Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு பேரழிவுக்கான விதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

16 JUL, 2023 | 02:00 PM
image
 

கபில்

பொது­ஜன பெர­மு­னவின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர, அண்­மையில் நாடா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­திய உரைக்கு, எதிர்­வி­னை­யாற்றும் வகையில் வடக்கு, கிழக்கில் நீதி­மன்­றங்­களைப் புறக்­க­ணித்து போராட்­டங்­களை நடத்­தி­யி­ருக்­கின்­றனர் சட்­டத்­த­ர­ணிகள்.

Sarath_Weerasekara_2.jpg

குருந்­தூர்­ம­லையில் கட்­டு­மா­னங்­களை முன்­னெ­டுக்க விதிக்­கப்­பட்ட நீதி­மன்ற தடை உத்­த­ரவை மீறி, இரா­ணு­வத்­தி­னரும், பௌத்த பிக்­கு­களும் விகாரை கட்­டு­மா­னத்தை பெரும்­பாலும் முடித்­தி­ருக்­கின்­றனர்.

இது­ கு­றித்து நீதி­மன்­றத்­துக்குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், குருந்தூர் மலையில் ஆய்வு செய்யச் சென்­றி­ருந்தார் மாவட்ட நீதி­பதி சர­வ­ண­ராஜா. அப்­போது தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், அங்கு கூடி­யி­ருந்­தனர். நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­க­ரவும் அங்கு சென்­றி­ருந்தார்.

அந்தச் சந்­தர்ப்­பத்தில், விசா­ர­ணையை முன்­னெ­டுத்த நீதி­ப­தியை அணுகி, தன்னை நாடா­ளு­மன்ற உறுப்­பினர் என அறி­மு­கப்­ப­டுத்தி விளக்­க­ம­ளிக்க முற்­பட்ட போது, சரத் வீர­சே­க­ரவை அங்­கி­ருந்து வெளி­யேற்­றி­யி­ருந்தார் நீதி­பதி.

நாடா­ளு­மன்ற உறுப்­பினர் மாத்­தி­ர­மல்ல, ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும், கட­மையில் இருக்கும், விசா­ர­ணையில் இருக்கும் நீதி­ப­தியை நேர­டி­யாக அணுகி விளக்­க­ம­ளிக்க முடி­யாது. அதற்­கென சில நெறி­மு­றைகள் உள்­ளன.

அதனை மீறிய போது, அவ­ருக்கு சந்­தர்ப்பம் கொடுத்தால், ஏனை­ய­வர்­க­ளுக்கும் கருத்துக் கூற இட­ம­ளிக்க வேண்டி வரும் என்­பதால், நீதி­பதி அவ்­வாறு நடந்து கொண்டார். ஆனால், சரத் வீர­சே­கர அந்தக் கோபத்­தையும் வன்­மத்­தையும், தனது சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்தி- நாடா­ளு­மன்­றத்தில் இன­வாதக் கருத்­துக்­களைக் கொட்டித் தீர்த்தார்.

“இலங்கை சிங்­கள பௌத்த நாடு என்­பதை, தமிழ் நீதி­ப­திகள் புரிந்து கொள்ள வேண்டும்.”

“வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள பௌத்த தொல்­பொருள் மர­பு­ரி­மை­க­ளுக்கு எதி­ராக தமிழ் நீதி­ப­தி­களும் செயற்­ப­டு­கின்­றனர்.” 

“தொல்­பொருள் குறித்து ஆராயும் அதி­காரம் நீதி­ப­திக்கு கிடை­யாது.” இவை தவிர வேறு பல சர்ச்­சைக்­கு­ரி­யதும் தவ­றா­ன­து­மான கருத்­துக்­க­ளையும் சரத் வீர­சே­கர வெளி­யிட்­டி­ருந்தார்.

இலங்­கையின் இப்­போ­தைய சிங்­கள இன­வா­திகள் வரி­சையில் சரத் வீர­சே­க­ர­வுக்கு முதன்­மை­யான இடம் உள்­ளது.

ஒரு காலத்தில் விமல் வீர­வன்­சவும், உதய கம்­மன்­பி­லவும், சம்­பிக்க ரண­வக்­கவும், அது­ர­லியே ரத்­தன தேரரும், எல்லே குண­வன்ச தேரரும், கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர, வசந்த பண்­டார போன்­ற­வர்­களும், தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தத்தை கிளப்­பி­னார்கள். மிக­மோ­ச­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தார்கள்.

விடு­தலைப் புலி­க­ளையும், அவர்­க­ளுக்குப் பின்னர் புலம்­பெயர் தமி­ழர்­க­ளையும் அவர்கள் மையப்­ப­டுத்தி இன­வாத பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டார்கள்.

அவர்­களில் பலர் இப்­போது வெளிப்­ப­டை­யாக இன­வா­தத்தை கக்­கு­வதை தவிர்த்துக் கொள்­கின்­றனர்.

அது அவர்­களின் மன­மாற்­றத்தின் வெளிப்­பாடு என கூற முடி­யாது.

அதே­வேளை, சரத் வீர­சே­கர எப்­போதும் இன­வாதம்  பேசு­கின்­றவர். இன­வெ­றுப்­பையும் இனக் குரோ­தத்­தையும் தூண்­டி­விட்டுக் கொண்­டே­யி­ருப்­பவர்.

தமி­ழ­ருக்கு எதி­ரான இன­வா­தத்தை தனது அர­சியல் ஒழுக்­க­மா­கவே மாற்றிக் கொண்­டி­ருப்­பவர்.

அம்­பாறை மாவட்­டத்தில் இருந்து 2010 நாடா­ளு­மன்றத் தேர்­தலில் முதல்­மு­றை­யாக நாடா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வான அவர், 2015 பொதுத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தார்.

2020 நாடா­ளு­மன்றத் தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு, பாரம்­ப­ரிய அர­சி­யல்­வா­தி­க­ளை­யெல்லாம் பின்னால் தள்ளி விட்டு முதல்­நிலை விருப்பு வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­டவர்.

கொழும்பில் அவ­ருக்கு இந்த வெற்­றியைப் பெற்றுக் கொடுத்­தது, அவ­ரது இன­வாதக் கருத்­துக்கள் தான். அந்த உற்­சா­கத்­தி­லேயே அவர், இன­வா­தத்தின் மூலம் தனது அர­சியல் எதிர்­கா­லத்தை தக்­க­வைத்துக் கொள்­வ­தென்று முடிவு செய்து விட்டார் போலும்.

கோட்­டா­பய ராஜபக்ஷ தனிச் சிங்­கள பௌத்த வாக்­கு­களால் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டது போன்று, தானும் தெரிவு செய்­யப்­பட வாய்ப்­புள்­ளது என்ற எண்ணம் அவ­ருக்குள் இருந்­தாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

சரத் வீர­சே­கர இன­வாதக் கருத்­துக்­களை வெளி­யி­டு­வது இதுதான் முதல்­மு­றையும் இல்லை. கடை­சி­யா­கவும் இருக்கப் போவ­தில்லை.

ஆனால், அவர் நீதித்­துறை குறித்து வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற கருத்­துக்கள்- குறிப்­பாக தமிழ் நீதி­ப­திகள் குறித்து வெளிப்­ப­டுத்­திய கருத்­துகள் மிகவும் அபத்­த­மா­னவை.

அவர்கள் தொல்­பொருள் மர­பு­ரி­மை­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­வ­தா­கவும், அவர்­க­ளுக்கு இது­ கு­றித்து விசா­ரிக்க அதி­காரம் இல்லை என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

நீதி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறித்து தீர்­மா­னிக்­கவோ, விமர்­ச­னங்­களை முன்­வைக்­கவோ, சரத் வீர­சே­கர ஒன்றும் சட்ட நிபுணர் அல்ல. முன்னாள் கடற்­படை அதி­கா­ரி­யான அவர், எவ்­வாறு நீதி­ப­தி­களின் அதி­கா­ரத்தை கேள்­விக்­குட்­ப­டுத்த முடி­யும்?

சரத் வீர­சே­கர நீதி­ப­தி­களை இன­ரீ­தி­யாக வேறு­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். தமிழ் நீதி­ப­திகள் பார­பட்­ச­மாக - தொல்­பொருள் மர­பு­ரி­மை­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­கி­றார்கள் என்ற இன­வாதக் கருத்தை சிங்­கள மக்­க­ளுக்கு கூறி­யி­ருக்­கிறார்.

அத்­துடன், வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த தொல்­பொருள் மர­பு­ரி­மை­களைப் பாது­காக்க சிங்­கள மக்கள் அணி திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார்.

பௌத்த ஆல­யங்­களை அழித்து விட்டு அவற்றின் மீது சூலங்கள் நாட்­டப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான கற்­பி­தத்தை ஏற்­ப­டுத்த முனை­கிறார்.

சிங்­கள மக்­களை தூண்டி விட்டு, அதன் மூலம் குளிர்­காய்­வது தான் சரத் வீர­சே­க­ரவின் இந்தக் கருத்­துக்­களின் நோக்கம்.

தமிழ் நீதி­ப­திகள் சிங்­கள, பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­கி­றார்கள் என்று அவர் குற்­றம்­சாட்­டி­யி­ருப்­பது, சிங்­கள மக்­க­ளுக்கு தமிழ் நீதி­ப­தி­களின் மீது வெறுப்­பையும் குரோ­தத்­தையும் நம்­பிக்­கை­யின்­மை­யையும் ஏற்­ப­டுத்தும் நோக்கம் கொண்­டது.

குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தில் மட்­டு­மன்றி, பௌத்­த­ம­ய­மாக்­க­லுடன் தொடர்­பு­டைய எல்லா விவ­கா­ரங்­க­ளிலும், தமிழ் நீதி­ப­தி­களின் உத்­த­ர­வுகள் தீர்ப்­பு­களை மதிக்­கின்ற நிலையில் சிங்­கள இன­வா­திகள் இல்லை என்­பது தெளிவு.

ஏற்கெ­னவே, நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆல­யத்தை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைத்­தி­ருந்த பௌத்த பிக்கு மர­ண­மான போது, அவ­ரது உடலை ஆலய வளா­கத்­துக்குள் தகனம் செய்­வ­தற்கு எதி­ராக முல்­லைத்­தீவு நீதி­மன்றம் கட்­டளை வழங்­கி­யது.

அந்தக் கட்­ட­ளையை மீறி ஞான­சார தேரரும், பௌத்த பிக்­கு­களும் அடா­வ­டித்­த­ன­மாக, ஆலய வளா­கத்தில் பௌத்த பிக்­குவின் உடலை தகனம் செய்­தனர்.

குருந்­தூர்­ம­லையில் புதிய கட்­டு­மா­னங்­களை மேற்­கொள்ளக் கூடாது என்று, நீதி­மன்றம் பிறப்­பித்த கட்­ட­ளையை மீறியே, அங்கு விகாரைக் கட்­டு­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

தமிழ் நீதி­ப­திகள் பௌத்த தொல்­பொருள்  மர­பு­ரி­மை­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர் என்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு முன்­பாக, அவர்கள் நீதி­மன்­றங்­களின் உத்­த­ர­வு­களை மதிக்­கின்­ற­னரா என்ற கேள்வி முக்­கி­ய­மா­னது.

நாட்டின் நீதித்­து­றையை மதிப்­ப­வர்­க­ளாக இருந்தால், அதன் உத்­த­ர­வு­க­ளுக்கு கீழ்ப்­ப­டி­கின்­ற­வர்­க­ளாக இருந்தால், மேன்­மு­றை­யீ­டு­களின் ஊடாக அந்த கட்­ட­ளை­களை செய­லி­ழக்கச் செய்­தி­ருக்­கலாம்.

மாறாக, நீதி­மன்­றங்­களின் நியா­யா­திக்­கத்­தையே அவர்கள் கேள்­விக்­குட்­ப­டுத்­து­கின்­றனர். அவற்றின் மதிப்­பையும் மாண்­பையும் புறக்­க­ணித்து, அதி­கா­ரத்தை கேள்­விக்­குட்­ப­டுத்­து­கின்­றனர்.

நீதித்­து­றையை கேவ­லப்­ப­டுத்தும் வகையில்,  இன ரீதி­யாக பாகு­ப­டுத்தி விமர்­சித்த சரத் வீர­சே­க­ர­வுக்கு எதி­ராக தெற்கில் பெரி­ய­ளவில் எதிர்ப்பு வர­வில்லை என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

வடக்கு, கிழக்கில் சட்­டத்­த­ர­ணிகள் எதிர்ப்புத் தெரி­வித்த பின்னர் தான், சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் கூட கண்­டன அறிக்கை வெளி­யிட்­டது.

தமிழ் நீதி­ப­தி­க­ளுக்கு அதி­காரம் இல்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கூறு­வ­தா­னது, நாட்டில் இன­வாதம் எந்­த­ள­வுக்கு புரை­யோடிப் போயி­ருக்­கி­றது, என்­ப­தற்கு சான்­றாகும்.

இன ரீதி­யாக, மத ரீதி­யாக பாகு­பா­டற்ற நிலை உரு­வா­வதும், எல்லா மக்­களும் இணைந்து வாழுதல் என்­பதும் எந்­த­ள­வுக்கு சாத்­தியம் என்ற கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றான கருத்­துக்கள் தான் பிரி­வினை எண்­ணங்­களை தமி­ழர்கள் மத்­தியில் உரு­வாக்­கி­யது. இத்­த­கைய கருத்­துக்­களை சிங்­கள மக்கள் ஆத­ரிக்கும் வரையில் சிங்­கள அர­சி­யல்­வா­திகள் அதனை முன்­னி­றுத்திக் கொண்டே இருப்­பார்கள்.

நாடா­ளு­மன்­றத்தில் சரத் வீர­சே­கர வெளி­யிட்ட கருத்தை நாடா­ளு­மன்ற பதி­வேட்டில் இருந்து அகற்ற நட­வ­டிக்கை எடுக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறி யிருந்தார்.

இதனை பதிவேட்டில் இருந்து அழிப்பது முக்கியமானதன்று. அந்தப் பதிவேடு பாதுகாக்கப்பட வேண்டி யது. தமிழர்கள் எவ்வாறு இரண்டாந் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டார்கள், அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்தவும், தனிநாடு கோரவும் நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்ற உண்மையை எதிர் கால சமூகம் உணருவதற்கு இத்தகைய இனவாத உரைகள் அவசியம் தேவை.

அவற்றை அழித்து விடுவது, சிங்கள இனவாதிகளின் கோர முகத்தை மறைத்து அவர்களைக் காப்பாற்றுவதாகவும், தமிழரின் உரிமைப் போராட்டத்தின் நியாயங்களை மறைத்து விடுவதாகவும் அமைந்து விடும்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதிகள் மறந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையின் ஊடாக சரத் வீரசேகர போன்ற இனவாதிகள், மீண்டும் ஒரு வன்முறை யுகத்துக்கே விதை போடுகிறார்கள்.

இவர்களின் கருத்துக்களுக்கு சிங்கள மக்கள் மீண்டும் எடுபடுவார்களேயானால், கோட்டாவுக்குப் பின்னால் அணிதிரண்டு, அவமானப்பட்டு நின்றது போன்ற நிலையையே அவர்கள் மீண்டும் எதிர்கொள்ளுவார்கள்.

https://www.virakesari.lk/article/160142

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.