Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்கும் கோரிக்கை வலுக்கிறது மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்கும் கோரிக்கை வலுக்கிறது மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டத் தொடர் இன்று சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆரம்பமாகின்றது.

இச்சமயத்தில் இலங்கையில் மோசமாக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றை அங்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கும் இந்தக் கூட்டத்தொட ரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத் தைப் பிடிக்கும் எனப் பல தரப்பினரும் எதிர் பார்க்கின்றனர்.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்று வரும் சட்டவிரோதமான ஆள்கடத்தல்கள், காணாமற் போகச்செய்தல், கப்பம் அற விடல், படுகொலைகள் ஆகிய மனித உரிமை மீறல் தொடர்பான விடயத்தை முக்கிய அம்சமாக இக்கூட்டத்தொடரில் தூக்கிப் பிடிப்பதற்கு பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் கங்கணம் கட்டி நிற்கின்றன. அதேசமயம் ஐரோப் பிய யூனியன் உட்பட பல சர்வதேச நாடு களின் ஆதரவும் இந்தத் தரப்புகளுக்கு இருப்பதாகத் தெரிகின்றது.

அதேவேளை, மேற்படி ஆணைக்குழு வில் பிரதிநிதித்துவம் வகிக்கும் தனது நேச நாடுகள் இடையே ஆதரவு திரட்டி, இந்த முயற்சியை முறியடிப்பதில் இலங்கை அரசும் தீவிரமாக இருப்பதாகத் தெரிகின் றது.

நேரத்துடனேயே தனது உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பித் தனது பிரசார மற்றும் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை இலங்கை அரசுத்தரப்பு ஆரம்பித்து விட்டது என்றும் தெரிகின்றது.

இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாது காப்புச் சபைக்கு எடுத்துச் செல்லவேண் டும் என வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு வின் இந்தக் கூட்டத் தொடரில் நிறை வேற்ற வைக்கும் முயற்சியில் பல மனித உரிமைகள் தரப்புகள் முனைந்து நிற்கின் றன.

மனித உரிமை மீறல் சம்பவங்களுக்காக இலங்கை அரசைக் கடிந்துகொண் டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வ தேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் அவதானிப்பகம், ஜெனிவா அமைப்பு போன்றவை இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர் பாக ஆகக் குறைந்தது அங்கு (இலங்கை யில்) ஒரு சர்வதேச சுயாதீன கண் காணிப்புக் குழு பிரசன்னமாக இருப்பது அவசியம் என்று வலியுறுத்தும் தீர்மானத் தையாவது இக்கூட்டத் தொடரில் நிறை வேற்றிவைக்க ஒற்றைக்காலில் நிற்கின் றன என்று கூறப்படுகின்றது.

அரசுக்கு எதிரான முயற்சிகளை

முறியடிக்க முன் ஆயத்தம்

இதேசமயம், இலங்கை அரசுக்கு எதி ரான இந்தப் பிரசார முயற்சிகளை முறிய டிக்கும் முன் ஆயத்த வேலைகளில் இலங் கையின் உயர்மட்டக் குழு ஒன்று கடந்த வாரம் ஜெனிவாவில் முனைப்பாக ஈடு பட்டிருந்தது.

இலங்கையின் இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமர சிங்க, சட்டமா அதிபர் ஸி. ஆர். டி. சில்வா, இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜே சிங்க, ஜெனிவாவில் ஐ.நாவுக்கான இலங் கைத் தூதுவர் தயான் ஜெயதிலக ஆகியோர் அடங்கிய குழுவே இந்தப் பிரசார நட வடிக்கையில் ஈடுபட்டது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் ஆகி யோரோடு இக்குழு விரிவான பலசுற்றுப் பேச்சுகளில் ஈடுபட்டது.

இதேசமயம், இன்று ஆரம்பமாகும் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது இலங்கை அரசின் தரப்பில் வாதி டும் அணியில் ஜெனிவாவுக்கான இலங் கைப் பிரதிநிதி தயான் ஜெயதிலக, சமா தான செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க,சமாதானச் செயலகத் தின் சட்டப் பணிப்பாளர் ஷிராணி குணதிலக, இடர்முகாமைத்துவ, மனித உரிமை கள் அமைச்சின் உதவிச் செயலர் ஏ. எச். எல்.டி.சொய்ஸா, குற்றப்புலனாய்வுப் பொலிஸின் பிரதிநிதி நிமல் குலதுங்க, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஷவிந்திரா பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுகின் றனர்.

மனித உரிமைகளுக்கான ஐ. நா. தூது வரின் இவ்வருடத்துக்கான அறிக்கை மீதான விவாதம் 13 ஆம் திகதி இடம்பெறும்.

பாதுகாப்புக் கவுன்ஸிலின் கவனத் துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டிய மனித உரிமை விவகாரங்கள் குறித்து எதிர் வரும் 24 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் எனத் தெரிகின்றது.

-உதயன்

இந்த முறையாவது இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரபடுமா?

இல்லை சிறிலாங்கா அரசின் பொய்வாக்குறிதிகளை நம்பி மீண்டும் மீண்டும் சந்தர்பம் கொடுப்பார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.