Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பாரிய விடயங்கள் எதுவும் இல்லை - ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 5

06 MAY, 2023 | 10:18 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

 

எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைப்போன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பாரிய விடயங்கள் எதுவும் இல்லை.

உலகில் ஏனைய நாடுகளில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு நிகரான சட்டமூலமே தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் சட்டமூலத்தில் ஒரு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலகில் எந்த நாட்டிலும் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திலும் பயங்கரவாதம் என்றால் என்ன என வரைவிலக்கணம் படுத்தியதில்லை.

பயங்கரவாதம் என்ற சொல் விசாலமான கருத்தைக்கொண்டது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கும் நாடுகள் தங்களின் நாட்டுக்கு ஏற்றவகையில் பயங்கரவாத செயற்பாடுகளை பட்டியலிட்டு வரைவிலக்கணப்படுத்தி இருக்கின்றன.

அதன் பிரகாரமே எமது நாட்டும் மேற்கொண்டு இருக்கிறது. அதனால் சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பில் வரைவிலக்கனப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.

அத்துடன் தற்போது அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிகமாக கொண்டுவருவதாக தெரிவித்து தற்போது 40 வருடங்களுக்கும் அதிக காலம் அமுல்படுத்தி வருகிறோம்.

அதில் இருக்கும் பயங்கரமான விடயங்கள் காரணமாகவே சர்வதேச நாடுள் உட்பட மனித உரிமை அமைப்புகள் பயங்கரவாத தடைச்சடத்தை நீக்குமாறு தெரிவித்து வந்தன. 

அதன் பிரகாரமே தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவந்திருக்கிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் நீடிப்பு அதிகாரம் எந்தளவு பயங்கரமானது என்பதை சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை எந்த குற்றமும் இல்லாமல் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்துவந்ததன் மூலம் உணர்ந்துகொள்ள முடிந்தது.

மேலும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திலும் தடுப்புக்காவல் உத்தரவு அதிகாரம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பது தொடர்பாகவே பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த அதிகாரத்தை மீண்டு ஜனாதிபதிக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தால் அதில் மாற்றம் செய்யலாம். 

அதேநெரம் ஒரு சில பொலிஸாரின் தவறான செயற்பாட்டினால் குற்றமற்ற நபர்கள் சிறைச்சாலைகளில் நீண்டகாலம் சாதாரண சட்டத்தின் கீழ் இருந்து வருகின்றனர். அப்படியானால் இந்த சட்டத்தையும் மாற்ற வேண்டும்.

அத்துடன் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் பாரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டி திருத்தம் என்ன வென்றால், பிரதிபொலிஸ் அதிபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு அதிகாரம் வழங்கினாலும் சந்தேக நபரை 48 மணி நேரதத்துக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவேண்டும் என சட்டமூலத்தில் இருக்கிறது. 

இந்த இடத்தில் சந்தேக நபருக்கு நீடிக்கப்படும்  பொலிஸ் தடுப்புக்காவல் நியாயமானதா என ஆராய்ந்து தீர்மானிக்க முடியுமான வகையில் திருத்தம் மேறகொள்ளப்படவேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.

அதனால் எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதுபாேல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பயங்கரமான விடயங்கள் எதுவும் இல்லை. உலகில் ஏனைய நாடுகளில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களைப்போன்றே தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைந்திருக்கிறது.அதேநேரம் சட்டமூலத்தில் ஒருசில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/154609

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல திருத்தத்துக்கு முன்மொழிவுகளை முன்வைக்கப் போவதில்லை; முழுமையாக நீக்க வேண்டும் - தமிழ்த் தலைவர்கள்

Published By: DIGITAL DESK 5

07 MAY, 2023 | 09:48 AM
image

(ஆர்.ராம்)

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவதற்காக எந்தவொருவொரு முன்மொழிவுகளையும் முன்வைக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள தமிழ்த் தலைவர்கள், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வெண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான யோசனை முன்வைப்பதற்காக ஒன்றிணைந்த எதிரணியினரால் உருவாக்கப்பட்ட குழுவிலிருந்து விலகியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டைதை அடுத்து, அதன் உள்ளடக்கமானது கருத்து வெளியிடும் சுதந்திரம், மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவற்றை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அடக்குமுறை அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதாக இருப்பதாகவும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. 

இதனையடுத்து, குறித்த சட்ட மூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தாமதித்த நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, அனைத்து தரப்பிடமிருந்தும் அச்சட்டமூலத்தில் மாற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான முன்மொழிவுகளைக் கோரியதோடு அதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் கால அவகாசத்தினையும் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் மேற்கண்டவாறான அறிவிப்பினை விடுத்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, 

தமிழரசுக்கட்சி

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றுவோம் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலும் வாக்குறுதிகளை அளித்திருந்தாலும். அதனை தற்போது வரையில் நிறைவேற்றவில்லை.  

இருப்பினும், இரண்டு தடவைகள் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அக்காலத்தில் உருவாக்கப்பட்ட சட்ட மூலங்கள் அனைத்தும் இருப்பதை விடவும் மிகவும் ஆபத்தானவையாகவே உள்ளது. 

அதேநேரம், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத்தினை தடுப்பதற்கு புதிதாக பிறிதொரு தட்டத்தினை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆகவே புதிய சட்டவாக்க முயற்சிகளை கைவிடும் அதேநேரம், ஏலவே உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்கிவிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். 

மேலும் பயங்கரவாதம் போன்ற விசேடநிலைமைகள் உருவாக்கின்றபோது அவசரகால பிரகடனத்தினை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்றார். 

இதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவிக்கையில், 

1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் அமுலாக்கப்பட்டது முதல் தற்போது வரையில் தமிழினமே முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

எத்தனையோ இளைஞர்கள் தமது வாழ்க்கையை தொலைத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தான் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம், மற்றும் தென்னிலங்கை அமைப்புக்கள் சில இந்தச் சட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்துள்ளது. 

இவ்வாறான நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அச்சட்டம் நீக்கப்பட்ட அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. 

ஆகவே, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பிறிதொரு சட்டத்தினைக் கொண்டுவருவதையோ அந்தச் சட்டத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவதையோ நாம் ஏற்றுக்கொள்ள வில்லை. அந்த வகையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தினை கைவிடும் அதேநேரம் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்க வேண்டும் என்றார்.

அதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், எம்மைப்பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகாரத்தினை மேலும் வலுப்படுத்தும் வகையில் தான் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் உருவாக்கப்பட்டள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அரசாங்கத்துக்கு எதிரான அனைத்துக் குரல்களும் அடக்கப்படும். ஆகவே இப்புதிய எதிர்ப்புச் சட்டமூலத்தினை முழுமையாக கைவிடும் அதேநேரம், பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்க வேண்டும்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின்போது, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு மாற்றாக புதிய வரைபொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக்குழுவின் அங்கத்துவத்தில் நானும் உள்ளடக்கப்பட்டிருந்தேன். எனினும், எமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி குறித்த குழுவிலிருந்து நான் வெளியேறியுள்ளேன் என்றார். 

இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.விக்னேஸ்வரன் எம்.பி தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலாக்கப்பட்டு, தமிழ் இளைஞர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இன்றும் சிறைகளில் உள்ளார்கள். 

 

ஆகவே, ஜனநாயகத்திற்கும், மனிதர்களின் அடிப்படைய உரிமைகளுக்கும் எதிரான அச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும். அத்துடன், புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். 

https://www.virakesari.lk/article/154669

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.