Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பிரதமர் தலைமையில் இடம்பெற்ற உலக பௌத்தர்கள் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: T. SARANYA

21 APR, 2023 | 04:30 PM
image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  உலக பௌத்த மாநாட்டினை 2023 ஏப்ரல் 20ஆம் திகதி புது டில்லியில் ஆரம்பித்துவைத்தார். 2023 ஏப்ரல் 20-21 ஆகிய திகதிகளில் நடைபெறும் இம்மாநாட்டினை சர்வதேச பௌத்த சம்மேளனத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் ஒழுங்கமைத்துள்ளது. 

“சமகால சவால்களுக்கான பதில்கள்: தத்துவம் முதல் செயன்முறைகள் வரையில்” என்ற தொனிப்பொருளில்  இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உலகளாவிய பௌத்த தம்ம தலைமைத்துவத்தினையும் புலமையாளர்களையும், பௌத்த விவகாரங்கள் மற்றும்  பிரபஞ்ச ரீதியான கரிசனைகள் குறித்த விடயங்களில் ஈடுபடுத்தி அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு கொள்கை ரீதியிலான முடிவுகளை  ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கான முயற்சியாகவே இந்த மாநாடு அமைகின்றது. 

இலங்கையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட உலகளாவிய பௌத்த சங்கங்களின் தலைவர்கள், தம்ம செயற்பட்டாளர்கள் மற்றும் நிபுணர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். 

இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உருவம் கடந்த உணர்வே புத்தபெருமான் எனக் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் ஆரம்ப விழாவிற்கு உலகின் பல திசைகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையானோர் வருகைதந்திருப்பது மனிதத்தை ஓரிழையில் பிணைக்கும் பௌத்தத்தின் விரிவாக்கத்தை பிரதிபலிக்கின்றதென பிரதமர் இங்கு குறிப்பிட்டார். 

பௌத்த போதனைகளின் சமகால பொருத்தப்பாட்டினை சுட்டிக்காட்டிய பிரதமர், நவீன காலப் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகளுக்காக புத்தபெருமானின் புராதன போதனைகளைச் சார்ந்து நிற்கின்றன என்பதையும் வலியுறுத்தினார்.

புத்த பெருமானின் போதனைகளை பரவலடையச் செய்வதற்காக இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.  

இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள பௌத்த வளாகங்கள், சர்ணாத் மற்றும் குசிநகர் ஆகியவற்றின் புனரமைப்பு, குஷிநகர் சர்வதேச விமான நிலையம், மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் ஒன்றிணைவுடன் லும்பினியில் உருவாக்கிய பௌத்த மரபுரிமை மற்றும் கலாசாரத்துக்கான சர்வதேச இந்திய நிலையம் ஆகியவை தொடர்பாகவும் பிரதமர்  இங்கு குறிப்பிட்டிருந்தார். 

இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுநிறைவு கொண்டாடப்படும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது எனக் குறிப்பிட்ட பிரதமர், உலக நன்மைக்கான புதிய தீர்மானங்கள் மற்றும் தனது எதிர்காலம் குறித்து இந்தியா பாரிய இலக்கொன்றினைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் சமீபத்தில் பல்வேறு துறைகளில் உலகளவில் இந்தியா பெற்றிருக்கும் சாதனைகளுக்கான அகத்தூண்டுதலாக புத்தபெருமான் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சகல நாடுகளினதும் முயற்சிகளுக்கான வினைத்திறன் மிக்க தளமொன்றினை இந்த உலக பௌத்த மாநாடு உருவாக்கும் என்ற நம்பிக்கையினையும் பிரதமர் இங்கு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/153417

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

அத்துடன் சமீபத்தில் பல்வேறு துறைகளில் உலகளவில் இந்தியா பெற்றிருக்கும் சாதனைகளுக்கான அகத்தூண்டுதலாக புத்தபெருமான் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சகல நாடுகளினதும் முயற்சிகளுக்கான வினைத்திறன் மிக்க தளமொன்றினை இந்த உலக பௌத்த மாநாடு உருவாக்கும் என்ற நம்பிக்கையினையும் பிரதமர் இங்கு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


கிந்தியா தலைமை தாங்கிய ஈழத்தினாளரின் ஆயுத வழியிலான  இனவழிப்பும் அதில் உச்ச சாதனை. 

மிலிந்த மொறகொட  சொல்லிய விபீடணன் வழிபட புத்த விகாரை ஒன்று இலங்கையின் தென்பகுதியில் உள்ளது என்ற பொய்யை கேட்டு கேள்வி இன்றி ஏற்றுக்  கொண்ட ஹிந்தியா (சிங்கள) பௌத்தத்தை கொண்டு இலங்கைத் தமிழரின் கட்டமைப்பு இனவழிப்பை கனகச்சிதமாக விரைவாக முடிக்கவும் இது தலமாக அமையும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.