Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியகிண்ணப்போட்டிகளை இலங்கை நடத்த முன்வந்ததால் பாக்கிஸ்தானின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை சீற்றம் - இலங்கையில் ஒருநாள்போட்டிகளில் விளையாட மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

04 JUN, 2023 | 11:16 AM
image
 

இலங்கை ஆசிய கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்ததால் சீற்றமடைந்த பாக்கிஸ்தானின் கிரிக்கெட் சபை இலங்கையில் ஒருநாள் போட்டிகளில் விளையாட மறுத்துள்ளது.

பாக்கிஸ்தானில் ஹைபர்மொடல் அடிப்படையில் நான்கு  ஆசிய கிண்ணப்போட்டிகளை நடத்த வேண்டும் என பாக்கிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அனைத்து போட்டிகளையும் நடத்துவதற்கு இலங்கை முன்வந்துள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தான் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளிற்கு இடையிலான உறவுகள் பாதிப்படைந்துள்ளன.

Pakistan-tour-of-Sri-Lanka-2022-Schedule

இலங்கையில் அடுத்தமாதம் பாக்கிஸ்தான் சில ஒருநாள்போட்டிகளில் விளையாடுவதற்கான யோசனையை  பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நிராகரித்துள்ளதை தொடர்ந்து இரு நாடுகளினதும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகளிற்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐசிசிவேர்ல்ட் சம்பியன்சிப்பின் ஒருபகுதியாக  அடுத்தமாதம் பாக்கிஸ்தான் அணி இலங்கையில் இரண்டு டெஸ்ட்போட்டிகளை விளையாட உள்ளது.

இந்த நிலையில் பாக்கிஸ்தான் சில ஒருநாள் போட்டிகளை விளையாட வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கு முதலில் இணங்கிய பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை பின்னர் இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ளது.

செப்டம்பரில் ஆசிய கிண்ணப்போட்டிகளை நடத்த இலங்கை முன்வந்துள்ளமை குறித்து பாக்கிஸ்தான் அதிருப்தியடைந்துள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/156882

  • கருத்துக்கள உறவுகள்

போனகிழமைதானே..சாஜாகான் போர்க்கப்பலில் சாமான் கொண்டுவந்து கொட்டிப்போட்டுப் போனவை ..அதற்கிடையில் முறிஞ்சு போச்சு..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

போனகிழமைதானே..சாஜாகான் போர்க்கப்பலில் சாமான் கொண்டுவந்து கொட்டிப்போட்டுப் போனவை ..அதற்கிடையில் முறிஞ்சு போச்சு..

இந்தியாதான்… பாகிஸ்தானில் போட்டி வைக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்திருக்கும்.
தற்செயலாக பாகிஸ்தானில் போட்டி வைக்க இலங்கை ஒப்புக் கொண்டால்,
இந்தியா போட்டியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும்.
இலங்கை இப்போ… பல இடங்களில் படுக்கை விரித்த பலனை அனுபவிக்கின்றது. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ணத்திலிருந்து பாகிஸ்தான் விலகக்கூடும்?

Published By: VISHNU

07 JUN, 2023 | 11:02 AM
image
 

(என்.வீ.ஏ.)

இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற  தங்களால் முன்மொழியப்பட்ட  யோசனையிலிருந்து இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் பின்வாங்கியதை அடுத்து, வேறு வழியின்றி, வரவேற்பு நாடான பாகிஸ்தான் ஆசிய கிண்ணப் போட்டியிலிருந்து விலகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

3 முதல் 4 போட்டிகளை பாகிஸ்தானிலும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகளை நடுநிலையான நாட்டிலும் நடத்தலாம் என்ற யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதி முன்மொழிந்திருந்தார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததை அடுத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால், பாகிஸ்தானுக்கு வெளியே போட்டியை நகர்த்துவதற்கான இந்திய கட்டுப்பாட்டுச் சபையின் உந்துதலை இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் ஆதரித்துள்ளதாக இப்போது தெளிவாகியுள்ளது.

ஆசிய கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சம்பிரதாயபூர்வமாக மெய்நிகராக சந்திக்க வாய்ப்புள்ளது. அல்லது இந்த மாத இறுதியில் முறையான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது..

'ஆனால், இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற தமது முன்மொழிவை இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் ஆதரிக்கவில்லை என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இப்போது அறிந்திருக்கிறது' என விடயங்களை நன்கு அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

சேதி ஏற்கனவே தனது கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடனும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, ஆசிய கிண்ணத்திற்கான எந்தப் போட்டியையும் சொந்த மண்ணில் நடத்த முடியாவிட்டால், பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இருப்பதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

போட்டியை பாகிஸ்தானில் இருந்து ஒரு நடுநிலையான நாட்டிற்கு நகர்த்தினால் தமது நாடு போட்டியில் பங்கேற்காது என்று சேதி பலமுறை கூறியிருக்கிறார். இந் நிலையில் ஆசிய கிண்ணத்தை புறக்கணிக்கும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இருப்பதாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது.

'பாகிஸ்தானுக்கு இரண்டு வழிகளே உள்ளன. நடுநிலையான மைதானத்தில் போட்டியில் விளையாடுங்கள் அல்லது விலகுங்கள்' என்று ஆசிய கிரிக்கெட் பேரவை வட்டாரம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் விளையாடாவிட்டாலும் இந்த சுற்றுப் போட்டி ஆசிய கிண்ண கிரிக்கெட் என்றே அழைக்கப்படும். எனினும் பாகிஸ்தான் இல்லாவிட்டால் ஒளிபரப்பாளர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானிலும் இன்னும் ஒரு நாட்டிலும் நடத்துவது நிர்வாக ரீதியாகவோ நிதி ரீதியாகவோ சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டில்  இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள்  உள்ளன.

இந்த ஆண்டு ஆசியக்  கிண்ண  கிரிக்கெட்   முற்றிலும் கைவிடப்படலாம் என்றும், உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் 50 ஓவர் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது என்றும் அந்த வாட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் நடத்தப்படாவிட்டால் அப் போட்டி நடைபெறவிருந்த காலப்பகுதியில் நான்கு அல்லது ஐந்து நாடுகளுக்கு இடையிலான போட்டியை நடத்த இந்தியா தயாராகி வருவதாகவும் அந்த வட்டாரம் மேலும் கூறியது.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தீர்மானத்தால் கிரிக்கெட் சபைகளுக்கு இடையிலான உறவுகளில் என்ன வகையான தாக்கம் ஏற்படப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆசிய கிண்ணத்திற்கான சகல போட்டிகளையும் நடத்த இலங்கை முன்வந்ததை அடுத்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும்போது சில சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தனது முன்னைய முன்மொழிவை பாகிஸ்தான் இப்போது வாபஸ்பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க உலகக் கிண்ணப் போட்டிக்கு தனது அணியை இந்தியாவுக்கு அனுப்பும் முடிவைப் பொறுத்தவரை, அண்மைக்கால நிகழ்வுகள் பாகிஸ்தான் தனது கைவரிசையைக் காட்ட தூண்டக்கூடும்  எனவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/157133

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் பாகிஸ்தானிலும் ஆசிய கிண்ண கிரிக்கெட்

Published By: VISHNU

15 JUN, 2023 | 05:21 PM
image
 

(நெவில் அன்தனி)

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிசெய்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் நடைபெறுமா? இரத்துச் செய்யப்படுமா? என எழுந்த சந்தேகங்களைப் போக்கும் வண்ணம் ஆசிய கிரிக்கெட் பேரவை இந்த அறிவிப்பை வியாழக்கிழமை (15) விடுத்தது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 31ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 17ஆம் திகதிவரை நடைபெறும்.

இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற பாகிஸ்தானின் யோசனையை ஜெய் ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்தே இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது.

இதற்கு அமைய பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இலங்கையில் 9 போட்டிகளுமாக மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன.

பாகிஸ்தானில் 4 போட்டிகளும் லாகூரில் நடைபெறும்.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஒரு குழுவிலும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் மற்றைய குழுவிலும் இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு குழுகளிலும் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெறும். சுப்பர் 4 சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விiளையாடும்.

இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மறுத்ததால் ஆசிய கிண்ண கிரிக்கெட் சிக்கலை எதிர்கொண்டது.

எனினும் பாகிஸ்தானில் சாத்தியமில்லாத போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆரம்பத்தில் வலியுறுத்தியது. ஆனால், மற்றைய ஆசிய நாடுகளின் அழுத்தம் காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற யோசனை மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது ஆகியன இரண்டு பரஸ்பர பிரத்தியேக நிகழ்வுகளாக நோக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/157801

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.