Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனவாத நெருப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத நெருப்பு

Published By: VISHNU

27 AUG, 2023 | 12:08 PM
image
 

கபில்

பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கான சிறப்­பு­ரி­மையைப் பயன்­ப­டுத்தி, மீண்டும் நீதித்­து­றையின் மீது மோச­மான சேற்றை வாரி­யி­றைத்­தி­ருக்­கிறார் சரத் வீர­சே­கர.

இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுப்­பதில் சரத் வீர­சே­க­ர­வுக்கும் விமல் வீர­வன்ச மற்றும் உதய கம்­மன்­பி­ல­வுக்கும் இடையில் இப்­போது, கடும் போட்டி நில­வு­கி­றது.

முன்னர் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் தான் இன­வாதம் கக்­கு­வதில் முன்­னிலை வகித்து வந்­தனர். அவர்­க­ளுக்கு கடும் போட்­டி­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கிறார் சரத் வீர­சே­கர.

குருந்­தூர்­மலை, 13 ஆவது திருத்­தச்­சட்டம் போன்ற விட­யங்­களைப் பயன்­ப­டுத்தி தமி­ழர்கள் மீது இன­வாதம் கக்­கு­வதில் அவர் குறி­யாக இருக்­கிறார்.

குருந்­தூர்­ம­லையை சிங்­கள பௌத்­தர்­களின் இடம் என்­கிறார். இரா­வ­ணனை சிங்­கள மன்னன் என்­கிறார். தமி­ழர்கள் வந்­தேறு குடிகள் என்­கிறார். எங்கு வேண்­டு­மா­னாலும் புத்­தரை வைத்து வழி­படும் உரிமை தங்­க­ளுக்கு இருப்­ப­தாக கூறு­கிறார்.

இவ்­வ­ள­வையும் கூறி விட்டு தமிழ் அர­சி­யல்­வா­திகள் தான் இன­வாதம் பேசு­கின்­றனர், இன­வாத அர­சியல் நடத்­து­கின்­றனர் என்­றெல்லாம் அவர் குற்­றம்­சாட்­டு­கிறார்.

இலங்­கையில் இன­வாத அர­சியல் முறை இப்­போது கூர்­மை­ய­டையத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

தமிழர் தரப்பில் உரி­மைக்­காக குரல் கொடுப்­ப­வர்­களும், சிங்­கள, பௌத்த ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக குரல் எழுப்­பு­ப­வர்­களும் இன­வா­தி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வா­றா­ன­தொரு அர­சியல் பாரம்­ப­ரி­யத்­துக்குள் தான் இலங்கைத் தீவு பல­ கா­ல­மாக மூழ்கிக் கிடக்­கின்­றது.

அண்­மைக்­கா­ல­மாக சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சியல் இன்னும் மோச­மாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

தமி­ழர்­களின் பூர்­வீக நிலங்­களை அப­க­ரிப்­பது, ஆல­யங்­களை அழித்து, புதிய விகா­ரை­களை கட்­டி­யெ­ழுப்­பு­வது என, சிங்­களப் பேரி­ன­வாத அணு­கு­முறை மோச­ம­டைந்­தி­ருக்­கி­றது. அதற்குக் குறுக்கே நிற்பவர்­களை மோச­மாக விமர்­சிக்­கின்ற போக்கு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்றும் சரத் வீர­சே­கர, உதய கம்­மன்­பில உள்­ளிட்ட இன­வாதப் போக்­கு­டைய உறுப்­பி­னர்கள் பலரும், நாட்டின் நீதித்­து­றையை கேவ­லப்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்­கின்­றனர்.

குருந்­தூர்­ம­லைக்குச் சென்ற சரத் வீர­சே­கர முல்­லைத்­தீவு நீதி­ப­தியின் விசா­ர­ணையில் குறுக்­கிட முயன்ற போது, அவரை அங்­கி­ருந்து வெளி­யேற்­றி­யி­ருந்தார் நீதி­பதி.

அதற்குப் பின்னர், பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர இது சிங்­கள பௌத்த நாடு என்றும், சிங்­கள பௌத்­த­ரான தன்னை வெளி­யேற்­று­வ­தற்கு ஒரு தமிழ் நீதி­பதிக்கு அதி­காரம் இல்லை என்றும் கூறி­ய­துடன் தமிழ் நீதி­ப­திகள் பக்­க­சார்­பாக நடந்து கொள்­வ­தா­கவும் குற்­றம்­சாட்­டினார்.

அதற்கு எதிர்ப்­புகள் வந்­த­வுடன், தனது கருத்து திரி­பு­ப­டுத்­தப்­பட்டு விட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார். குருந்­தூர்­ம­லையில் தமி­ழர்­களால் பொங்கல் வழி­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர், கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர, முல்­லைத்­தீவு நீதி­ப­தியை மன­நோ­யாளி என்றும் அவரை இட­மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

பாரா­ளு­மன்­றமா இது என்று கேள்வி எழுப்பத் தோன்றும் அள­வுக்கு கேவ­ல­மான- இன­வாத விமர்­ச­னங்கள், தமி­ழர்கள் மீது முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. சிங்­கள பௌத்த பேரி­ன­வாத திமி­ருடன் தமி­ழர்­களை எங்கு வேண்­டு­மா­னாலும் கேவ­லப்­ப­டுத்த முடியும் என சரத் வீர­சே­கர போன்­ற­வர்கள் உறு­தி­யாக நம்­பு­கி­றார்கள்.

குருந்­தூர்­ம­லையில் தமி­ழர்கள் பொங்கல் விழாவை முன்­னெ­டுத்­தது, சிங்­கள பௌத்­தர்­களை காயப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக இன்­னொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜயந்த சம­ர­வீர கூறி­யி­ருக்­கிறார்.

குருந்­தூர்­ம­லையில் விகாரை கட்­டப்­ப­டு­வ­தற்கு முன்னர் அங்கு பொங்கல் வழி­பா­டுகள் சைவ மக்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அது­வரை காலமும் பொங்கல் வைத்த போது பௌத்­தர்கள் யாருக்கும் மனம் புண்­ப­ட­வில்லை. இப்­போது மட்டும் புண்­ப­டு­வ­தாக கூறு­கிறார் ஜயந்த சம­ர­வீர.

சரி, 2000 ஆண்­டு­க­ளுக்கு முந்­திய விகாரை இருந்­த­தா­கவே வைத்துக் கொள்வோம். அதனை சிங்­கள பௌத்­தர்­களே அமைத்­தனர் என்றும் வைத்துக் கொள்வோம்.

அத்­த­கைய புரா­தன விகா­ரையை மண்­ணுக்குள் புதைய விட்­ட­தற்­காக, இத்­தனை காலமும் அங்கு வழி­ப­டாமல் போன­தற்­காக ஏன் சிங்­கள பௌத்­தர்­கள வருந்­த­வில்லை.

அந்த விகா­ரையை கைவிட்­ட­தற்­காக ஏன் அவர்கள் வெட்­கப்­ப­ட­வில்லை?

இவ்­வா­றான கருத்­துக்­களின் ஊடாக நாட்டில் மீண்டும் இன­வாத அர­சி­ய­லுக்கு உயிர் கொடுக்க முனை­கி­றார்கள் இவர்கள்.

அடுத்த ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடக்கப் போகி­றது. அதில் மீண்டும் சிங்­கள பௌத்த வாக்­கு­களால் ஜனா­தி­ப­தியை தேர்வு செய்யும் நோக்கம் சரத் வீர­சே­கர போன்­றோ­ருக்கு இருக்கக் கூடும்.

2019 ஜனா­தி­பதி தேர்­தலில் அவர்கள் தனிச் சிங்­கள பௌத்த வாக்­கு­களால் கோட்­டா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி ஆக்­கி­னார்கள். அவர்­களின் அந்த வெற்றி இரண்­டரை ஆண்­டு­க­ளுக்குக் கூட தாக்குப் பிடிக்­க­வில்லை.

சிங்­கள பௌத்­தர்­களின் ஜனா­தி­பதி ஒட்­டு­மொத்த நாட்டு மக்­க­ளையும் துன்­பத்­துக்குள் தள்­ளினார். அதனால் மக்­களால் வெறுக்­கப்­பட்டு விரட்­டப்­பட்டு நாட்டை விட்டே ஓடினார்.

அந்த இடத்­தி­லேயே தனிச் சிங்­கள பௌத்த வாக்­குகள் என்ற இரா­ஜ­தந்­திரம் தோல்­வி­ய­டைந்­தது.

அப்­போது ஆட்­சியை இழந்த ராஜபக் ஷவினர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆட்­சிக்கு கொண்டு வந்து பின்­க­தவால் தங்­களின் ஆட்­சியை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஒரு கட்­டத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக்கும் திட்டம் தான் தங்­க­ளுக்கு சரிப்­பட்டு வரும் என்று அவர்கள் நம்­பி­னார்கள்.

ஆனால், இப்­போ­தைய நிலையில் ராஜ­பக் ஷவினர் மீண்­டெ­ழு­வ­தற்கு முற்­ப­டு­கின்­றனர். அதி­கா­ரத்தை மீளக் கைப்­பற்றும் திட்­டங்­களை வகுக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், ராஜபக் ஷவி­ன­ரையோ அல்­லது சிங்­கள பௌத்­தர்­களால் தெரிவு செய்யக் கூடிய ஒரு­வ­ரையோ தான் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு சரத் வீர­சே­கர போன்­ற­வர்கள் முற்­ப­டு­கின்­றனர்.

தனிச் சிங்­கள பௌத்­தர்­களால் மீண்டும் ஒரு ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வதன் மூலம், தமிழ்ப்­பேசும் சமூ­கங்­களின் அர­சியல் வகி­பா­கத்தை குறைப்­ப­தற்கு முனை­கின்­றனர்.

தமிழ்ப்­பேசும் சமூ­கங்கள், அர­சி­யலில் செல்லாக் காசாக மாற்­றப்­பட்டால் தான் வடக்கு, கிழக்கை சிங்­கள பௌத்­த­ம­ய­மாக்கும் திட்­டங்­களை முன்­னெ­டுக்­கலாம்.

அதற்­காக மீண்டும் சிங்­கள பௌத்­தர்­களின் ஆணை பெற்ற ஜனா­தி­பதி ஒரு­வரைத் தெரிவு செய்ய வேண்­டு­மானால்- இன­வாத நெருப்பு பற்­றி­யெ­ரிய வேண்டும்.

மிக அண்­மையில் தான் சிங்­கள பௌத்­தர்­களின் ஆணை பெற்ற ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் தோல்­வியை அனு­ப­வித்த மக்கள் மீண்டும் ஒரு­முறை அவ்­வாறு படு­கு­ழிக்குள் விழ விரும்­ப­மாட்­டார்கள்.

அந்தக் கசப்­பான அனு­ப­வத்தில் இருந்து அவர்கள் இன்­னமும் மீள­வில்லை.

அவ்­வா­றான மக்­களை முழு­மை­யாக சிங்­கள பௌத்த பேரி­ன­வாத மனோ­நி­லைக்கு கொண்டு சென்றால் தான் அந்த இலக்கை நிறை­வேற்றிக் கொள்ள முடியும்.

சிங்­கள பௌத்த பேரி­ன­வாத உணர்­வு­களைத் தூண்டி விட்டால் தான், சிங்­கள பௌத்த வாக்­கு­களை ஒன்­றி­ணைத்து தீர்க்­க­மா­ன­தொரு வெற்­றியை-, ஆணையை பெற முடியும்.

சரத் வீர­சே­கர, உதய கம்­மன்­பில போன்ற இன­வா­திகள் இந்த உண்­மையை தெளி­வாக புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ராஜபக் ஷவி­னரே, ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை மீண்டும் வேட்­பா­ள­ராக நிறுத்த முனைந்­தாலும்- இவர்கள் அதனை அனு­ம­திக்­க­மாட்­டார்கள்.  ராஜபக் ஷவி­னரை உசுப்­பேற்றி உசுப்­பேற்றி அவர்­களை நடுத்­தெ­ரு­வுக்கு கொண்டு வந்து நிறுத்­தி­ய­வர்கள் இவர்கள் தான்.

தங்­களின் அர­சியல் நலன்­க­ளுக்­காக, சிங்கள பௌத்த பேரி­ன­வாத நலன்­க­ளுக்­காக அவர்கள் மீண்டும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இன­உ­ணர்­வு­களை தூண்டி விடத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். வடக்கில் பௌத்­த­ம­ய­மாக்­கலை தீவி­ரப்­ப­டுத்தும் போது தமி­ழர்கள் அதனை இன்னும் மோச­மாக எதிர்ப்­பார்கள் என்­பது இன­வா­தி­க­ளுக்குத் தெரியும்.

அதனால் அவர்கள் பௌத்­த­ம­ய­மாக்­கலை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

அதன் ஊடாக தமி­ழர்­களின் எதிர்­வி­னையை கொண்டு அவர்­களை இன­வா­தி­க­ளாக சித்­தி­ரித்து, சிங்­கள பௌத்­தர்­களின் நலன்­களும் உரி­மை­களும் தமி­ழர்­களால் பறிக்­கப்­ப­டு­வ­தாக கூச்சல் போடு­கின்­றனர்.

இதன் ஊடா­கவே, சிங்­கள பௌத்­தர்கள் மத்­தியில் இன­வாத உணர்வைத் தட்­டி­யெ­ழுப்­பு­கின்­றனர். வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் அவர்கள் தங்­களின் காரியம் நிறை­வேறும் வரையில் இந்த இன­வாத நெருப்பை அவர்கள் அணைய விட­மாட்­டார்கள். இன்னும் இன்னும் எண்ணெய் ஊற்றி கொளுந்து விட்டு எரிய வைத்துக் கொண்டிருப்பார்கள்.

இனவாத நெருப்பு | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.