Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாகனங்களை எடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாகனங்களை எடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் | Army Soldiers Involved Money Laundering Vehicles

வாகனங்களை எடுத்து பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள்

வாடகை அடிப்படையில் வாகனங்களை எடுத்துச் சென்று அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ சிப்பாய் எனவும் மற்றைய சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் எனவும் போலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர்கள் வியாபார நோக்கத்திற்காக பதுளை மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து வாகனங்களை வாடகை தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, வான் என பல வாகனங்கள் இவ்வாறு வாடகைக்கு விடப்பட்டு வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் இவ்வாறு வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களுக்கான வாடகைத் தொகையை முதல் சில மாதங்களில் செலுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு திடீரென வாகனங்களுக்கு வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டு செல்போனையும் அணைத்துவிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த இருவரும் பதுளை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி வாடகை அடிப்படையில் வழங்கிய வாகனங்கள் தொடர்பில் உரிய தகவல்கள் கிடைக்காமையால், வாகன உரிமையாளர்கள் இது தொடர்பில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ காவல் நிலையங்களில் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ள நிலையில், விசாரணைகளின் போது, இந்த சம்பவத்தில்ஈடுபட்டது இருவர் என தெரியவந்துள்ளது. கடத்தல்காரர்கள் வாடகை வாகனங்களை வேறு தரப்பினரிடம் அடகு வைத்துள்ளனர்.

கார் உரிமையாளர்கள், கார் வாடகை தொழிலை நடத்தி வந்த ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிந்தது.

சந்தேகநபரிடம் இருந்து வாகனம் இருந்த இடம் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்காததால், மற்றைய சந்தேக நபரின் மனைவி தொலைபேசியில் வழங்கிய பதிலின் அடிப்படையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி காவல்துறை அதிகாரிகள், வாகனங்களின் உரிமையாளர்களுடன் வாகனங்களைத் தேடியபோது, வாகன அடகுக் கடைகளில் அவர்களது வாகனங்கள் பல கிடைத்தன. குறித்த வாகனங்கள் 3 முதல் 15 இலட்சம் ரூபா வரை அடகு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

https://jvpnews.com/article/army-soldiers-involved-money-laundering-vehicles-1685329503

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.