Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் முதலாம் தலை முறையினரும் இவர்கள் பிள்ளைகள் இரண்டாம் தலைமுறையும். -பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் முதலாம் தலை முறையினரும் இவர்கள் பிள்ளைகள் இரண்டாம் தலைமுறையும்.
-பா.உதயன் 

புலம் பெயர் முதலாம் தலை முறை ஈழத்தமிழர் குடும்ப சமூக நிறுவனம் என்ற அமைப்பு முறைக்கும் இவர்களது இரண்டாம் தலை முறையின் குடும்ப அமைப்பு முறைக்கு இடையில் இடைவெளி கூடிக் கொண்டே போகிறதா. இரட்டைக் கலாச்சாரத்தினால் இவர்கள் தமது இனம் சார்ந்த அடையாளத்தில் இருந்து விலகிப்போகிறார்களா. எதிர் காலத்தில் இரண்டாம் தலை முறையின் குடும்பம் என்கிற ஸ்தாபனம் எப்படியான சவால்களை எதிர் நோக்கப் போகிறது எல்லா சமூகத்தினதும் குடும்ப அமைப்பு முறைமையில் பல குறைகளும் நிறைகளும் இருக்கின்ற போதிலும் ஆசிய குடும்ப அமைப்பு முறைமைகளில் குடும்பம் என்ற ஸ்தாபனம் இயங்கியல் தன்மைக்கு ஏற்ப பல இறுக்கமாக இருப்பதால் இந்த குடும்ப அமைப்பு இன்றும் பலமாக இருப்பதாக ஆசிய ஐரோப்பிய சமூகவியலாளர்களின் ஆய்வு கூறுகின்றது. 

எது எப்படி இருப்பினும் அரசியல், சமயம், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற முக்கிய நிறுவன அமைப்பு முறை போன்றே குடும்பம் ஒரு முக்கியமான நிறுவனமாகும். குடும்பம் என்பது ஒரு சமூக நிறுவனமாகும், அங்கு குழந்தை முதலில் சமூக விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறது மற்றும் ஒரு தனிநபராக சமூகமயமாக்கப்படுகிறது.  "நான்" என்ற அடையாளத்தை இங்கு ஆரம்பத்தில் கற்றுக் கொள்கிறது. (Family as an important Social institution) என்ற ரீதியில் எமது இரண்டாம் தலை முறையின் குடும்ப வாழ்வியல் எப்படி அமையப் போகின்றது என்பது எதிர் காலம் தீர்மானிக்க கூடியதொன்றாகவே அமையுமா.

புலம்பெயர் முதலாம் தலை முறையினருக்கும் பல இரண்டாம் தலை முறையினருக்கும் இடையில் பல வேறுபாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. புலம் பெயர் முதலாம் தலைமுறை எப்போதும் குடும்பத்தை தலையில் காவியபடி இருந்தனர். இவர்களின் பிள்ளைகள் இரண்டாம் தலைமுறை தனித்து வாழ்வதே தமக்கான தெரிவு என்றனர். நாட்டில் வாழும் உறவுகளின் வயிற்றுப் பசியையும் காத்து இருந்தனர் முதலாம் தலைமுறை. புலம் பெயர் முதலாம் தலை முறை எப்போதுமே தமது தேசம் பற்றிய சிந்தனையோடும் அங்கு போக வேண்டும் வாழ வேண்டும் என்ற கனவோடிருந்தனர் இரண்டாம் தலை முறைக்கு அது பற்றிய சிந்தனையோ எண்ணமோ இப்போதைக்கு இல்லையென்றனர். 

தமது தாய் தந்தையர் பிறந்த வாழ்ந்த தேசத்தை விட அவர்களின் விருப்பு வெறுப்புகள் வேறுபட்டதாயிருந்தது. புலம் பெயர் முதலாம் தலைமுறை காசு பொருளில் கவனமாக இருப்பார் சேர்த்து வைக்க வேண்டும் எதிர் காலத்துக்காக என்று நினைப்பார். இது பற்றி எந்தக் கவலையும் இரண்டாம் தலை முறைக்கு கிடையாது. முதலாம் தலை முறையினர் எப்படி தம்மை தம் தாய் தந்தையர்கள் தமது முன்னேற்றகரமான பாதைக்கு பல வலிகளை சுமந்து தாய் தந்தை  என்ற பாத்திரங்களில் உழைத்தார்களோ அதே போல் தான் புலம் பெயர் முதலாம் தலைமுறையினரும் பல துன்பங்களை சுமந்த போதும் அப்பாக்களாக அம்மாக்களாக தத் தமது பாத்திரங்களோடு தமது கடமையை சரி வரவே செய்தனர்.

தேசம் தேசியம் நோக்கிய பார்வையும் அந்த அடையாளமும் அதன் வேர்களை தேடுபவர்களாகவும் மறக்காதவர்களாகவும் இப்பொழுது கூட தாம் பிறந்த இடம் நோக்கி படை எடுத்து போவர்களாகவும் அந்த கீரிமலை கடலில் குழிப்பதும் நண்பர்களோடு கூழ் குடித்து மகிழ்வதும் இவர்களின் பிறந்த வாழ்வு முறையோட அமைந்த ஒரு வகை தேசியப் பிணைப்போடு கூடிய பற்றே காரணம் எனலாம். அத்தோடு தம் பிள்ளைகளின் வளர்ச்சி பாதையிலும் பல அற்பணிப்புகளோடு கடந்த வந்த முதலாம் தலைமுறையினர் தலை முடியில் இப்போ வெள்ளை மயிர் அவர்கள் காலத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இவர்களின் இறுதிக் காலம் தனிமையோடு போகுமோ இல்லை வேறு எந்தத் தெரிவை நோக்கி செல்லுவார்கள் என்பது பற்றிய கேள்விகளும் எழாமல் இல்லை. பலர் தமது இறுதிக் காலத்தில் தாயகம் திரும்பி அங்கு இருந்து வாழ விரும்பிய போதும் அந்த நாட்டில் இப்போதும் இனவாதமும் வெறுப்பும் வன்முறை கொண்ட கலாச்சாரமும் இன்னும் இலங்கை தேசத்தை விட்டுப் அகலவில்லை. இனங்களுக்கு இடையிலான பிளவு இன்னும் கூடிக் கொண்டே போகிறது ஆதலால் வயோதிப காலத்தில் அங்கு வாழ்வதும் பாதுகாப்பானதா என்பதும் கேள்விக் குறியே.

இறுதியில் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் பாரசீகக் கவிஞரான ரூமி ( Rumi)  என்ற கவிஞன் எழுதியது போல் உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் இல்லை நீங்கள் வில்லுகள் மட்டுமே அவர்கள் அம்புகள் அம்புகள் சரியாக இலக்கை அடைய துணை நிற்கும் வில்லுகள் தான் நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது என்று அந்தக் கவிஞன் எழுதியிருப்பது நினைவில் வருகின்றது. சிந்தனைகளும் செயல் வடிவங்களும் காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப மாறிக்கொண்டே போகும் என்பது இயற்கையின் விதியாகிறது. இருந்த போதும் அன்பு, பாசம், உணர்வு, சிரிப்பு, சந்தோசம், துயரம், கண்ணீர் எல்லாமே எல்லா மனிதனுக்கும் ஆனதே இதை கடந்து மறந்து துறந்து வருவதென்பதும் கடினமானதே.

பா.உதயன் ✍️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, uthayakumar said:

புலம் பெயர் முதலாம் தலைமுறை காசு பொருளில் கவனமாக இருப்பார் சேர்த்து வைக்க வேண்டும் எதிர் காலத்துக்காக என்று நினைப்பார். இது பற்றி எந்தக் கவலையும் இரண்டாம் தலை முறைக்கு கிடையாது.

நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை அப்படி. எங்கள் நாட்டில் பெரியளவில்  சமூக நலத் திட்டங்கள் இருக்கவில்ல.  ஆகவே பிற்காலத்துக்கு என்று சேமிக்க வேண்டி இருந்தது. புலம் பெயர் நாடுகளில் எந்த வேலை செய்தாலும் ஓய்வூதியம் கிடைக்கிறது. மருத்துவம், பராமரிப்புகள் என்பவற்றுக்காகான  காப்புறுதிகள் இருக்கின்றன. சமூகநலத் திட்டடங்களும் பலமாக இருக்கின்றன. ஆகவே எதிர்காலத்துக்கு என்று தனியாக பெரியளவில் சேமிப்பு தேவையில்லை. எங்களைப் போல் ஊரில் உள்ள உறவுகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமும் அடுத்த தலைமுறைக்கு இல்லை. ஆகவே அவர்களுக்கு சேமிப்பு பற்றிய கவலை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.