கொடுமைகளின் பதிவுகளோ, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களது தகவற்றிரட்டோ இருக்கிறதா? கிராமசபை முதல் மாகாணசபை வரை ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்தவர்களால் இதைக்கூடச் செய்யமுயவில்லை என்பதே சிங்களத்துக்கு செம்புதூக்கும் அரசியலே. நாடாளுமன்ற மேசைகளை உரையாற்றி உடைப்பது வெறும் பாசாங்கு மட்டுமே. இன்றிருக்கும் எந்தவொரு அரசியற்கட்சியாலும் ஒருபயனும் இல்லை. இன்னும் கால்நூற்றாண்டு கடக்கும்போது பெருமளவான தமிழர் பகுதிகள் அரைச்சிங்களமயமாகிவிடும் சூழலே தென்படுகிறது.  குமுகாயக் குற்றங்கள் மலிந்தவிடும் நாடாக இலங்கைத்தீவு மாறி நீண்டநாட்களாவிட்டதோடு, இன்று தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள வெளிநாட்டு மோகமும்(குறிப்பு: இதைவைத்து என்னிடம் கேட்கவேண்டாம். நீரென்ன தாயகத்திலா இருந்து எழுதுகிறீர் என்று என்பதையும் அறியத்தருகின்றேன்) ஒரு கரணியமாகிக் குமுகாயச் சிந்தனை மலினமாகிவிட்டது போன்றனவும், எமதினம் பலவீனமாவதற்கு அடிப்படையாக உள்ளன.

எடுத்துக்காட்டிற்காக.... அண்மையில் அறிந்த ஒரு விடயத்தை தொடர்கின்றேன்.

                           திருமணமான ஒரு பெண்மணி ஒருகோடி செலவுசெய்து ஸ்கண்டினேவியன் நாடொன்றில் தஞ்சம். அவரைக்கூப்பிட இவ இனிச்சில சட்டவரம்புகளைக் கடக்கவேண்டும். எவளவு காலமென்று தெரியாது. இதனிடையே அந்தப்பெண்மணிக்கு வருத்தம் வேறாம்.  கணவரோ அங்கே. அவர் ஆட்டோ ஓடுவதும் தண்ணியடிப்பதும் பொழுதுபோக்குவதுமாக இருக்கிறார். எமது குடும்பங்கள் இந்தநிலைக்கு எப்படி எத்தனித்தன என்பதே பெரும் வினா? இது ஒரு தெரிந்த சீரழிவு. இப்படி எத்தனை இருக்கிறதோ?

இங்கே குறைந்தபட்சம்  குமுகாய ஆர்வலர்கள், கல்விமான்கள், உளவியலாளர்கள், ஊடகத்துறையினர் என இணைந்து பரந்துபட்ட கருத்தியல் தளத்தை உருவாக்கி குமுகாய விழிப்புணர்வையும், பாலியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதோடு, பெற்றோரை இழந்தோ, பிரிந்தோ வாழும் குழந்தைகளை கிராமிய, நகரக் கட்டமைப்புகள் சிறுவர் காப்பு வலையமைப்பை நிறுவித்  தரவுநிரலாக்கம் செய்து வாரமொரு தடவையாவது அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி உரையாடி அவர்களது நிலையை அறியவும் உதவவும் முன்வருவார்களாயின் 90வீதக் கொடுமைகளைத் தடுக்கலாம். இது தனியொருவரால் முடியாது. ஒட்டுமொத்த குமுகாயமும் மாந்த நேயத்தோடு குழந்தைகளை நோக்கும்போது மட்டுமே சாத்தியமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.