Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று பேர் மரபணுக்களுடன் உருவான குழந்தை - சாத்தியமானது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே குழந்தையில் 3 பேரின் மரபணுக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜேம்ஸ் கல்லேகர்
  • பதவி,உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
  • 10 மே 2023

பிரிட்டனில் முதன் முறையாக 3 பேரின் டி.என்.ஏ.க்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

தீர்க்க முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை.

மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாதவை. குழந்தை பிறந்த சில நாட்களில் அல்லது சில மணி நேரத்தில் கூட மரணம் நேரிடலாம். சில குடும்பங்கள் பல குழந்தைகளை இதனால் இழந்துள்ளன. அத்தகைய பெற்றோர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க இந்த தொழில்நுட்பம் மட்டுமே ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

மைட்டோகாண்ட்ரியா அதிமுக்கியம். ஏன்?

செல்லின் ஆற்றல் மையங்கள் எனப்படும் மைட்டோகாண்ட்ரியாக்கள் நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன. அவை உணவை நாம் பயன்படுத்துவதற்கான ஆற்றலாக மாற்றும் வேலையைச் செய்கின்றன.

குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியாக்கள் உணவை ஆற்றலாக மாற்றத் தவறுகின்றன. இதனால் உடல் இயங்கத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் மூளை பாதிப்படையும்; இதயம் முடங்கிப் போகும்; கண் பார்வையிழக்கும்; தசைகள் வலுவிழக்கும்.

மரபுவழி நோயான இது தாயிடம் இருந்தே குழந்தைக்கு கடத்தப்படும். ஆகவே, மைட்டோகாண்ட்ரியா தான சிகிச்சை என்பது சோதனைக்குழாய் குழந்தையின் இன்னொரு வடிவமே. அதில் ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட கருமுட்டையில் உள்ள மைட்டோகாண்ட்ரியா பயன்படுத்தப்படுகிறது.

ஒரே குழந்தையில் 3 பேரின் மரபணு எப்படி?

மைட்டோகாண்ட்ரியாக்கள் அவற்றிற்கென சொந்த மரபணு குறியீடுகள் அதாவது டி.என்.ஏ.வை பெற்றுள்ளன. ஆகவே, இந்த முறையில் பிறக்கும் குழந்தை, தாய், தந்தை மற்றும் கருமுட்டை தானமாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டி.என்.ஏ.க்களைப் பெற்றிருக்கும். மரபணு சங்கிலியில் செய்யப்பட்ட இந்த மாற்றம், நிரந்தரமாக அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் வழிவழியாக கடத்தப்படும்.

தாய், தந்தை தவிர்த்து, மூன்றாவது நபர் அதாவது, கருமுட்டை தானமாக அளிக்கும் பெண்ணின் டி.என்.ஏ. முழுக்கமுழுக்க மைட்டோகாண்ட்ரியா உருவாக்கம் தொடர்பானதாக மட்டுமே இருக்கும். குழந்தையின் தோற்றம், குணநலன்கள் போன்ற மற்ற தன்மைகளை தீர்மானிப்பதில் அதற்கு எந்தவொரு பங்கும் இருக்காது.

ஒரே குழந்தையில் 3 பேரின் மரபணுக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதான் முதல் குழந்தையா?

இந்த தொழில்நுட்பம் நியூ காஸில் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்க வழிவகை செய்து பிரிட்டனில் 2015-ம் ஆண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன.

ஆனாலும், பிரிட்டன் அடுத்த கட்டத்தை நோக்கி உடனே பயணப்படவில்லை. 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் ஜோர்டான் குடும்பம் ஒன்று இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டது.

2023-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதிப்படி, ஐந்துக்கும் குறைவான குழந்தைகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறந்திருப்பதாக மனித கருவுறுதல் மற்றும் கருவியல் ஆணையம் (HREA) கூறுகிறது. இந்த சிகிச்சையைப் பெற்றுக் கொண்ட குடும்பங்கள் அடையாளம் காணப்படுவதைத் தடுக்கவே துல்லியமான விவரங்களை வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் 'தி கார்டியன்' பத்திரிகை கேள்வி எழுப்பிய போது இந்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.

மூன்று பெற்றோர் குழந்தை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பிரிட்டனில் முதன் முறையாக, தானமாக பெறப்பட்ட மைட்டோகாண்ட்ரியாக்களுடன் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்துள்ளன. மைட்டோகாண்ட்ரியா தானத்தின் விளைவுகளை முழுமையாக ஆய்வு செய்து அதனை படிப்படியாக நெறிப்படுத்துவதே அடுத்த கட்டமாக இருக்கலாம்," என்கிறார் ப்ராக்ரஸ் எஜூகேஷனல் டிரஸ்ட் இயக்குநர் சாரா நார்க்ராஸ்.

மைட்டோகாண்ட்ரியா பதிலீடு சிகிச்சை வெற்றியா? இல்லையா?

நியூ காஸில் மருத்துவக் குழு தொடர்ந்து மவுனம் காக்கிறது. ஆகவே, இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததா? இல்லையா? என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.

"மைட்டோகாண்ட்ரியா பதிலீடு தெரபி தொழில்நுட்பம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது? குழந்தைகள் மைட்டோகாண்ட்ரியல் நோயில்லாமல் இருக்கிறார்களா? பிற்காலத்தில் அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும்." என்று பிரான்ஸிஸ் கிரிக் ஆய்வு நிறுவன பேராசிரியர் ராபின் லவெல்-பேட்ஜ் கூறுகிறார்.

தொழில்நுட்ப ரீதியாக "தலைகீழ் மாற்றம்" ஏற்படும் அபாயமும் உண்டு. அதாவது, ஏதேனும் குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியா குழந்தைக்கு கடத்தப்பட்டால், அது எண்ணிக்கையில் பெருகி இந்த நோயை உருவாக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

இங்கிலாந்தில் ஒருமுறை செய்யப்பட்ட ஆய்வில், ஒவ்வோர் ஆண்டும் 150 குழந்தைகள் வரை இந்த குறைபாட்டுடன் பிறக்கக்கூடும் என்று தெரியவந்தது.

https://www.bbc.com/tamil/articles/cnk00gq8xy7o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.