Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் கடந்து இந்தியாவின் தனுஷ்கோடி அருகே தஞ்சம் அடைந்த இலங்கை புறா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: T. SARANYA

20 APR, 2023 | 03:48 PM
image

யாழ்பாணம் வல்வெட்டித்துறையில்  நடைபெற்ற புறா பந்தயத்தில் கலந்து கொண்ட புறா வழி மாறி தனுஷ்கோடி சென்றதாக  பாதுகாப்பு துறை வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் உள்ள நகரைச் சேர்ந்த அரச குமார் கடந்த 16 ஆம் திகதி தனுஷ்கோடியிலிருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.

VideoCapture_20230420-132125.jpg

தனுஷ்கோடியில் இருந்து ஏழு நாட்டிக்கள் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காலில் பிளாஸ்டிக் கட்டிய புறா ஒன்று அவரது நாட்டுப்படகில் தஞ்சமடைந்துள்ளது.

புறா காலில் கட்டியிருந்த பிளாஸ்டிக்கில் சில எண்கள் குறிப்பிட்டபட்டிருந்தததுடன் ஆங்கிலத்தில் எழுதி இருந்ததால் அச்சம்மடைந்த அரசகுமார் அந்த புறாவை ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

இதையடுத்து அந்த புறாவின் காலில் உள்ள பிளாஸ்டிக்கில் இலங்கை தொலைபேசி எண் இருந்ததால் அந்த எண்ணிற்கு மாநில உளவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது அந்த புறா  இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை  சேர்ந்த சுதன் என்பவருக்கு சொந்தமானது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

VideoCapture_20230420-132157.jpg

உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சுதனிடம் நடத்திய விசாரணையில்  தமிழ் புத்தாண்டு ஒட்டி கடந்த 15ஆம் திகதி மாலை யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் புறா பந்தயம் நடத்தப்பட்டதாகவும், இந்த பந்தயத்தில் சுதனிற்கு சொந்தமான 28 பந்தய  புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டதாகவும், அதில் 20 புறாக்கள் மட்டும் திரும்பிய நிலையில் எட்டு புறாக்கள் காணாமல் போனதாகவும் சுதன்  தெரிவித்துள்ளார்.

அரசகுமார் ஒப்படைத்த புறா சுதன் உடையாதா என உறுதிப்படுத்த உளவுத்துறை அதிகாரிகள்  புறாவை  போட்டோ எடுத்து வட்ஸ்அப்பில் சுதனுக்கு அனுப்பினர். புகைப்படத்தை பார்த்த சுதன் பந்தயத்தில் காணாமல் போன எட்டு புறாக்களில் இதுவும் ஒன்று என உறுதி செய்தார்.

இதையடுத்து ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மருதுபாண்டியர் நகரில் வசித்து வரும் ரகு என்பவர் தனது வீட்டில் புறா வளர்த்து வருவதால் அந்த புறா கூண்டில் இந்த புறாவையும் வைத்து வளர்க்கும் படி பொலிஸார் அவரிடம் ஒப்படைத்தனர்.

VideoCapture_20230420-132142.jpg

இந்த புறா, 'ஹோமர்' இனத்தை சேர்ந்த பந்தய புறா எனவும் தொடர்ந்து 300 கிலோ மீற்றர் தூரம் பறக்க கூடிய ஆற்றல் உடையது என்பதால் யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் இருந்து தனுஷ்கோடி வரை பறந்து வந்துள்ளதாகவும், இந்த புறா மீண்டும் தனது சொந்த இடத்திற்கு திரும்பி செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/153337

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டிகளை தடைசெய்ய முடியாத? பாவம் இந்த புறாக்கள், மனிதனின் எண்ணத்திற்கேற்ப கறனமடிக்க வேண்டியுள்ளது, நானும் சிறுவயிதில் இவற்றின் பெறுமதி தெரியாமல் விளையாடியுள்ளேன், இப்ப நினைக்கவே சங்கடமாக இருக்கு, அதனால் கடந்த 4 வருடங்களுக்கு மேல் அதற்கு பரிகாரம் செய்கின்றேன் இங்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.