Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிபரின் சகோதரர்களே ஆள் கட்த்துகிறார்கள்! கொழும்பு எம்.பி. மனோ கணேசன் அதிரடி பேட்டி!- -குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிபரின் சகோதரர்களே ஆள் கட்த்துகிறார்கள்! கொழும்பு எம்.பி. மனோ கணேசன் அதிரடி பேட்டி!

pg11st9.jpg

இந்திய வம்சாவளித் தமிழர், நாற்பத்தேழு வயது இளைஞர்... எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் உள்ள ‘மேலக மக்கள் முன்னணி’ கட்சியின் தலைவர்... சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையின் தலைநகரான கொழும்பு மாவட்ட மக்களின் எம்.பி. மனோ கணேசன். இவரது நெருங்கிய நண்பரும் சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ், கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். அதே அளவு கொலை அச்சுறுத்தல் இவருக்கும் உண்டு என்றாலுங்கூட, இலங்கை ராணுவத்தின்_ போலீஸின் பாதுகாப்பில் இருந்துகொண்டே இலங்கை அரசையும் இலங்கை அதிபரையும் மனோ கணேசன் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த அவரது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு வந்திருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

இலங்கையில் இப்போது நிலவும் சூழ்நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

‘‘மனித உரிமைகள் மதிக்கப்படாத ஒரு காட்டாட்சிதான் அங்கே நடக்கிறது. ஆனால், இலங்கையில் நடக்கும் விஷயங்கள் இப்போது உலக அரங்கைப் போய் அடைந்து விட்டது. அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஹாபர் இலங்கைக்கு வருகிறார். மிகவும் தைரியமான, நேர்மையான பெண்மணி அவர். இதெல்லாம் எங்களின் பிரசாரம் மூலமாகக் கிடைத்த வெற்றிகள்தான். இதன் காரணமாக இலங்கை அரசு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. உலக அரங்கில் மனித உரிமை மிகப் பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.’’

உங்கள் கருத்துக்களை தைரியமாக வெளியிட முடிகிறதா? உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாகச் சொல்லப்படுகிறதே...?

‘‘எனக்கும் மிகுந்த அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. மக்கள் கண்காணிப்புக் குழு(சிவில் மானிட்டரிங் கமிஷன்)வின் ஒருங்கிணைப்பாளர் நான். இந்த அமைப்புத்தான் இன்று இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை உலக அரங்குக்குக் கொண்டு செல்கிறது. அதில் முக்கியப் பொறுப்பில் இருந்த ரவிராஜைக் கொன்று விட்டார்கள். என்னைக் கொல்ல முடியவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அவரைக் கொன்ற பிறகு, எனக்கு பாதுகாப்பு இல்லையென்பதால், நான் இந்தியாவில் வந்து இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தேன். அதன் பிறகு இந்திய அரசு, அமெரிக்க அரசு, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கை அரசு ஓரளவு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் அது நம்பத்தகுந்தது அல்ல. அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தில் நடந்த அந்தக் கொலைக்கும் அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, நான் அரசையும் ராணுவத்தையும் போலீஸையும் கடுமையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இலங்கை வரலாற்றிலேயே தமிழர்கள் மீது எந்தக் காலத்திலும் இந்தளவுக்கான கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதில்லை என்பதுதான் உண்மை.’’

சர்வதேச அரங்கில் மனித உரிமைகளாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் இலங்கையில் மதிக்கப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

‘‘தமிழர்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு வீதியோரமாக வீசியெறியப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ் வியாபாரிகள், தனவந்தர்கள் கடத்திச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு, ஒரு பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். கடத்தப்படுதல், காணாமல் போதல் என்பது இலங்கையில் சாதாரணமாக நடக்கிறது. இது சம்பந்தமான முழு விவரங்களையும் இலங்கையில் உள்ள இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் வழங்கியிருக்கின்றேன். எனவே, இந்திய அரசோ தமிழக அரசோ, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல முடியாது.’’

இதுகுறித்து இந்திய அரசின் நடவடிக்கை எப்படி இருக்கிறது?

‘‘இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்னை என்பது மிகப் பெரிய அரசியல் பிரச்னை. இங்கே நான் குறிப்பிடுவது மனித உரிமைப் பிரச்னை மட்டும்தான். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள் போன்ற ஏனைய சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொண்டு, இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ஆனாலும் இந்திய வம்சாவளியினர் பிரச்னையில் இன்னும் அதிகமாக இந்தியா தலையிட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதற்கான தார்மீகக் கடமை அவர்களுக்கு உண்டு. இலங்கைப் பிரச்னை என்பது அங்குள்ள தமிழர்களின் பிரச்னை என்றாலும், தென்னிலங்கையில் உள்ள தமிழர்கள் இங்கிருந்து பிழைப்புக்காகப் போனவர்கள். எனக்கு இதோ மண்ணச்சநல்லூர் பக்கத்தில் உள்ள தத்தமங்கலம்தான் சொந்த ஊர். எனது மனைவி இந்தியாவில் பிறந்த எனது உறவுப் பெண்தான். இதைப் போலத்தான் தென்னிலங்கையில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தியாவில் சொந்த ஊரும் உறவுகளும் இருக்கின்றன.’’

இலங்கையில் யார் ஆள் கடத்துகிறார்கள்? அந்தப் பணம் யாருக்குப் போகிறது?

‘‘இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷயின் சகோதரர். இன்னொரு சகோதரர் ஜனாதிபதியின் ஆலோசகர். இப்படி அதிகாரத்தில் இருக்கும் இலங்கை அதிபரின் சகோதரர்களுக்கும் இந்தக் கடத்தலுக்கும் தொடர்பு உண்டு என்று இலங்கை முழுவதுமே ஒரு பரவலான பேச்சு இருக்கிறது. இது ஏற்கெனவே பேசப்பட்ட விஷயம். இவர் (கோத்தபாய ராஜபக்ஷ) ஒரு முறை பகிரங்கமாக போலீஸ் மாஅதிபர்(போலீஸ் ஐ.ஜி.யைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்), ராணுவத் தளபதிகள், ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் பேசும் போது, ‘சிங்கள தீவிரவாத கட்சியான ஜே.வி.பி. (ஜனதா விமுக்தி பெரமுன) அங்கத்தினர்களை நாங்கள் கடத்தவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தினர்கள் கடத்தப்படவில்லை. பிறகு ஏன் கூச்சல் போடுகிறீர்கள்?’ என்று கேட்டார். அப்போதே இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதற்கு தமிழர்களைத்தானே நாங்கள் கடத்துகிறோம். என்பதுதான் அர்த்தம். அதனால் இலங்கை அரசாங்கத்துக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பது நிரூபணமாகிவிட்ட உண்மை. இலங்கையில் அதிலும் குறிப்பாக, கொழும்பில் பல்வேறு காவல்சாவடிகள், சோதனைச்சாவடிகள், வீதிச் சோதனைச் சாவடிகள் உள்ளன. ஓர் அணுவும் அரசாங்கத்தை அறியாமல் அங்கிங்கு அசைய முடியாது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நூற்றைம்பது கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. வெள்ளை வேனில் வரும் தங்களை அடையாளம் காட்டாத நபர்கள், பட்டப்பகலிலேயே தமிழர்களின் இல்லங்களுக்குச் சென்று, வணிக நிலையங்களுக்குச் சென்று அவர்களை கடத்திச் செல்கிறார்கள். எந்த ஒரு கடத்தல் வாகனமும் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவோ, கடத்திய நபர்கள் பிடிபட்டதாகவோ, கடத்தப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டதாகவோ தகவல் இல்லை. ஆகவே, கடத்தல்காரர்களுக்கும் காவல்சோதனைச் சாவடியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு புரிந்துணர்வு இருப்பது வெட்டவெளிச்சமாகிறது. இலங்கை பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் அதிபரின் தம்பியான கோத்தபாய ராஜபக்ஷ தனது நம்பிக்கைக்குரிய குறிப்பிட்ட சில ராணுவ வீரர்களை வைத்தே இந்தக் கடத்தல் வேலைகளைச் செய்கிறார். அவர்கள் செக்போஸ்ட்டுகளில் காட்டும் ஒரு ரகசிய அடையாள அட்டையைக் கண்டால் எந்தப் பாதுகாப்பு அதிகாரியும் அந்த வாகனத்தைச் சோதனை போடுவதில்லை என்பது இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்த ரகசியமாகப் போய் விட்டது.’’

இந்தக் கடத்தல் சம்பவங்கள் குறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?

‘‘அரசு ஆரம்பத்தில் ‘இப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை’ என்று சொன்னது. நாங்கள் பட்டியல் வெளியிட்டு காணாமல் போனவர்களின் ஐடி கார்ட் எண், புகார் கொடுக்கப்பட்ட காவல்நிலைய பதிவு எண், காணாமல் போனவர்களின் புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டதும் ‘ஆமாம் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசுக்குக் கெட்டபெயர் ஏற்படுத்துவதற்காக யாரோ இப்படிச் செய்கிறார்கள்’ என்று சொன்னார்கள். கடும் சோதனைகளுக்குட்படுத்தப்படும

இன்னும் நான்கு மாதங்களில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று மனோ கணேசன் கூறுகின்றார். கட்சித்தாவல்கள் தவிர சிறீ லங்காவில் இதுவரை பெரிய அரசியல் மாற்றங்கள் வந்ததாக வரலாறு இல்லை. கட்சித் தாவல் மூலம் ஏற்படும் அரசியல் மாற்றத்தினால் தமிழர் பிரச்சனையில் ஒருபோதும் நல்ல மாற்றங்கள் வரப்போவதில்லை.

Edited by ஞானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.