Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலஸ்தீனத்தின் ஜெனினில் இஸ்ரேலின் போர் குற்றங்களும் உடந்தையாக இருக்கும் அரபுலக சர்வாதிகாரிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

16 JUL, 2023 | 01:26 PM
image
 

லத்தீப் பாரூக்

மேற்­கு­லகில் நாடோ­டி­க­ளாகத் திரிந்த யூதர்­களை கொண்டு வந்து குடி­யேற்­று­வ­தற்­காக பலஸ்­தீன பூமியில் கொலைகள், தொடர் படு­கொ­லைகள், இன­ஒ­ழிப்பு ஆகிய நட­வ­டிக்­கைகள் மூலம் உரு­வாக்­கப்­பட்ட செயற்கை நாடான இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரைப் பிர­தே­சத்தின் ஜெனின் நகரில் பலஸ்­தீன அகதி முகாம்கள் மீது ஜுலை மாதம் மூன்றாம் திகதி திங்கள் கிழமை மூர்க்­கத்­த­ன­மான யுத்தக் குற்­றங்­களைப் புரிந்­துள்­ளது.

BEnjamini_Nethanyahu.jpg

இந்த மூர்க்­கத்­த­னத்­துக்கு அமெ­ரிக்கா ஐரோப்பா என்­பன பூரண ஆத­ரவை வழங்கி உள்­ள­தோடு அர­பு­லக சர்­வா­தி­கா­ரிகள் வழ­மைபோல் மௌனம் காத்து உடந்­தை­யாக இருந்­துள்­ளனர்.

இந்த ஆக்­கி­ர­மிப்பின் போது இஸ்ரேல் அப்­பாவி மக்­களின் வீடு­களை அப­க­ரித்­துள்­ளது. ஆஸ்­பத்­தி­ரிகள் மீதும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதும் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஜெனின் நக­ருக்குள் மருத்­துவ உத­விகள் வராமல் தடுக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்று பலஸ்­தீன சிறு­வர்கள் உட்­பட 12 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். 120 பேர் காயம் அடைந்­துள்­ளனர். 300 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். 38 மணி­நே­ர­மாக இந்தத் தாக்­குதல் நீடித்­துள்­ளது. இஸ்ரேல் இரா­ணுவம் அழிவை தவிர வேறு எதையும் இங்கு நிகழ்த்­த­வில்லை என்று சம்­ப­வத்தை நேரில் கண்ட பலர் தெரி­வித்­துள்­ளனர்.

ஏற்­ப­டுத்­தப்­பட்ட பேர­ழி­வுகள் மிகவும் அவ­நம்­பிக்­கை­யான எதிர்ப்­பார்ப்­பு­க­ளையும் தாண்டி உள்­ளது. இந்த அகதி முகாம் பிர­தே­சத்தில் உள்ள கட்­டி­டங்­களில் 80 சதவீத­மா­னவை முழு அளவில் அல்­லது பகுதி அளவில் நாச­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜெனின் நகர உள்­ளு­ராட்சி அதி­கா­ரிகள் மதிப்­பிட்­டுள்­ளனர்.

ஜெனின் நகர வெளிப்­ப­கு­தியில் அமைந்­துள்ள பெரிய அள­வி­லான ஓர­ளவு நிரந்­த­ர­மான சுமார் 14 ஆயிரம் பேர் வசிக்கும் அகதி முகாம் மீது இரண்டு தினங்­க­ளாக தொடர் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. பலஸ்­தீன ஆயு­த­தா­ரி­க­ளுடன் கிட்­டத்­தட்ட ஒரு யுத்­த­மாக மாற்­றப்­பட்ட இந்த தாக்­குதல் நீர் மற்றும் மின்­சார விநி­யோகம், சுகா­தார வச­திகள் போன்ற உள் கட்­ட­மைப்பு வச­திகள் மீது வேண்­டு­மென்றே பர­வ­லாக தாக்­குதல் நடத்தும் விதத்தில் அமைந்­தி­ருந்­தது.

முஸ்­தபா பெடோரி என்ற பத்தி எழுத்­தாளர் தெரி­வித்­துள்ள கருத்தின் படி, ஜெனின் முகாம் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் தாங்கள் வெற்றி ஈட்­டி­ய­தாக இஸ்ரேல் அறி­விக்­கலாம். ஆனால், அது உலகில் மிகவும் நவீ­ன­மான ஆயுத வச­தி­களைக் கொண்ட ஒரு இரா­ணுவம், பெரும்­பாலும் யுத்த அனு­ப­வமோ அல்­லது பயிற்­சியோ அற்ற பொது­மக்­களைக் கொண்ட ஒரு சுதந்­திர போராட்டக் குழு­வுக்கு எதி­ராகப் பெறப்­பட்ட ஒரு வெட்கக் கேடான, கேவ­ல­மான வெற்றி அறி­விப்­பா­கவே அமையும்.

இஸ்­ரேலின் வல்­லமை மிக்க இரா­ணுவ ஆற்­றல்­களால், அது தற்­போது பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் 'ஜெனின் நோய்க்­குறி'யை ஒரு போதும் கொன்று விட முடி­யாது என்று தெரி­வித்­துள்ளார்.

மேற்குக் கரை பிர­தே­சத்தில் இஸ்­ரேலின் கால­ணித்­துவம் தான் நெத்­தன்­யா­ஹுவின் நிகழ்ச்சி நிரலில் மேல் மட்­டத்தில் இருக்கும் விட­ய­மாகும். பலஸ்­தீ­னர்­க­ளிடம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்ட பூமியில் சட்­ட­வி­ரோ­த­மாகக் குடி­யேற்­றப்­பட்ட யூதர்­க­ளுக்­காக மேலும் ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்கு நெத்­தன்­யா­ஹுவின் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் அளித்­துள்­ளது.

கைப்­பற்­றப்­பட்ட பூமியில் இவ்­வா­றான குடி­யேற்­ற­ங­களை அமைப்­பது சட்ட விரோ­த­மா­னது என்­பது அமெ­ரிக்­கா­வுக்கும் ஐக்­கிய இராச்­சி­ய­த்­துக்கும் நன்­றாகத் தெரியும். இருந்­தாலும் இந்த ரவுடி ராஜ்­ஜி­யத்­துக்கு சர்­வ­தேச சட்­டங்கள், மனித உரிமைப் பிர­க­ட­னங்கள், பலஸ்­தீ­னத்தில் மூர்க்­கத்­த­ன­மான இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பை முடி­வுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஐக்­கிய நாடுகள் தீர்­மா­னங்கள் என எல்­லா­வற்­றையும் மீறி முழு­மை­யான சட்ட விடு­பாட்டு உரி­மை­யுடன் இதைச் செய்­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

உண்­மையில், இஸ்­ரே­லுக்கு அமெ­ரிக்கா வழங்கி வரும் எல்­லை­யற்ற ஆத­ரவு என்­பது ஒன்றும் புதி­யது அல்ல. ஆனால் அது கூட இடம்­பெ­யர்ந்த பலஸ்­தீ­னர்கள் மீண்டும் மீண்டும் வந்து போரா­டு­வார்கள் என்ற நிலையை மாற்றப் போதில்லை.

தங்­க­ளது எதிரி எந்­த­ளவு பலம் பெருந்­திய ஒரு சக்தி என்­பதைப் பற்றி அவர்­க­ளுக்கு எந்தக் கவ­லையும் இல்லை. ஆனால், இந்த யதார்த்­தத்தை இஸ்­ரேலும் அதன் நேச அணி­களும் எப்­போது புரிந்து கொள்ளப் போகின்­றன என்­பது தான் கேள்வி.

பலஸ்­தீன சம்­ப­வங்­களின் கோர்­வைப்­படி இஸ்ரேல் அதன் நோக்­கத்தில் வெற்றி பெறவே இல்லை. ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகுதி என சொல்­லப்­படும் ஜெனின் பிர­தே­சத்­துக்குள் கூட இஸ்­ரே­லிய படை­களால் ஆழ­மாக ஊடு­ருவ முடி­ய­வில்லை என்­பதே இஸ்ரேல் அடைந்­துள்ள தோல்­வியின் முக்­கி­ய­மான அறி­கு­றி­யாகும். அண்­டைய பிர­தே­ச­மான டமாஜ்ஜில் நடந்த யுத்தம் இதை தெளி­வாக கோடிட்டுக் காட்­டு­கின்­றது.

இஸ்ரேல் இரா­ணுவத் தக­வல்­களின் படி 3,000 படையினர் இந்த ஆக்­கி­ர­மிப்பில் பங்­கேற்­றுள்­ளனர். நூற்­றுக்­க­ணக்­கான இரா­ணுவ வாக­னங்கள், ஆளில்லா விமா­னங்கள் இன்னும் பல்­வேறு வித­மான இரா­ணுவ உப­க­ர­ணங்­களும் இதில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஜெனின் நகரில் உள்ள வதி­வி­டங்கள் அணைத்­தையும் முற்­றாக அழித்து விடு­வ­துதான் இந்த ஆக்­கி­ர­மிப்பின் நோக்­க­மாக இருந்­துள்­ளது. பலஸ்­தீ­னர்கள் இந்த ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரா­கவும், தமது சுதந்­தி­ரத்­துக்­கா­கவும் சுய கௌர­வத்­துக்­கா­கவும் மட்­டுமே போராடி வரு­கின்­றனர்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை நிபு­ணர்கள் குழு­வொன்று இஸ்­ரேலின் கொடூ­ரங்கள் சர்­வ­தேச சட்­டங்­களை கடு­மை­யான அளவில் மீறி உள்­ளன, அது பிர­யோ­கித்­துள்ள படைப் பல­மா­னது யுத்தக் குற்­றங்­க­ளுக்கு இணை­யா­னது என பிர­க­டனம் செய்­துள்­ளது.

2002 ஆம் ஆண்டில் ஜெனின் முகாம் அழிக்­கப்­பட்­டதன் பின் அங்கு இடம்­பெற்­றுள்ள மிக மோச­மான மிகக் கொடூ­ர­மான தாக்­குதல் இது­வாகும். விமானத் தாக்­குதல் உட்­பட கடந்த இரு தசாப்­தங்­களில் இடம்­பெற்­றுள்ள மிகக் கடு­மை­யான தாக்­குதல் இது ­வென்று அந்த நிபு­ணர்கள் குழு தெரி­வித்­துள்­ளது.

இஸ்ரேல் தாக்­கு­தலின் பிர­தான இலக்­கு­களில் ஒன்­றாக பலஸ்­தீன மக்­க­ளுக்­கான சுகா­தார கட்­ட­மைப்பு காணப்­பட்­டது. காயம் அடைந்­த­வர்­களை நெருங்க விடாமல் பல அம்­பி­யூ­லனஸ் வண்­டிகள் தடுக்­கப்­பட்­டுள்­ளன. ஜெனின் பொது வைத்­திய சாலை மீது இஸ்ரேல் படைகள் கண்ணீர் புகைக் குண்­டு­க­ளையும் பிர­யோ­கித்­துள்­ளனர்.

பலஸ்­தீன மக்­க­ளுக்­கான ஒரு கூட்டுத் தண்­ட­னை­யாக இந்தத் தாக்­குதல் காணப்­பட்­டது. இஸ்­ரே­லிய அதி­கா­ரி­களின் பார்­வையில் இவர்கள் தமது பாது­காப்­புக்­கான ஒட்டு மொத்த அச்­சு­றுத்­த­லாகக் காணப்­ப­டு­கின்­றனர் என்று ஐ.நா குழு மேலும் தெரி­வித்­துள்­ளது.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன பகு­திக்குள் வாழும் பலஸ்­தீன மக்கள் சர்­வ­தேச சட்­டங்­களின் கீழ் பாது­காக்­கப்­பட்ட மக்­க­ளாகக் கரு­தப்­ப­டு­ப­வர்கள். அவர்­க­ளுக்கு குற்­ற­மற்­ற­வர்கள் என்ற அனு­மானம் உட்­பட எல்­லா­வி­த­மான உரி­மை­களும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களால் அவர்­களை ஓட்­டு­மொத்­த­மாக அச்­சு­றுத்­த­லாக இருக்­கின்­றார்கள் என்ற ரீதியில் நடத்­தவும் முடி­யாது. கைப்­பற்­றப்­பட்ட பலஸ்­தீன பூமியில் எஞ்­சி­யுள்ள பகு­தி­க­ளையும் மேலும் மேலும் தம்­மோடு இணைத்துக் கொள்­ளவும், பலஸ்­தீன மக்­களை இடம்­பெ­ய­ரவும் வெளி­யேற்­றவும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் முடி­யாது என்­ப­தையும் ஐக்­கிய நாடுகள் நிபு­ணர்கள் குழு சுட்­டிக்­காட்டி உள்­ளது.

பிர­தம மந்­திரி பெஞ்­சமின் நெத்­தன்­யா­ஹுவின் அர­சாங்கம் வல­து­சாரி கட்­சி­களின் ஒரு கூட்­டணி அர­சாங்கம். இது தீவிரப் போக்கு பாசிஸவாதி­க­ளையும் உள்­ள­டக்­கி­யது. மேலும் இந்தக் கூட்­டணி மேற்குக் கரைப் பிர­தே­சத்தின் சட்­ட­வி­ரோத குடி­யேற்றப் பகு­தி­களில் மிகப் பெரிய தளத்­தையும் கொண்­டுள்­ளது.

இந்த பயங்­க­ர­வாத கொலை­கார பிர­சா­ரத்தை தர்க்க ரீதி­யாக ஒரு முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு இஸ்ரேல் அர­சாங்கம் தயா­ராகி வரு­கின்­றது. அதற்­கான வழி­மு­றை­யாக இலட்­சக்­க­ணக்­கான பலஸ்­தீன மக்­களை பல­வந்­த­மாக வெளி­யேற்றி மேற்குக் கரைப் பகு­தியை முற்­றாக இஸ்­ரே­லுடன் இணைத்துக் கொள்ளும் கைங்­க­ரி­யத்தில் அது ஈடு­பட்­டுள்­ளது.

மேற்குக் கரைப் பிர­தே­சத்தில் இருந்து ஒட்­டு­மொத்த அரபு மக்­க­ளையும் வெளி­யேற்­றி­விட்டு அந்தப் பிர­தே­சத்தை அப­க­ரித்து அதில் யூத குடி­யேற்­றங்­களை நிறுவி இஸ்­ரே­லுடன் இணைத்துக் கொள்­வதில் தாங்கள் திட­சங்­கற்பம் பூண்­டுள்­ள­தாக இஸ்­ரே­லிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பாஸிஸ அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் பிர­தி­நி­தி­களும் மிகவும் வெளிப்­ப­டை­யாகப் பேசி வரு­கின்­றனர்.

இஸ்ரேல் 1947 - 1948 காலப் பகு­தியில் பல­வந்­த­மாக ஸ்தாபிக்­கப்­பட்ட போது அரபு மக்­க­ளுக்கு எதி­ராக தாங்கள் கையாண்ட அதே கொள்­கையை மீண்டும் பின்­பற்றி அமுல் செய்யப் போவ­தா­கவும் அவர்கள் பகி­ரங்­க­மாகக் கூறு­கின்­றனர்.

இந்தப் பிர­சாரம் இன்று இன­ஒ­ழிப்பு பிர­சாரம் என அடை­யாளப்படுத்­தப்­ப­டு­கின்­றது. பலஸ்­தீ­னத்தில் அரபு மக்கள் செறி­வா­கவும் பெரும்­பான்­மை­யா­கவும் வாழ்ந்த பகு­தியை இஸ்­ரே­லுடன் இணைத்து அந்தப் பிர­தே­சத்தை யூதர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பிர­தே­ச­மாக மாற்­றி­ய­மைப்­ப­துதான் இந்தத் திட்டம்.

மேற்குக் கரையில் இஸ்­ரேலின் மூர்க்­கத்­தனம் அமெ­ரிக்­காவின் முழு அள­வி­லான சம்­மதம் மற்றும் அனு­ம­தி­யு­ட­னேயே இடம்­பெ­று­கின்­றது. ஜோ பைடன் நிர்­வா­கமும் நிச்­ச­ய­மாக இந்தச் செய­லுக்கு பச்சைக் கொடி காட்டி உள்­ளது என்­பதும் கண்­கூ­டாகத் தெரி­கின்­றது.

வெள்ளை மாளிகை ஊடக தொடர்­பாளர் கெரின் ஜீன் பியர் கடந்த வாரம் தெரி­வித்­துள்ள கருத்தில் 'ஹமாஸ், பலஸ்தீன ஜிஹாத் மற்றும் பயங்கரவாத குழுக்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கும் அதன் மக்களுக்கும் உள்ளது என்பதை நாம் உறுதி செய்வதோடு அதற்கு பூரண ஆதரவும் வழங்குகின்றோம்.

இஸ்ரேல் எமது நெருங்கிய  நண்பனும் பங்காளியும் ஆகும். அவர்களின் தேசிய பாதுகாப்போடும் பாதுகாப்பு அதிகாரிகளோடும் நாம் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். எமது தொடர்புகள் பற்றி நாம் வாசித்துக் காட்டுவதற்கு எதுவும் இல்லை. நாம் இஸ்ரேலுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம்' என்று கூறி உள்ளார்.

இவ்வாண்டு ஆரம்பம் முதல் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இதுவரை 155 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது 2002 ஆம் ஆண்டின் இரண்டாவது இன்திபாதா போராட்டத்தின் பின்னரான பெரும் எண்ணிக்கையாகும்.

https://www.virakesari.lk/article/160134

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.