Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திரத் தமிழ்நாடு!

Featured Replies

தமிழ்நாடு என்பது திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்பதானது இன்னது என்றும், வெகுகாலமாகவே அய்ரோப்பிய அறிஞர் முதல் பல உலக ஆராய்ச்சிக்காரர்களாலும், இந்திய சரித்திர ஆராய்ச்சியாளராலும் எல்லை காட்டி வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் நான் இது விஷயமாகப் பேசுகிற இடங்களில் எல்லாம் இதைப்பற்றி விளக்கிப் பேசியே வந்திருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைத்தாய் மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் -

இது திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந்ததேயாகும். அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன் மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது.

இந்த விஸ்தீரணத்திற்குட்பட்ட முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லாரும் திராவிடர்கள் என்ற தலைப்பின் கீழ்தான் வருவார்கள். இவற்றை விளக்குவதோ மற்றும் இது சம்மந்தமாக இனியும் விளக்கிச் சொல்லுகிறதோ, கஷ்டமான காரியம் அல்ல என்பதோடு, இதுவரை சாதாரண நிலையில், ஆராய்ச்சியில், விவகாரத்தில் இவை வழங்காத விஷயங்கள் என்றும் சொல்லிவிட முடியாது என்று கருதுகிறேன்.

மேற்கண்ட விளக்கத்திற்குட்படாத தமிழரல்லாதவர்கள் இருந்தால் அதைப்பற்றி என்ன? என்று கேட்பீர்களானால், அவர்களுக்குள்ள உரிமைகள் அவர்களது முன்னேற்றத்துக்கு ஏதுவான அபிலாசைகள் நியாயப்படி காக்கப்படும். யாவரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. திராவிடநாட்டில்

பல மொழிகள் இருக்கின்றனவே என்றால், இப்போது காங்கிரஸ் தீர்மானித்து இருப்பதை அடிப்படையாகக் கொண்டே, திராவிடதேசம் என்பது - அவசியப்பட்டால் திராவிட மொழிவாரியான மாகாணங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

உதாரணமாக, பிரிட்டனானது ஒரு தேசமாகவும், ஒரு ஆட்சியாகவும், ஒருசமயம், ஒரே சமுதாயக்கொள்கை கொண்டதாகவும் இருந்த போதிலும்- வேல்ஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய மாகாணங்கள் பெரிதும் மொழிவாரியாக இருப்பது போலும், மற்றும் பல மேல்நாடுகளில் இருக்கும் உள்மாகாணப்பிரிவுகள் போலும் திராவிடம் என்ற தலைதேசத்தில் மொழிவாரி மாகாணங்கள் இருக்கும்.

இதை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கேட்பீர்கள். பூரண

சக்தி திராவிடத்திற்கு ஏற்பட்டு சர்வதேச சங்கத்தோடு ஒரு தனி சயேட்சை நாடாக ஆகும் வரை சிலோன், பர்மா போலும் அல்லது சில சுதேச

சமஸ்தானங்களான தனி சுயநிர்ணய நாடுகள் போலும் பிரிட்டனுடைய பாதுகாப்பின் மூலம் பாதுகாக்கப்படும்.

இந்தியாவின் மற்ற பாகங்களுடன் திராவிடம் வைத்திருக்கும் சம்மந்தம் எப்படியிருக்கும்? என்று கேட்கிறீர்கள். எப்படியென்றால், மேற்கண்ட பர்மா, சிலோன் ஆகிய நாடுகள் மற்ற நாடுகளுடன் வைத்திருக்கும் சம்மந்தம் போல இருந்து கொண்டு - திராவிடர் அல்லாத போன்ற வெளிநாட்டார் திராவிடத்தில் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் முதலியவற்றில் ஆதிக்கம் செலுத்தாமலும், திராவிட செல்வத்தை சுரண்டிக் கொண்டு போகாமலும் பார்த்துக்கொண்டு நேச தேசமாய் இருந்துவரும். திராவிடதேசம் பிரிக்க முடியாதது என்கிறீர்கள். அதற்குப்பல சரித்திர ஆதாரம் இன்றைய கலை சமுதாய பழக்கவழக்கம் முதலியனவும், பிரத்தியேக ஒற்றுமை எல்லை முதலியவைகளும் திராவிடம் என்பதை மிகச்சுலபமாகப் பிரித்துக்காட்டக் கூடியதாகவே இருக்கிறது.

இந்தியா ஒரு பெரியநாடாக தேசமாக இருப்பதால் நன்மை என்கிறீர்கள். இன்று இந்தியா 40 கோடி ஜனத்தொகையும், பல ஆயிரக்கணக்கான மைல் சுற்றளவும், பல சாதிசமய கூட்டுறவுடனும், பல மாகாண மக்களுடன்

கலந்து ஒருநாட்டினராயும் இருந்து வருவதன் மூலமே ஒரு சிறுபான்மையார் கட்டுப்பாடான ஒற்றுமையாயிருந்து தந்திரத்தில் ஒவ்வொருமாகாண பெருங்குடி மக்களையும், அவர்களுக்குள் ஏற்பாடு செய்துவிட்ட பாகுபாடுகளால் சிறுபான்மையினராக்கி அவர்கள் மீது சுலபத்தில் ஆதிக்கம் செலுத்தவும்,

ஒருமாகாணத்தை மற்ற மாகாணத்தானுக்குக் காட்டிக்கொடுத்து,

ஆதாயம் பெற்று அதன் பயனாய் சிறுபான்மையினரே மற்ற பெரும்பான்மையானவர்களை அடக்கி ஆளவும் முடிந்து வந்ததுடன், இனியும் அப்படித்தான் முடிகிறதே தவிர தாங்கள் கூறுகிறபடி ஒன்றாகயிருந்தால் ஒற்றுமையும், பலமும் நாட்டிற்கு ஒரு நன்மையும் செய்துவிடவில்லை.

இதனால் பரந்தநாடும், அந்த கலை சமுதாயம், மதம் முதலியவைகளும் பொருத்தமில்லாத மக்களும் ஒன்றாயிருப்பதால் சுலபத்தில் மற்றவர்களால் ஏமாற்றப்பட முடிகிறதே தவிர முற்போக்கு அடையவோ, உரிமை பெறவோ முடிவதில்லை.

இன்றும் சரித்திரம் பார்க்கலாம். தனித்திருந்த காலத்தில் திராவிடம் முதலியநாடுகளில் மக்களின் நிலைமைகளையும் சமுதாயமும், பொருளியல், அரசியல், வீரம், சுயமரியாதை உணர்ச்சி ஆகியவை எப்படி இருந்தன? இன்று எப்படி இருக்கின்றன? என்று பார்த்தாலே தங்கள் காரியங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் நிலைமை நல்லதா? கெட்டதா? என்று விளங்கும்.

அகல உழுவதைவிட ஆழ உழுவது மேலானது- என்பது போல்,

இம்மாதிரி நாட்டை பிரித்துக்கொண்டு அதற்கேற்றபடி நடந்து முன்னேற்றமடைவதாலேயே மற்ற மாகாணக்காரர்கள் நம்மைப்பின்பற்ற வேண்டியவர்களேயாவார்கள். ஏனெனில் இன்று நாட்டில் ஒற்றுமைகெட்டு நலம்குன்றி இழிநிலையில் இருப்பதற்கு காரணம், இந்நாட்டு மக்களுக்குத் தாங்கள் ஒரே சதோரர் என்ற உணர்ச்சியில்லாததேயாகும்.

இதற்கு முக்கியக்காரணம், தமிழர்கள் அல்லது திராவிடர்கள் பிறவியில் பிறவியில் உயர்வு தாழ்வு கொள்கை இல்லாதவர்களாயிருப்பதும், திராவிடத்தில் புகுந்து குடியேறி ஆதிக்கம் கொண்ட ஆரியர் பிறவியில் உயர்வுதாழ்வு என்பதையே அடிப்படைக்கொள்கையாகக்கொண்ட சமய சமூகததவராயிருப்பதும் ஆகும்.

தமிழ்நாடு தமிழருக்கே என்று இப்போது நடைபெற்று வரும் பிரச்சாரத்தைப்பற்றி தமிழ்நாட்டில் எங்கும் பேசப்பட்டு வருகிறது. நம் எதிரிகளும், தங்கள் சுயநலத்திற்காகவே நம் கூட்டத்தில் இருக்கும் வேசதாரிகளும் திரித்துக்கூறுவதும், இதைப்பற்றி விசமப்பிரச்சாரம் செய்வதும், இதற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை உண்டாக்க சூழ்ச்சி செய்வதுமான காரியங்கள் பற்றிக் கேள்விப்படுவதோடு, சில விசயங்களை நேரிலும் பார்க்கிறோம்.

இதுவிசயமாக நான் தூத்துக்குடியில் பேசிய பேச்சை வைத்து மெயில் பத்திரிக்கை எழுதிய கண்டனத்திற்கு, சென்னை மெமொரியல் ஹலில் சொன்ன சமாதானம் சமீபத்தில் நமது பத்திரிக்கையில் வரக்கூடும்.

ஆனாலும் மெயில் பத்திரிக்கைக்கு எழுதியனுப்பிய விளக்கம் 20.11.1939- ந் தேதி மெயிலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதுடன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.