Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த வருட தேர்தலிற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க திட்டம்? - பெரும் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

12 OCT, 2023 | 10:16 AM
image
 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரும்  அல்லது கட்சியும் 50 வீத வாக்குகளை பெறமுடியாது என்பதால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என வெளியாகியுள்ள  தகவல்களால் அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பநிலையேற்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் ஏற்கனவே இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அமைச்சரவை பத்திரம் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் இறுதியாக நிறைவேற்று  அதிகார முறையை நீக்குவதா நிறைவேற்று அதிகார பிரதமர் ஊடாக நாடாளுமன்றத்தை வலுப்படுத்துவதா என்பது குறித்து சர்வஜனவாக்கெடுப்பு இடம்பெறும்.

இந்த நடவடிக்கைகள் குறித்து அறிந்ததும் பிரதான எதிர்கட்சிகள் ஏற்கனவே தங்கள் மத்தியில் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.

இதனை நாடாளுமன்றத்தில் எதிர்க்கப்போவதாக  எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

2025 பொதுத்தேர்தல் வரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீடிக்கவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கருதுகின்றது. தற்போதைய அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை தொடர்வதற்கான ஆணையை பெற்றது என பொதுஜனபெரமுன கருதுகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதென்றால்  2025 பொதுத்தேர்தலிற்கு பின்னரே அதனை நீக்கவேண்டும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் என  பொதுஜனபெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என எப்போதும் குரல்கொடுத்துவந்துள்ள ஜேவிபி தற்போதைய முயற்சிகளை  நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் என தெரியவருகின்றது.

2025 பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இந்த விடயம் குறித்து ஆராயவேண்டும் என ஜேவிபி கருதுகின்றது .

அடுத்த அரசாங்கம் மக்களின் ஆணையுடன்  பதவிக் வரும்  ஆகவே அதுவரை நாங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து சிந்திக்க முடியாது -  2025 தேர்தலிற்கு முந்தைய முயற்சிகள்  வெற்றிபெறாது என ஜேவிபியின் சிரேஸ்ட நாடாளுமன்ற  உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166682

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கிய உடன் நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் - ஜேவிபி

Published By: RAJEEBAN

12 OCT, 2023 | 02:54 PM
image
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிய உடன் நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான  தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான தீர்மானத்தையும் சமர்ப்பிக்கவேண்டும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.

அரசியல் தேவைகளுக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவுள்ளது என்ற ஊகங்களிற்கு மத்தியில் ஜேவிபி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது என ஜேவிபியின் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு அவர்கள் நாடாளுமன்ற அதிகாரத்தை தக்கவைப்பதற்கு அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டுவரும் அன்றே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான தீர்மானத்தையும் அவர்கள் கொண்டுவரவேண்டும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என ஜேவிபி நீண்டகாலமாக குரல்கொடுத்துவருகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் ஆனால் அதன் போர்வையின் கீழ் நீங்கள் நாடாளுமன்ற அதிகாரத்தை தக்கவைக்க அனுமதிக்க முடியாது ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதற்கான மக்கள் ஆணையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/166713

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது - விமல் வீரவன்ச

Published By: VISHNU

12 OCT, 2023 | 01:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.

ஆகவே எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதே. தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க உலகத்தை வலம் வருகிறார். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்டப்படவில்லை. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை முன்னெடுக்கிறது.

சர்வதேச நாணய நிபந்தனைக்கு அமைய வரி உட்பட அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன. மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது.

மின்சார சபை எதிர்கொள்ளும் நட்டத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்காகவே மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது. மின்சார சபையின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் முறையற்ற மின்கட்டண அதிகரிப்பை தடுக்கலாம்.

தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால் தான் காலத்துக்கு காலம் தேர்தல் நடத்தப்படுகிறது. நாட்டு மக்கள் போராட்டத்தின் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதுவும் தற்போது ஸ்திரமற்றதாக காணப்படுகிறது. மக்களின் தேர்தல் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தல் முறைமையை திருத்தியமைக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர். பெண் பிரநிதித்துவத்தை அதிகரிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்தார். இறுதியில் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வரையறை செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு எல்லை நிர்ணயம் புதிதாக வகுக்கப்பட்டது. தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் தேர்தல் முறைமையை திருத்தம் செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.ஆகவே எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதே. தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எமக்கு எதிராக பொதுஜன பெரமுனவினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/166708

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மக்களாணை வழங்கப்படவில்லை - நீதியமைச்சர்

18 OCT, 2023 | 03:10 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தேர்தலில் வெற்றி பெறும்  சாத்தியம் இருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு எவரும் கவனம் செலுத்துவதில்லை.

தோல்வி உறுதி என்பதனால் தான் தேர்தல் முறைமை திருத்த யோசனை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

உண்மை தன்மை இருந்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல நீதியமைச்சரை நோக்கி குறிப்பிட்டார்.

தேர்தல் முறைமை திருத்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அவசியம் எமக்கில்லை, அதற்கான மக்களாணையும் வழங்கப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்த முறைமை தொடர்பான யோசனை குறித்து நீதியமைச்சர் சபைக்கு விளக்கமளித்ததன் பின்னர் விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல,

ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு எதிரணியினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என அமைச்சர் (நீதியமைச்சர்) குறிப்பிட்டார். அரசாங்கம் சமர்ப்பித்த சட்டமூலதத்தை ஆராய்ந்து ஒருசில திருத்தங்களை நாங்கள் முன்வைத்தோம்.

ஆனால் அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை. இதுவே உண்மை ஆகவே பொய்யுரைக்க வேண்டாம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை காலம் காலமாக முன்னெடுக்கப்படுகிறது.

தேர்தல் வெற்றிப்பெறுவதாக இருந்தால் எவரும் நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அவதானம்  செலுத்தமாட்டார்கள்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலில் வெற்றிப்பெறாது என்பதால் தான் தேர்தல் முறைமை சட்ட திருத்த யோசனையை முன்வைத்துள்ளது.

மறுபுறம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க அவதானம் செலுத்தியுள்ளது. இதுவே உண்மை

உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டுமாயின் முதலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு  அடுத்த மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கத்திடம் உண்மை தன்மை இருக்குமாயின் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்குகின்றோம் என்று குறிப்பிடுங்கள். அதன் பின்னர் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் ஒரு தீர்மானம் எடுக்கும். அதனை விடுத்து 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட விடயங்களை பேசாதீர்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான யோசனை மாத்திரமே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் ஊடகங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று செய்திகள் வெளியாகின.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அவசியம் எமக்கில்லை.அதற்கான மக்களாணையும் வழங்கப்படவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/167162

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.