Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுப்ரிம் செட்டை விண்ணுக்கு அனுப்புவதற்கு செலவழித்த 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்தது - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

24 AUG, 2023 | 08:38 PM
image
 

(எம்.ஆர்.எம். வசீம். இராஜதுரை ஹஷான்)

இந்தியா சந்திராயன் 1, 2, 3 ஆகியவற்றை சந்திரனுக்கு செலுத்துவதற்காக 263 அமெரிக்க டொலர் மில்லியன் செலவழித்திருக்கிறது. 

ஆனால் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 ஐ செலுத்துவதற்கு 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலழிக்கப்பட்டிருக்கின்றன.

 இது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2008, 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில்  முறையே சந்திராயன் 1, 2, மற்றும் 3 என பாரிய முயற்சியின் மூலமே இந்தியா சந்திரனுக்கு விண்கலத்தை செலுத்தி இருக்கிறது. இந்த 3 நடவடிக்கைகளுக்கும் இந்தியா 623 மில்லின் அமெரிக்க டொலர்களையே செலவழித்திருக்கிறது.

ஆனால்  2012இல் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 செயற்பட்டிருக்கிறது. அதற்காக 320 மில்லியன் அமெரிக்க டொலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்ததது என தெரியாது. அதனால் இது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, 320 மில்லியன் டொலர்களை செலவழித்து சந்திரனுக்கு சென்றார்களோ இல்லையோ நாட்டை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றார்.

இதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில், 2015 இல் இருந்து 2018 வரை நான் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சராக இருந்தேன். ஆனால் அந்த காலப்பகுதியில் சுப்ரிம் செட் தொடர்பில் எனக்கு அறிவுறுத்தப்படவில்லை.  இலங்கையில் யாரும் சுப்ரிம் செட் அனுப்பியது தொடர்பில் எனக்கு தெரியாது என்றார்.

https://www.virakesari.lk/article/163116

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரரின் விண்வெளி முயற்சி - நாமல் தெரிவிப்பது என்ன?

28 AUG, 2023 | 04:47 PM
image
 

இந்தியாவின் சந்திராயன் குறித்தும் தனது சகோரரின் விண்வெளி முயற்சிகள் குறித்தும் நாடாளுமன் உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் விண்கலத்தினை தனது சகோதரர் அனுப்பிய ரொக்கட்டுடன்  தொடர்புபடுத்தி சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் - நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் தனியார் துறை முயற்சியாகவே ரொக்கட்டினை அனுப்பினார், அதில் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தால் மாத்திரமே அது குறித்து கோப் குழுவினர் விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வர்த்தகர் ஒருவரின் முதலீடு குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது, அதில் அரசாங்கத்திற்கு தொடர்பிருந்தால் மாத்திரம் எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்ற விசாரணையை கோரமுடியும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சேற்றை வாரிவீசும் அரசியல் சூழலை அடிப்படையாக கொண்டவை இந்த கருத்துக்கள், இவ்வாறான கருத்துக்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/163366

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.