Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா - பெரிய விளாத்திக்குளம் வீதியை பார்வையிட்ட நீதிபதி : வீதியை அமைக்க உடனடி நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா - பெரிய விளாத்திக்குளம் வீதியை பார்வையிட்ட நீதிபதி : வீதியை அமைக்க உடனடி நடவடிக்கை

Published By: Nanthini

08 Jul, 2023 | 10:49 AM
image

வவுனியா - பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதியை தமது பாவனைக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அவ்வீதியை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (07) பார்வையிட்டார்.

அதனையடுத்து, அவ்வீதியை மக்களின் பாவனைக்கு உகந்ததாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   

வவுனியா - பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி ஓமந்தை புகையிரத நிலையம் அமைப்பதற்காக 2012ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக மூடப்பட்டு, மக்கள் பாவனைக்காக பல கிலோ மீற்றர் சென்று கிராமத்துக்கு வரும் வகையில் பிறிதொரு பாதை வழங்கப்பட்டிருந்தது. 

IMG_20230707_135000.jpg

இந்நிலையில் தமது பழைய பாதையை மீள வழங்க வேண்டும் என கோரி கிராம மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். 

இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு ஓமந்தை பொலிஸார் ஊடாக கிராம மக்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணை படிமுறைகளை பின்தொடரும்போது நீதிவான் நீதிபதி நேற்று மதியம் ஓமந்தை புகையிரத நிலையப் பகுதிக்கு சென்று, மூடப்பட்ட பாதை மற்றும் தற்போதைய பாதைகளை பார்வையிட்டார். 

IMG_20230707_141708.jpg

அத்துடன், புகையிரத திணைக்கள பொறியியலாளரும் கிராம மக்கள் சார்பிலான சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் கிராம மக்களுடன் கலந்துரையாடிய நீதிபதி, மக்களின் இலகுவான பயணத்துக்கு ஏதுவாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் புகையிரத திணைக்களத்தினரிடம் கேட்டறிந்தார். 

இதனையடுத்து, புகையிரத திணைக்களத்தின் பொறியியலாளர் கிராம மக்கள் கோரிய இடத்தில் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லக்கூடிய விதத்தில் பாதை அமைத்துத் தருவதாக தெரிவித்ததுடன், தற்போதைக்கு பார ஊர்திகள் பயன்படுத்தும் பாதையினூடாகவே பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள, அதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர். 

இவ்விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி புகையிரத திணைக்களத்தினரை பணித்துள்ளார். 

இப்பாதை குறித்த மக்களின் பிரச்சினை  தீர்வினை எட்டியுள்ளதுடன், அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

IMG_20230707_132444.jpg

IMG_20230707_131930.jpg

IMG_20230707_131945_2.jpg

IMG_20230707_132342.jpg
 

 

https://www.virakesari.lk/article/159494

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.