Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டம்பர் 11 தாக்குதலின்22வது வருடம் - கண்ணீருடனும் அஞ்சலிகளுடனும் நினைவுகூர்ந்தனர் அமெரிக்க மக்கள் - வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்குமாறு வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

12 SEP, 2023 | 12:06 PM
image
 

அமெரிக்க மக்கள் செப்டம்பர் 11 தாக்குதலின் 22 வருடத்தினை கண்ணீருடனும் அஞ்சலிகளுடனும்  தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நினைவு கூர்ந்துள்ளனர்.

22 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தினை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் வெளியாகியுள்ளன.

se11-234.jpg

அன்றைய தினம் உறவுகளை குடும்பத்தவர்களை இழந்தவர்களிற்கு அந்தநாள் இன்னமும் தொடர்கின்றது என செப்டம்பர் 11 தாக்குதலில் தனது உறவினர் ஒருவரை  இழந்த எட்வேட் எடெல்மென் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஏனையவர்கள் அதிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்கின்றார்கள்.  நாங்கள் அதிலிருந்து விடுபட்டு முன்னோக்கி செல்ல முயல்கின்றோம், ஆனால் அந்த நாள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

se11-233.jpg

அலாஸ்காவில் உள்ள அன்கொரேஜ் தளத்தில் இருந்து உரையாற்றியுள்ள ஜனாதிபதி பைடன் அமெரிக்கர்களை ஜனநாயகத்தை காப்பாற்ற  அணிதிரளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நாளில் ஒவ்வொரு அமெரிக்கர்களினதும் இதயங்களும்  காயமடைந்தன என்பது எங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன் ஆனால் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் சிறிய நகரத்திலும் புறநகரிலும்  கிராமங்களிலும் பழங்குடியினர் பகுதியிலும் கரங்கள் உயர்ந்தன எங்கிருந்தாலும் உதவ அவர்கள் தயாராகினர் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

se11-232.jpg

கடத்தப்பட்ட விமானங்கள் இரட்டை கோபுரத்தின் மீதும் பென்டகன் மீதும் பென்சில்வேனியா மீதும் மோதியதில் 3000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இது அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையையும் உள்நாட்டு அச்சங்களையும் மீளவடிவமைத்தது.

அன்றைய நாள் நாங்கள் ஒருதேசம் ஒரு மக்களாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருந்தோம் என வேர்ஜினியாவின் தீயணைப்பு படை தலைவர் தெரிவித்துள்ளார்.

se1-231.jpg

தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நிகழ்வில் கமலா ஹாரிஸ் ஏனைய பிரமுகர்களுடன் கலந்துகொண்டார்.

அரசியல் தலைவர்களின் உரைகளிற்கு பதில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை வாசிக்கும் தனிப்பட்ட துயரங்களை பதிவு செய்யும் நிகழ்வாக இது காணப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிலர் அமெரிக்காவின் தேசப்பற்று விழுமியங்களை போற்றியதுடன் உடனடியாக உதவிக்கு விரைந்தவர்களிற்கும்  இராணுவத்தினருக்கும்  நன்றி தெரிவித்தனர்.

செப்டம்பர் 11 தாக்குதலின் சூத்திரதாரி ஒசாமா பின்லாடனை கொலைசெய்த அமெரிக்க கடற்படை சீல் வீரரை ஒருவர் பாராட்டினார்- மற்றையவர் அமைதி ஜனநாயகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

se11-23.jpg

செப்டம்பர் 11 க்கு பின்னரான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பல உயிர்கள் பலிபோனதை ஒருவர் ஏற்றுக்கொண்டார் பலர் காணாமல்போனவர்கள் குறித்த தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டனர்.

நாங்கள் ஒருபோதும் சந்தித்திராத போதிலும் உங்கள் பாரம்பரியத்தையும் பெயரையும் சுமந்து செல்வதில் பெருமைப்படுகின்றேன் என தனது தந்தையை உயிருடன் பார்க்காத Manuel João DaMota Jr தெரிவித்தார்.

செப்டம்பர் 11 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை வாசிப்பது மிகப்பெரிய கௌரவம் என கப்பிரியல்லி கப்பிரியல்லி தெரிவித்தார்.

அவர் தனது உறவினர்களை இழந்தார்.

உயிருடன் இறந்தவர்கள் அனைவரினதும் நினைவுகளை பாதுகாக்கவேண்டும் இது பாரம்பரியம் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மேற்குபகுதியில் இடம்பெற்ற  நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட முதல் ஜனாதிபதியாக மாறியுள்ள ஜோ பைடன் தீவிரவாதபோக்கும் அரசியல் வன்முறையும் அதிகரிப்பது குறித்து எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு தலைமுறையும் போராடவேண்டும் என பைடன் படைவீரர்களின் குடும்பத்தவர்களிற்கு தெரிவித்துள்ளார்.

பென்டகனில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் பெண்மணி மலர்வளையம் வைத்தார். அந்த கட்டிடத்தில் பாரிய அமெரிக்க கொடியை காணமுடிந்தது.

இராணுவதலைமையகத்தின் மீது விமானங்கள் மீது  அந்த நேரத்தில் மணிகள் ஒலித்தன இசைக்கலைஞர்கள்  பாடல்களை பாடினர்.

வருடங்கள் செல்ல செல்ல உலகம் முன்னோக்கி நகர்கின்றது அல்லது செப்டம்பர் 11 தாக்குதலை மறக்கின்றது என தோன்றலாம், ஆனால் இந்த தாக்குதலை பாதுகாப்பு திணைக்களம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என  பாதுகாப்புசெயலாளர் லொயிட்  ஒஸ்டின் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/164397

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.