Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகு கிறீம்களும் அபத்த அரசியலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகு கிறீம்களும் அபத்த அரசியலும்

Published By: VISHNU

27 AUG, 2023 | 12:08 PM
image
 

ஏ.எல்.நிப்றாஸ்

அழகு கிறீம்­களை விற்­பனை செய்யும் நிறு­வ­னங்கள் 'இரண்டே வாரத்தில் முகத்தில் உள்ள தழும்­புகள், பருக்கள் எல்லாம் நீங்கி முகம் பிரகாசமாகி அழ­காகி விடு­வீர்கள்' என்­றுதான் ஆண்­டாண்டு கால­மாக விளம்­பரம் செய்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், இரண்டே வாரத்தில் யாரும் அப்படி வெண்மையாக ­மாறி­ய­தாக சரித்­தி­ர­மில்லை.

இரண்டே வாரத்தில் முகம் புதுப்­பொ­லிவு பெற்­று­விடும் என்­பது உண்­மை­யாக இருந்­தி­ருந்தால், அழகு கிறீம்­களை பயன்­ப­டுத்­தியோர் எல்­லோரும் மூன்­றா­வது வாரத்­தி­லேயே அழ­கி­க­ளாக, அழ­கன்­க­ளாக மாறி­யி­ருப்­பார்கள்  அவற்றை விற்­பனை செய்­கின்ற நிறு­வ­னங்கள் எல்லாம் இழுத்து மூடப்­பட்­டி­ருக்கும். ஆனால், அப்­ப­டி­யெ­துவும் நடந்­த­தில்லை.

அதா­வது, இரண்டு கிழ­மைக்குள் (பக்­க­வி­ளை­வுகள் எது­வு­மின்றி) உங்­களை அழ­கி­யாக்கி விட முடி­யாது. சரி, அப்­படிச் செய்து விட்­டாலும் கூட, அதற்கு பிறகு அந்த கிறீம்­களை விற்­ப­தற்கு புதிய வாடிக்­கை­யா­ளர்­களை அந்த நிறு­வனம் தேட வேண்டும். ஆகவே, 'இரண்டு வாரங்­களில் முகத்தில் உள்ள பிரச்­சி­னைகள் தீரும்' என்று சொல்லிச் சொல்­லியே பத்து, இரு­பது வரு­டங்­க­ளாக அந்த நிறு­வ­னங்கள் மிகத்தந்திரமாக வியா­பாரம் செய்து கொண்­டி­ருக்­கின்­றன என்­பதே நிதர்­ச­ன­மாகும்.  

இது, முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்­பு­க­ளுக்கு மட்­டு­மன்றி, ஏகப்­பட்ட பிரச்­சி­னை­களும் சூட்­சு­மங்­களும் நிறைந்த உலக அர­சி­ய­லுக்கும் பொருந்தும். மிகக் குறிப்­பாக இலங்­கையின் ஆளு­கைக்கும், பெருந்­தே­சிய மற்றும் சிறு­பான்மை அர­சி­ய­லுக்கும் கன­கச்­சி­த­மாக பொருந்தக் கூடிய ஒரு உவ­மா­ன­மாகும்.

ஒவ்­வொரு காலத்­திலும் ஆட்­சி­யா­ளர்­களும் சரி, தமிழ், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் சரி, மக்­களை ஏதோ ஒரு விட­யத்­தின்பால் பராக்­குக்­காட்டி, பொய்­யான கதை­களைக் கூறிக் கொண்டு, ஒரு நாடக பாணி­யி­லான அர­சி­யலின் ஊடாக காலத்தை இழுத்­த­டித்து வரு­வதைக் காண்­கின்றோம். இருப்­பினும் இந்தப் பின்­ன­ணியில், மக்­களின் பிரச்­சி­னைகள் 'பிச்­சைக்­கா­ரனின் புண்' போலவே இருக்­கின்­றன.

தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு குறிப்­பாக இனப் பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக பல தசாப்­தங்­க­ளாக கூறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதற்­காக அவர்கள் முயற்சி செய்­தார்கள் என்­பது மறுப்பதற்கில்லை. ஆனால், அது நடை­முறைச் சாத்­தி­ய­மா­க­வில்லை.

ஒவ்­வொரு கிறீ­மிலும் அதி­ருப்­தி­யுற்று மாறி மாறி எல்லா கிறீம்­க­ளையும் பாவிக்­கின்ற ஒரு­வரைப் போல, ஒவ்­வொரு அர­சாங்­கத்­தி­டமும் நம்­பிக்­கை­யுடன் பேசி, பல மாதங்கள் கடந்த பிறகு கடை­சியில் அந்த முயற்­சியில் தமிழ் அர­சி­யல்­வா­திகள் மனம் வெறுத்துப் போவ­தையும் தமிழ் மக்கள் நம்பி ஏமா­று­வ­தையும் தொடர்ந்தும்  கண்­ணுற்று வரு­கின்றோம்.

இதை­விட மோச­மான நிலையிலேயே முஸ்லிம் சமூகம் இருக்­கின்­றது எனலாம். ஒவ்­வொரு வகை­யான கிறீமை விளம்­பரம் செய்­கின்ற பல்­தே­சியக் கம்­ப­னிகள் போல, முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், அணி­களும் வேறு­பட்ட அர­சியல் சித்­தாந்­தங்­களை முஸ்லிம் சமூ­கத்­தி­னி­டையே சந்­தைப்­ப­டுத்தி வரு­கின்­றன. பாடல்­களும் பசப்பு வார்த்­தை­களும் இங்கு விளம்­ப­ரங்­க­ளா­கின்­றன.

தமக்குப் பின்னால் முஸ்லிம் மக்கள் அணி­தி­ரண்டால் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்­கலாம் என  முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூறி வரு­கின்­றார்கள். 'எங்­க­ளு­டைய கிறீம் மட்­டுமே பயன்­தரக் கூடி­யதும் பாது­காப்­பா­னதும்' என்று கூறு­கின்ற கம்­பனி விளம்­ப­ரங்­களைப் போல இவர்­களின் பரப்­பு­ரைகள் உள்­ளன. ஆனால், 30 வரு­டங்­க­ளாக முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் அப்­ப­டி­யேதான் இருக்­கின்­றன.

இதே­வேளை, பெருந்­தே­சியக் கட்­சி­களின் அர­சியல் என்­பது அழகு கிறீம்­களை போன்­றது மட்­டு­மன்றி, கடு­மை­யான பக்க விளை­வு­களை தரக் கூடிய மாத்­தி­ரை­களை விற்­பனை செய்­கின்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டு­களை ஒத்­த­தாகவும் எடுத்துக் கொள்­ளலாம்.

அதி­கா­ரத்­திற்கு வர நினைக்­கின்ற ஒவ்­வொரு பெருந்­தே­சியக் கட்­சி­களும் 'தமக்கு மக்கள் ஆணை தந்தால் எல்லாப் பிரச்­சி­னை­க­ளையும் இரண்டே மாதத்தில் தீர்த்து வைப்போம்' என்­கின்­றார்கள். ஆட்­சிக்கு வரு­கின்ற ஒவ்­வொரு அர­சாங்­கமும் 'இதோ ஒவ்­வொரு சமூ­கத்தின் அபி­லா­சை­களும் கூடிய விரைவில் தீர்க்­கப்­பட்டு விடும்' என்று சொல்லிக் கொண்டே வரு­கின்­றார்கள்.

ஆனால், அந்தப் பரப்­பு­ரை­க­ளுக்கு சம­மான நன்­மைகள், தீர்­வுகள் மக்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை என்­றுதான் கூற வேண்­டி­யுள்­ளது. மாறாக, நாட்டில் உள்ள பிரச்­சி­னைகள் காலத்­திற்கு காலம் வேறு வடிவில் உரு­வெ­டுக்­கின்­றன. புதுப்­புது குழப்­பங்கள் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு நோய்க்கு உள்­ளெ­டுக்­கப்­ப­டு­கின்ற மாத்­தி­ரைகள் பக்­க­வி­ளை­வாக இன்­னு­மொரு நோயை ஏற்­ப­டுத்தி விடு­வதைப் போல, நாட்டில் எதிர்­வினைச் சம்­ப­வங்கள் நடந்­தே­று­வதைக் காணலாம்.

இப்­போதும் நாட்டில் இந்த நிலை­மை­களை கூர்ந்து பார்ப்­பதன் மூலம் அவ­தா­னிக்­கலாம். அதா­வது, ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சியல் தீர்வு பற்றி பேசி வரு­கின்றார். அந்த வகையில் 13ஆவது திருத்­தத்தை பெரு­ம­ள­வுக்கு அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அவர் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக  கரு­தலாம் அல்­லது அப்­ப­டி­யான ஒரு விம்பம் உள்­ளது.

ஆனால், அர­சாங்­கத்­திற்குள் இருந்து கொண்டே ஒரு தரப்­பினர் இதனை எதிர்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.  இதற்கு ஜனா­தி­பதி தரப்பில் இருந்து காத்­தி­ர­மான பதி­லடி எதுவும் கொடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இதை­விட மிக முக்­கி­ய­மான விடயம், நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக மேலெழும் இன­வாத செயற்­பா­டு­களும் பயங்­க­ர­வாதம் பற்­றிய அச்­ச­மூட்­டல்­களும் ஆகும்.

அர­சாங்கம் பொதுவில் நல்­லி­ணக்கம் பற்­றியும், இனங்­களின் ஒற்­றுமை பற்­றியும் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றது. அதற்கு சமாந்­தர­மாக இனப் பிரச்­சினை தீர்வு பற்­றிய உரை­யா­டல்­களும் இடம்­பெ­று­கின்­றன. மறு­பு­றத்தில், அதற்கு முற்­றிலும் தலை­கீ­ழான நட­வ­டிக்­கை­களை சில அரச நிறு­வ­னங்­களும் அர­சி­யல்­வா­தி­களும் மத குருக்­களும் சம­கா­லத்தில் மேற்­கொண்டு வரு­வ­தையும் காண்­கின்றோம்.

குருந்­தூர்­மலை பிர­தேசம் மட்­டு­மன்றி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் பல இடங்­களில் நில ஆக்­கி­ர­மிப்பு உத்­திகள் மேற­்கொள்­ளப்­ப­டு­கின்­றன. சிங்­கள அர­சி­யல்­வா­திகள் இன­வாத கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர். அதற்கு பதி­லாக தமிழ் அர­சி­யல்­வா­திகள் சவால்­விடும் பாணியில் கூறு­கின்ற கருத்­துக்­களும் ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தல்ல.

இவை­யெல்லாம்   இன முறு­கலை, முரண்­பாட்டை தோற்­று­விக்கும் என்­பது தெட்­டத்­தெ­ளி­வான விட­ய­மாக இருக்­கின்ற போதும், அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இதற்­கி­டையில், சமூ­கங்­க­ளுக்கு இடையில் இன முறுகல் ஏற்­ப­டலாம் என்ற பாணி­யி­லான சமூக வலைத்­தளப் பதி­வு­களும் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன.

நீதி­ப­திக்கு மனநோய் என்று கூறு­கின்ற சரத் வீர­கே­ச­ர­வுக்கும், தமி­ழர்­களின் தலையை கொய்து கொண்டு வருவேன் என்று கூறு­கின்ற மேர்­வி­னுக்கும் வாய்ப்­பூட்டு போடப்­ப­ட­வில்லை. இன­வாத கருத்­துக்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்பட­வில்லை. மாறாக, அவ்­வா­ற­ான­வர்­க­ளுக்கு 'சலங்கை ­கட்டி' விடு­கின்ற வேலை­யைதான் இன­வா­திகள் செய்து கொண்­டி­ருப்­ப­தாக தெரி­கின்­றது. இப்­ப­டித்தான் கடந்த காலத்தில் முஸ்­லிம்­களும் நெருக்­கு­வா­ரப்­ப­டுத்­தப்­பட்­டனர் என்­பது நினைவு கொள்­ளத்­தக்­கது.

இது இவ்­வா­றி­ருக்க, பயங்­க­ர­வாத அமைப்­பொன்றில் பயிற்சி பெற்ற சிலர் இலங்­கையில் இருப்­ப­தா­கவும், குருந்­தூர்­ம­லையை மையப்­ப­டுத்­தி­  இனக் கல­வரம் வெடிக்­கலாம் என்றும் இந்­தியா எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக பாரா­ளு­மன்­றத்தில் பேசப்­பட்­டுள்­ளது.

ஆனால், அப்­ப­டி­யான முரண்­பா­டுகள் குறித்து சர்­வ­தேச புல­னாய்­வா­ளர்கள் எச்­ச­ரிக்கை விடுக்­க­வில்லை என்று பின்னர் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. இருப்­பினும், அறிக்கை விடு­வ­தற்கு அப்பால், களத்தில் இறங்கி நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர ஏதா­வது காத்­தி­ர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டதா என்பதுதான் இங்­குள்ள வினா­வாகும்.  

இனப் பிரச்­சினை தீர்வு, 13ஆவது திருத்த அமு­லாக்கம் போன்ற விட­யங்­களை ஜனா­தி­பதி தரப்பு முன்­னெ­டுத்து வரு­கின்ற காலப் பகு­தியில், நில ஆக்­கி­­ர­மிப்பு, மத மேலா­திக்க சிந்­தனை ஆகி­ய­வற்றின் ஊடாக இன முரண்­பாட்டை ஏற்­ப­டுத்த முற்­ப­டு­வதும், மக்கள் நிம்­ம­தி­யாக வாழ எத்­த­னிக்­கின்ற வேளையில் மீண்டும் ஏதோ ஒரு அடிப்­ப­டையில் பயங்­க­ர­வாத பூச்­சாண்டி காட்ட முற்­ப­டு­வதும் தற்­செயலான சம்­ப­வங்கள் என்ற முடி­வுக்கு வந்து விட முடி­யாது.

நாட்டை பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து மீட்க முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.  பொரு­ளா­தார குறி­காட்­டி­கள் பலவற்றில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால், உள்­நாட்டு பொறி­மு­றையை மேம்­ப­டுத்­து­வதை விட வெளி­நாட்டு கடன்­களை நம்பி இந்த முயற்சி எடுக்­கப்­பட்­டுள்­ளதால், இந்த மீட்சி எந்­த­ள­வுக்கு சாத்­தி­யப்­படும் என்­பது நிச்­ச­ய­மற்­ற­தாக உள்­ளது

அதே­நேரம், மீண்டும் டொலரின் பெறு­மதி அதி­க­ரித்­துள்­ள­துடன் பல பொருட்­களின் விலை­களும் உயர்ந்­துள்­ளன. மீண்டும் ஒரு பொரு­ளா­தார 'முட்டுச் சந்தை' நோக்கி பய­ணிக்­கின்­றோமா என்ற கவலை மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது எனலாம்.

இந்தப் பின்னணியில் நாட்டில் இடம்பெறுகின்ற சில சம்பவங்கள் இந்த யதார்த்தங்களை விட்டும் மக்களை வேறு திசைக்கு பராக்கு காட்டும் முயற்சிகளா, அபத்தமான ஏமாற்று அரசியலா என சிந்திக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, சிறுபான்மை மக்களின் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், அடுத்த தேர்தல் வரை மக்களை கொதிநிலையில் வைத்திருந்து, பேய்க்காட்டி,  அரசியல் செய்வதற்கும் இன, மத முரண்பாடுகளும் பயங்கரவாதம் குறித்த கதைகளும் திட்டமிட்டு அவிழ்த்து விடப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழாமலில்லை.

அழகு கிறீம்களுக்குப் பின்னாலுள்ள பில்லியன் டொலர் வியாபார உத்தியைப் பற்றிச் சிந்திக்காமல், அவை முற்றுமுழுதாக தங்களது முகத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மட்டுமே சந்தைக்கு வருகின்றன என முட்டாள்தனமாக நம்புகின்ற பதின்ம வயது யுவதிகளைப் போல, நாட்டில் நடக்கின்ற சம்பவங்கள் எல்லாம் மக்கள் நலனை மட்டுமே நோக்காகக் கொண்டவை என நினைத்துக் கொண்டு மக்கள் கண்மூடித்தனமாக இருக்க முடியாது.

அழகு கிறீம்களும் அபத்த அரசியலும் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.