Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2024 இல் சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சரின் புதிய திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

19 MAY, 2023 | 08:30 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் 2024இல் ஒரே வருடத்துக்குள் நடத்தி பரீட்சை  நேர அட்டவணையை புதுப்பிக்க இருக்கிறோம். 

அத்துடன், கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் 7800 ஆசிரியர்கள் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் பங்குபற்றலுடன் கல்வி அமைச்சில் நேற்று (18) இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற, குறைந்த வருமானம் பெறும், பொருளாதார கஷ்டத்துடன் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வி நடவடிக்கைகளுக்காக மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

30-2.jpg

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அடுத்த வருடத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்துக்குள் நடத்த முடியுமான வகையில் கல்வி நடவடிக்கைகளை படிப்படியாக வழமையான நிலைக்கு கொண்டுவந்து, பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க இருக்கிறோம்.

அத்துடன், கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளிவந்துள்ள 1800 ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி நியமனம் வழங்கி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் இருந்துவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்போம். 

அதேநேரம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மொழி போன்ற, அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை இருந்துவரும் விடயத் துறைகளுக்கான அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னர், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் 35 வயதுக்கு குறைந்த பட்டதாரிகளில் இருந்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஆசிரியர்களை தெரிவுசெய்து இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/155701

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

300 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்

Published By: DIGITAL DESK 3

20 MAY, 2023 | 10:45 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 உயர்தரப் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவருக்கு 2,500 ரூபாய் வழங்கப்படவுள்ளது. கொவிட் தொற்று காரணமாக இந்த ஆண்டு 2021 - 2022 என இரு தொகுதி மாணவர்களுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

FwaU7VHWAAAeNKz.jpg

புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இதன் போது வாழ்த்து தெரிவித்த உயர் ஸ்தானிகர், இரு நாடுகளிலும் உள்ள இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய கலாசாரத் தொடர்புகளை எடுத்துக்காட்டிய அவர் , இந்தியாவில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

FwaU7VGXsAQgj9m.jpg

எதிர்காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இலங்கையின் இளம் தலைமுறையினர் பெரும் பலமாக இருப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, மகாத்மா காந்தி புலமைப்பரிசில் மட்டுமல்லாமல், மேலும் பல புகழ்பெற்ற நிறுவனங்களில் பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

FwaU7VJWcAIJKFa.jpg

இந்த முயற்சிகள் இலங்கையின் மனித வள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் , மாணவர்களுக்கான பாடப் புத்தகம் அச்சிடுவதற்கான ஆதரவை வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/155723

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.