Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப் படுகொலையின் அடையாளமான ஊர்தி பவனி வவுனியாவில் ஆரம்பமாகி பேசாலை நோக்கி பயணம்: மக்கள் அஞ்சலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

13 MAY, 2023 | 10:49 PM
image

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் மற்றும் தமிழினப் படுகொலையை நினைவூட்டும் ஊர்தி பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவில் இருந்து நேற்று (12) இந்த ஊர்தி பவனி ஆரம்பமானதை தொடர்ந்து, நேற்றிரவு வவுனியாவை ஊர்தி வந்தடைந்து, இன்று (13) காலை மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படத் தொடங்கியது. அவ்வேளை, இந்த ஊர்திக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். 

IMG-20230513-WA0022.jpg

அதன் பின்னர், குறித்த ஊர்திப் பவனி வவுனியா நகரை வலம் வந்ததுடன், மன்னார் நோக்கி பயணத்தை தொடர்ந்து, இன்று மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதி மற்றும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது.

இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து ஊர்தியை நோக்கி அஞ்சலி செலுத்தினர். 

அதனை தொடர்ந்து இந்த நினைவு ஊர்தியானது பேசாலை நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வோர் ஆண்டும் மே 12 முதல் மே 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழமையாகும்.

அதன்படி, இந்த ஆண்டு பல பகுதிகளிலும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் நிகழ்வு பல தரப்பினராலும் ஒருங்கமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன. 

IMG-20230513-WA0015.jpg

இந்நிலையில், நேற்றும் இன்றும் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன் மற்றோர் அங்கமாகவே முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்தி மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு  சென்று, மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை எதிர்வரும் மே 18ஆம் திகதி வந்தடையும் என பவனி ஏற்பாட்டாளர்களான தாயக நினைவேந்தல் அமைப்பினர் தெரிவித்தனர்.

IMG-20230513-WA0014.jpg

IMG-20230513-WA0017.jpg

IMG-20230513-WA0020.jpg

IMG-20230513-WA0026.jpg

IMG-20230513-WA0028.jpg

download__9_.jpg

download__8_.jpg

download__7_.jpg

https://www.virakesari.lk/article/155211

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதிகோரி ஊர்திப்பவனி

Published By: VISHNU

14 MAY, 2023 | 04:11 PM
image

தமிழ் தேசிய மக்கள் முன்னணிகட்சி அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலை நீதி கோரி படுகொலையினை சித்தரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்திப் பவனி ஞாயிற்றுக்கிழமை (14) அம்பாறை வீரமுனையில் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபியில் இருந்து ஆரம்பித்துள்ளது.

WhatsApp_Image_2023-05-14_at_02.13.39__1

மே 18 முள்ளிவாய்க்கால் இன படுகொலையின் 14 வது நினைவேந்தலையிட்டு தமிழின படுகொலை நீதி கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இனப்படுகொலையை சித்தரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்தி பவனி அம்பாறை வீரமுனை கோவிலில் 1990 ம் ஆண்டு தமிழர்கள் 175 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபில் இன்று சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி ஊர்தி ஊர்பவனியை ஆரம்பித்தனர்.

WhatsApp_Image_2023-05-14_at_02.13.38.jp

இந்த ஊர்திபவனி அங்கிருந்து மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அமைக்ப்பட்ட நினைவு தூபியை சென்று அங்கு சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து மட்டு சத்திருக்கொண்டான் படுகொலை செய்யப்பட் நினைவு தூபிக்கு சென்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி செங்லடி வாழைச்சேனை ஊடாக வாகரையை சென்று அங்கிருந்து இன்று திருகோணமலையை சென்றடையவுள்ளது.

WhatsApp_Image_2023-05-14_at_00.35.34.jp

இந்த ஊர்திபவனி  திங்கட்கிழமை (15) திருகோணமலையில் இடம்பெற்ற தமிழின படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவு தூபிகளை சென்று அஞ்சலி செலுத்தி 18ம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடைய உள்ளது.

WhatsApp_Image_2023-05-14_at_00.35.29.jp

WhatsApp_Image_2023-05-14_at_00.34.59.jp

WhatsApp_Image_2023-05-14_at_00.34.55__1

WhatsApp_Image_2023-05-14_at_00.34.58.jp

https://www.virakesari.lk/article/155254

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமிழின படுகொலைக்கு நீதிகோரி நினைவு ஊர்தி பவனி 

Published By: NANTHINI

16 MAY, 2023 | 02:22 PM
image

தமிழினப் படுகொலைக்கு நீதி கோரும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட நினைவு ஊர்தி இன்று செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் முழுவதும் பவனி செல்கிறது. 

இந்த நினைவு ஊர்தியானது நேற்று திங்கட்கிழமை வவுனியா மாவட்டத்தை வந்தடைந்து, பின்னர் நேற்றிரவு 8 மணியளவில் மன்னார் நோக்கி புறப்பட்டு, மன்னார் பொது பேருந்து நிலையத்தில் மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

அதனை தொடர்ந்தே ஊர்தி இன்று யாழ்ப்பாணத்தில் மக்களின் அஞ்சலிக்காக பயணத்தை தொடர்கிறது. 

கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வாகன ஊர்தியானது கிழக்கு, வடக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக சென்று, மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. 

அத்துடன், நேற்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டம் இடம்பெறும் பந்தலுக்கு முன்பாக, படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் மாவட்டத்தின் கிராம பகுதிகளுக்கு ஊர்தி புறப்பட்டுச் சென்றதோடு, இன்று யாழ்ப்பாணத்தில் ஊர்தி பவனி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 

IMG-20230515-WA0066.jpg

IMG-20230515-WA0064.jpg

IMG-20230515-WA0068.jpg

IMG-20230515-WA0087.jpg

IMG-20230515-WA0077.jpg

IMG-20230515-WA0098.jpg

IMG-20230515-WA0069.jpg

IMG_5413.jpg

IMG_5415.jpg

IMG_5422.jpg

IMG_5407.jpg

https://www.virakesari.lk/article/155398

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.