Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் திறன் தலைவர் பிரபாவிடம் - சுரேஷ் எம்.பி.

Featured Replies

இந்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திறன் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே உண்டு. இதனை கொழும்பு நம்புகிறது என சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாறளுமன்றில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.

இந்த நாட்டில் அரசை அமைக்கவும், கவிழ்க்கவும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தேவைப்டுகின்றார் என்பதை சிங்களத் தரப்புகள் முழுமைகயாக நம்புகின்றன. அதற்கமையவே செயற்படுகின்றன என விசனித்து விளக்கமளித்துள்ளார் த.தே.கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் பணப்பரிமாற்றம் இடம் பெற்றது எனக் கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரி நேற்று நாடாளுமன்றில் இடம் பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவரது உரையின் முழுவடிவம் வருமாறு :-

பலகோடி ரூபாவை விடுதலைப் புலிகளுக்கு கொடுத்து, அதன் மூலம் தான் இன்றைய ஜனாதிபதி கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வென்றார் என்றும் இது தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு ஆரயப்பட வேண்டும் என்றும், சிறிபதி சூரியாராச்சி எம்.பி. கேட்டதற்கிணங்கவே இந்த விவாதம் நடக்கின்றது என நாங்கள் அறிகின்றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறு பணம் கைமாறப்பட்டதா இல்லையா என்பதெல்லாம், ஜனாதிபதிக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்குமே வெளிச்சம். அன்று ஜனாதிபதியை வெல்ல வைத்த அமைச்சர்கள் தான் இக் குற்றச் சாட்டை ஜனாதிபதிக்கெதிராக கொண்டுவருகின்றனர்.

எனவே, இதில் உண்மையுமிருக்கலாம் அல்லது அரசியல் காழிப்புணர்ச்சி காரணமாகவும் பழிசுமத்தப்படலாம். ஆனால், த.தே.கூக்கு இது தொடர்பான எந்தவிதமான நம்பிக்கைக்குரிய தகவல்களும் கிடைக்கவில்லை. எனவே, நாம் இவ்விவகாரத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்கின்றோம்.

ஆயினும், ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சிங்கள அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு ஆரம்பம் முதல் தமிழ் இன எதிர்ப்பு என்ற ஆயுதத்தையே பாவித்து வந்துள்ளன.

சிங்களத்தை அரச கரும மொழி ஆக்குவதில் பண்டாவிற்கும் ஜே.ஆரிற்கும் இடையில் போட்டி ஏற்பட்டது. வாகனங்களில் சிங்கள 'ஸ்ரீ' தமிழ் மாணவர்களுக்கெதரிரான தரப்படுததல் இவ்வாறான நடவடிக்கைகள் யாவும் தேர்தல் வெற்றிக்காக சிங்கள அரசியல் கட்சிகளால் பாவிக்கப்பட்ட வியூகங்கள் ஆகும். தமிழருக்கெதிரான முழு இனத்துவேசமும் குறுகிய அரசியல் லாபங்களுக்காக சிங்கள அரசியல் தலைவர்களால் பாவிக்கப்ட்டன. சிங்கள அரசியல் தலைவர்களின் மூடத்தனமான நடவடிக்கைகளே கடந்த 30 வருடகால யுத்தத்திற்கு காரணமாகும். இன்று கூட அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகளோ அல்லது பிரபாகரனோ இவர்களுக்குத் தேவைப்படுகின்றது. 'கொழும்பில் யார் அதிகாரத்திற்கு வருவதென்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பதில்லை. அதனை, பிரபாகரனே தீர்மானிக்கின்றார்'. என்று அனுரா பண்டாரநாயக்க முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டார். அதில் உண்மையுமிருக்கலாம்.

ஆனால், இன்று பார்த்தீர்களானால் புலிகளை கிழக்கில் வென்று விட்டோம் என்று கூறி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க ஜனாதிபதி முயற்சி செய்கின்றார். 'புலிகளுக்குப் பணம் கொடுத்துத்தான் பதவிக்கே வந்தார்'என அவரைக் கவிழ்க்க விரும்புவோர் சொல்கின்றார்கள். மொத்தத்தில் அரசை, ஆக்கவும், கவிழ்க்கவும், புலிகள் என்ற பெயரோ அல்லது பிரபாகரன் என்ற பெயரோ தேவைப்படுகின்றது.

எனவே, எவ்வளவு மலினப்பட்ட அரசியலை நீங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்று சிந்தித்துப் பார்க்கிறீர்களா? பணவீக்கம், வாழ்க்கைச் செலவு உயர்வு, வேலையில்லாப் பிரச்சினை, மக்கள் வாழவே

முடியாத சூழ்நிலை, குழந்தைகளுக்கு பால்மா இல்லை, நாளந்தம் விலையேற்றம், கையில் பணமில்லை, இன்னும் சிலமாதங்களில் பட்டினிச் சாவுகளையும் எதிர்பார்க்கலாம். இவ்வளவு மோசமான பொருளாதாரச் சூழலில் நாடு சிக்கியுள்ளது. இவற்றுக்கான அடிப்படைக் காரணமென்ன? ''யுத்தம்"".

15 கோடியே 60 லட்சம் ரூபா நிதி இந்த வருடம் நாட்டை அழிக்கவும், கொலைகளைச் செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பிழையென யாராவது சிந்திக்கின்றீர்களா? இதனால் தான் மக்கள் இவ்வளவு துன்பத்திற்குள்ளாகின்றார்க

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியமைக்கவும் கவிழ்க்கவும் பிரபாகரனின் பெயரே தேவைப்படுகிறது

வீரகேசரி நாளேடு

கிழக்கில் புலிகளை வென்றுவிட்டோம் எனக் கூறி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதி முயற்சி செய்ய, பணம் கொடுத்துதான் பதவிக்கு வந்தார் இன்று ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆட்சியமைக்கவும், கவிழ்க்கவும் புலிகள் அல்லது பிரபாகரன் என்ற பெயரே தேவைப்படுகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி.யினால் பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியை வெற்றியடைச் செய்வதற்கு முழுமூச்சாக செயற்பட்டவர்களே இன்று ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதில் உண்மை இருக்கலாம் அல்லது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மேற்கொள்ளப்படலாம் என்பதுடன் இதில் நம்பிக்கைக்குரிய தகவல்களும் இல்லாமையினால் இந்த விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதை தவிர்த்துக் கொள்கின்றது.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: பல கோடி ரூபாய்களை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கொடுத்து, அதன் மூலம்தான் இன்றைய ஜனாதிபதி 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வென்றதாகவும், இதுதொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு ஆராயப்படவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறு பணம் கைமாறப்பட்டதா இல்லையா என்பதெல்லாம், ஜனாதிபதிக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குமே வெளிச்சம். அன்று ஜனாதிபதியை வெல்ல வைத்த அமைச்சர்கள்தான் இன்று ஜனாதிபதிக்கெதிரான குற்றச்சாட்டையும் கொண்டு வருகின்றார்கள். எனவே இதில் உண்மையுமிருக்கலாம் அல்லது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவும் பழி சுமத்தப்படலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இது தொடர்பான எந்தவிதமான நம்பிக்கைக்குரிய தகவல்களும் இல்லாமையால், நாம் இவ்விவாதத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துக்கொள்கின்றோம்.

ஆனால் இன்று பார்த்தீர்களானால் புலிகளை கிழக்கில் வென்று விட்டோம் எனக் கூறி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க ஜனாதிபதி முயற்சி செய்ய, புலிகளுக்கு பணம் கொடுத்துதான் பதவிக்கே வந்தார் என அவரைக் கவிழ்க்க விரும்புவோர் சொல்கின்றார்கள். மொத்தத்தில் அரசை ஆக்கவும் கவிழ்க்கவும் புலிகள் என்ற பெயரோ அல்லது பிரபாகரன் என்ற பெயரோ தேவைப்படுகின்றது.

ஜே.ஆர்.ஜயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா, விஜயதுங்கா, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற ஜனாதிபதிகளும் இவர்களது காலகட்டத்தில் பதவிவகித்த பல்வேறு இராணுவத் தளபதிகளும் யுத்தம் புரியவில்லையா? யுத்தத்தில் உங்களால் வெல்லத்தான் முடிந்ததா? சிங்கள இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் கொல்லப்பட்டதுடன், அப்பாவி பொது மக்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். பதவிகளில் இருந்து ஓய்வுபெற்ற முப்படைத் தளபதிகளும் ஓய்வுபெற்ற பின் என்ன கூறுகின்றார்கள்? இது ஓர் அரசியல் பிரச்சினை, பேசித்தான் இதனைத் தீர்க்க முடியுமே தவிர யுத்தத்தினால் அல்ல என்று கூறுகின்றார்கள்.

ஆனாலும் இன்றைய ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் என்ன கூறுகின்றார்கள்? இது ஓர் பயங்கரவாதப் பிரச்சினை, இதனை இராணுவ ரீதியில்தான் வெற்றிகொள்ளவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவர்களது கருத்துப்படி முன்னைய ஜனாதிபதியும் தளபதிகளும் முட்டாள்கள். தாம் மாத்திரம்தான் புத்திசாலிகள் என்ற தோரணையில் தான் இவர்களது செயற்பாடுகள் இருக்கின்றன. இவர்களது புத்திசாலித்தனத்தின் உச்சக்கட்டம்தான் கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டியதும், யார் ஒருவன் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையோ அல்லது யுத்த நடவடிக்கைகளையோ கண்டிக்கின்றார்களோ அவர்கள் ஐ.நா. சபை அதிகாரியாக இருந்தால் என்ன, வேற்று நாட்டு தூதுவராக இருந்தால் என்ன எல்லோருமே புலிகளது ஏஜென்டுகளாவும், தேசத் துரோகிகளாகவுமே அரசின் கண்ணுக்கு புலப்படுகின்றார்கள்.இலங்கைய

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காகவே போரை நடத்துவதாக சிறிலங்கா அரசு கூறுவது உண்மையானால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதும் அவலங்களுக்குள் தள்ளப்படுவதும் ஏன்? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.