Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு மயிலத்தமடுவுக்குச் சென்ற மத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை 6 மணிநேரம் தடுத்து வைத்திருந்த பின் விடுவித்த பௌத்த தேரர் கொண்ட குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

22 AUG, 2023 | 07:12 PM
image
 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனை மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது, காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு செவ்வாய்க்கிழமை (22) சென்ற சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை பௌத்த தேரர் தலைமையிலான காணி அபகரிப்பு குழுவினர் வழிமறித்து தடுத்து வைத்தனர்.

WhatsApp_Image_2023-08-22_at_02.30.18__1

குறித்த பிரதேசத்தில் காணி அபகரிப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பாகவும் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (22) காலை மயிலத்தமடு மாதவனை பிரதேசத்திற்கு  வாகனங்களில் இரு அருட்தந்தையர்கள், ஒரு மெனளவி, இரு இந்து குருக்கள், 3 ஊடகவியலாள்கள் உட்பட 18 பேர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு பகல்  ஒரு மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

WhatsApp_Image_2023-08-22_at_03.57.19.jp

இந்த நிலையில் மட்டக்களப்பு எல்லை பகுதியில் அமைந்துள்ள கம்பி பாலத்திற்கு அருகாமையில் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த பல்சமய மத தலைவர்களின் வாகனங்களை கம்பி பாலத்தில் குறுக்கே  தேரர் ஒருவருடனான நூற்றுக்கு  மேற்பட்வர்கள் ஒன்றிணைந்து வீதி தடையை போட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களை பிடுங்கி எடுத்து அவர்களை தடுத்து வைத்ததுடன் இந்து குருக்கள் ஒருவரை தாக்க முற்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

WhatsApp_Image_2023-08-22_at_03.05.23__1

இச் சம்பவத்தையடுத்து கரடியனாறு மற்றும் அரங்கலாவ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கொண்ட பொலிஸ் குழுவினர் அந்த பகுதிக்குச் சென்று பௌத்த தேரர் உடனான குழுவினருடன் பேச்சில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவு செய்த காட்சிகள் அனைத்தையும் தேரர் அச்சுறுத்தி அழித்ததுடன் இந்த செய்தியை பிரசுரிக்கக் கூடாது என கடிதம் ஒன்றை வற்புறுத்தி பெற்றுள்ளனர்.

WhatsApp_Image_2023-08-22_at_03.58.43.jp

தொடர்ந்தும் பௌத்த தேரர் உடனான குழுவுடன் பொலிசார் பேச்சவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் 6 மணித்தியால தடுத்துவைப்பின் பின்னர் மாலை 6 மணிக்கு விடுக்கவிக்கப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/162956

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அவர்கள் ஊடகவியலாளர்களின் கமராவில் பதிவு செய்த காட்சிகள் அனைத்தையும் தேரர் அச்சுறுத்தி அழித்ததுடன் இந்த செய்தியை பிரசுரிக்கக் கூடாது என கடிதம் ஒன்றை வற்புறுத்தி பெற்றுள்ளனர்.

IMG-4376.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

IMG-4376.jpg

இதைத்தான் நேற்றும் எழுதி இருந்தேன். இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரம் உருவாக்க சந்தர்ப்பம் இருப்பதாக உளவு தகவல்கள் தெரிவிப்பதாக. சிங்கள தீவிரவாதிகளின் திட்ட்ங்களில் இதுவும் ஒன்றாக எடுத்து கொள்ளலாம். எனவே தமிழ் மக்கள் இன்னும் கொஞ்சம் கரிசனையுடன் இருப்பது நல்லது.

முந்தய நாட்களில் வடக்கு நோக்கி செல்லும் வாகனங்கள் காட்டு பகுதிகளில் கடத்தப்பட கதைகள் நிறையவே இருக்கின்றது. இது நாட்டில் சடட ஒழுங்கு சீர் குலைந்து செல்வதை காட்டுகின்றது. ரோட்டில் போறவன் வாறவன் எல்லாம் சடடத்தை கையில் எடுக்கிறான். மலை நாட்டில் தமிழன் குடிசை எல்லாம் அடித்து நொறுக்குகிறான்.

நிலைமை சரியானதாக தெரியவில்லை. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உலக நிறுவனங்கள் , நாடுகள் பார்வையாளர்களாக இருப்பர்களையன்றி உதவ மாடடார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.