Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் ; நாணய நிதியம் கவலை வெளியிடுட்டுள்ளதாக மஹிந்தானந்த தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

26 SEP, 2023 | 07:19 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய வருமான வரி திணைக்களம், சுங்க திணைக்களம், மதுவரித்திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து இவ்வாண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது. 

எனவே இவற்றில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை இல்லாதொழித்து எதிர்பார்க்கப்படும் வருமானத்தை ஈட்டும் வகையில் முகாமைத்துவத்திலும், சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

இம்மூன்று திணைக்களங்களும் வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாகவும் மஹிந்தானந்த அழுத்கமகே சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இவ்வாண்டில் தேசிய வருமான வரி திணைக்களம் 1667 பில்லியன் ரூபாவையும், சுங்கத் திணைக்களம் 1217 பில்லியன் ரூபாவையும், மதுவரித்திணைக்களம் 217 பில்லியன் ரூபாவையும் அதாவது 3101 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறும் என மதிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால் இதுவரை தேசிய வருமான வரி திணைக்களத்துக்கு 956 பில்லியன் ரூபாவும், சுங்க திணைக்களத்துக்கு 578 பில்லியன் ரூபாவும், மதுவரித்திணைக்களத்துக்கு 109 பில்லியன் ரூபாவும் வரி வருமானம் கிடைத்துள்ளது. அதற்கமைய இவற்றிடமிருந்து ஒட்டு மொத்தமாக 1643 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது.

கிடைக்கப் பெற்றுள்ள இந்த வருமானத்தில் அடிப்படையில் மதிப்பிடும் போது அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்பட்ட 3101 பில்லியன் ரூபாவில் 2380 பில்லியன் ரூபா வருமானத்தை மாத்திரமே பெற முடியும் என எதிர்பார்க்கின்றோம். 

இதனால் வரி வருமானத்தில் 637 பில்லியன் ரூபா தட்டுப்பாடு ஏற்படக் கூடும். இந்த மதிப்பீடு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அதன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவை சரியான இலக்குடன் பயணித்தால் எதிர்பார்க்கும் வரியைப் பெற்றுக் கொள்ள முடியும். 22 மில்லியன் சனத்தொகை காணப்படும் இந்நாட்டில் 10 சதவீதமானோர் மாத்திரமே வருமான வரியை செலுத்துகின்றனர். நாட்டில் 105 000 நிறுவனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 68 000 நிறுவனங்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. இவற்றில் 15 சதவீதமானவை மாத்திரமே ஒரு ரூபாவேனும் வரி செலுத்தியுள்ளன. நாட்டின் மொத்த வரி வருமானத்தில் 86 சதவீதமான வரி 494 நிறுவனங்களிடமிருந்தே அறவிடப்படுகின்றன.

வருமான, சுங்க மற்றும் மதுவரி திணைக்களங்களை முறையாக கண்காணித்தால் அரச வருமானத்தை 500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடியும். தற்போது சுங்க திணைக்களம் நாளொன்று 1 பில்லியன் ரூபா நஷ்டத்திலும் , தேசிய வருமான வரி திணைக்களம் நாளொன்றுக்கு 500 மில்லியன் ரூபா நஷ்டத்திலும், மதுவரி திணைக்களம் நாளொக்கு 10 மில்லியன் ரூபா நஷ்டத்திலும் இயங்குகின்றன. இதன் காரணமாக வருடத்துக்கு 500 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

மதுவரி திணைக்களம் மாதத்துக்கு 45 - 50 மில்லியன் போத்தல் மதுபானத்தை தயாரிக்கின்றனர். வருடத்தின் ஒட்டுமொத்த தயாரிப்பில் 40 சதவீதமானவை வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக விநியோகிக்கப்படுகின்றன. இதனை தடுப்பதற்காக 2018இல் ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது சட்ட விரோதமாக அதே போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மதுபான போத்தல்கள் விநியோக்கப்படுகின்றன.

இதுவரையில் தேசிய வருமான வரி திணைக்களத்தில் 904 பில்லியன் ரூபா அறவிடப்படாத வரி காணப்படுகின்றது. நீதிமன்ற ஆட்சேபனைகளின் காரணமாக இவ்வாறு பாரியதொரு வரித் தொகை அறவிடப்படாமலுள்ளது. எனவே இவ்வாறான தேக்கங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையிலும், அரச நிறுவனங்களைப் போன்றே தனியார் நிறுவனங்களிடமிருந்தும் நேரடியாக வரி அறவிடும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/165521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் வருடாந்தம் 30 பில்லியனை சேமிக்கலாம் - சமன் ரத்னபிரிய

Published By: VISHNU

27 SEP, 2023 | 09:49 PM
image
 

அரச நிறுவனங்களை மறுசீரமைத்தால் அரச சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்கலாம். நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து, இலாபமுடையதாக்கினால் வருடாந்தம் 30 பில்லியன் ரூபாவை சேமித்துக் கொள்ளலாம் என ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

நிதியமைச்சில் செவ்வாய்க்கிழமை (27) மாலை 'புதிய அபிவிருத்தியின் பிரவேசத்துக்காக அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு' என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நட்டத்தில் இயங்கும் புகையிரத சேவையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக 2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான 10 வருட காலப்பகுதியில் மாத்திரம் அரசாங்கம் 333 பில்லியன் ரூபாவை செலவழித்துள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து, இலாபமடைய செய்தால் வருடாந்தம் 30 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும். சுகாதார சேவையை மறுசீரமைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் இலவச சுகாதார சேவையை வினைத்திறகான முறையில் முன்னெடுத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடுகையில் இலங்கை மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழியர்களை காட்டிலும் தற்போது 4000 தொழில்வாய்ப்புக்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையிலும் சேவைத்துறையை வினைத்திறனான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போதைய சேவையாளர் கட்டமைப்பு போதுமானதாக உள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சேவையாளர்களின் எண்ணிக்கை 3292 ஆக காணப்படுகின்ற நிலையில் 2100 ஊழியர்கள் மாத்திரமே தற்போது சேவையில் உள்ளார்கள். 1192 பேருக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

மின்சார சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊழியர்களின்  எண்ணிக்கை 24000 ஆக காணப்படுகிறது. அதில் 21000 பேர் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபடுகிறார்கள். 3000 சேவையாளர்கள் வெளி தரப்பில் இருந்து இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்களை வழங்கி அரசியல் இலாபமடைய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக மாத்தறை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அரச தொழில் வாய்ப்புகளை என்னால் பெற்றுக் கொடுக்க முடியும். அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டு அரச நிறுவனங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/165598

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.