Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை - இந்திய இதயங்கள் நெருக்கமாக இணைந்துள்ளன - படகுச் சேவையை ஆரம்பித்து பிரதமர் மோடி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 OCT, 2023 | 10:08 AM
image
BBM__656x60__Virakesari.png

• ஒரு புதிய அத்தியாயத்தில் இலங்கையுடனான உறவுகள்

• இராமேஸ்வரம் - தலைமன்னார் படகு சேவை விரைவில்

• இந்திய தொழில்நுட்ப கட்டண முறைமைக்குள் இலங்கை  

(லியோ நிரோஷ தர்ஷன்)

லங்கை - இந்திய பொருளாதார பங்காளித்துவத்துக்கான தொலைநோக்கு திட்டத்தில் இருதரப்பு இணைப்பு என்பது எமது கூட்டாண்மையின் மையக் கருப்பொருளாகும். ஆரம்பிக்கப்பட்டுள்ள படகு சேவையின் ஊடாக  இரு நாடுகளின் இதயங்கள் நெருக்கமாக இணைந்துள்ளதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான படகு சேவையும் விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான படகுச் சேவையை நேற்று சனிக்கிழமை (14) நிகழ்நிலை ஊடாக திறந்து வைத்து உரையாற்றும்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான படகுச் சேவையானது இருதரப்பு  உறவுகளை வலுப்படுத்தவும் அதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லக்கூடியதுமான முக்கியமான மைல்கல்லாக உள்ளது.

கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரிகத்தின் ஆழமான வரலாற்றைப் இலங்கை மற்றும் இந்தியா பகிர்ந்து கொள்கின்றன. நாகப்பட்டினம் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உட்பட பல நாடுகளுடன் கடல் வழி வணிகத்தில் நீண்ட காலமாக ஈடுப்பட்டுள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் துறைமுகம் கடல் வழி வணிகத்தில் ஒரு கேந்திர மையமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க கால இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி எடுத்துரைக்கின்றன. அதே பேன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 'சிந்து நதியின் மிசை' என்ற பாடலில் இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் குறித்து குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த படகு சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சமீபத்திய டெல்லி விஜயத்தின்போது, இலங்கை / இந்திய பொருளாதார பங்காளித்துவத்துக்கான தொலைநோக்கு திட்டத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இதனடிப்படையில் இருதரப்பு இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருளாகும். அதாவது இந்த படகு சேவை ஊடாக இரண்டு நகரங்களை இணைப்பதாக கருதாது, இரு நாடுகளின் இதயங்களை நெருக்கமாக இணைந்துள்ளன என்பதை எடுத்து காட்டுகிறது.

மறுப்புறம் வர்த்தகம், சுற்றுலா மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. 

கடந்த 2015ஆம் ஆண்டில் எனது இலங்கை விஜயத்தை  தொடர்ந்து, டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை  ஆரம்பிக்கப்பட்டது. 

பின்னர், இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியது. சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019 ஆம் ஆண்டில் தொடங்கியது. தற்போது காங்கேசன்துறை  மற்றும் நாகப்பட்டினம் இடையே படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இலங்கை - இந்திய இணைப்புகள் எமது பார்வையில் போக்குவரத்து துறைக்கு அப்பாற்பட்டது. இலங்கையும் இந்தியாவும்  நிதியியல் தொழில்நுட்பம்  மற்றும் எரிசக்தி போன்ற பரந்த அளவிலான துறைகளில் நெருக்கமாக ஒத்துழைப்புகளை வலுப்படுத்து வருகின்றது. ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) காரணமாக இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்துதல் ஒரு வெகுஜன செயல்பாடாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறியுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கட்டண முறைகளை இலங்கையுடன் இணைப்பதிலும் ஆர்வம் செலுத்தியுள்ளோம். அதே போன்று இரு நாடுகளினதும் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த ஆற்றல் சக்தி பாதுகாப்பு முக்கியமானது. எனவே எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையில் எரிசக்தி இணைப்புகளை முன்னெடுக்கின்றோம்.

முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டாண்மை என்பது இருதரப்பு உறவின் வலுவான தூண்களில் ஒன்றாகும். யாரையும் ஓரங்கட்டாமல், அபிவிருத்தியை  அனைவருக்கும் வழங்குவதே இந்தியாவின் நோக்கமாகின்றது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இலங்கையில் இந்திய உதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் வீடுகள், நீர், சுகாதாரம் மற்றும் வாழ்வாதார ஆதரவு தொடர்பான பல திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவை வழங்கியமை மகிழ்ச்சியளிக்கின்றது. 

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் புகையிரத பாதைகளை சீரமைத்தல்,  யாழ் கலாசார நிலையம், இலங்கை முழுவதும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை நடைமுறைப்படுத்தியமை, டிக் ஓயாவில் ஸ்தாபிக்கப்பட்ட மருத்துவமனை என்பன அனைவரின் ஆதரவும், வளர்ச்சியும், நம்பிக்கையும் மற்றும் முயற்சியை குறிக்கின்றன.

ஜி/20 மாநாட்டை இந்தியா சமீபத்தில் நடத்தியது. அனைத்து உலகும் ஒரு குடும்பம் என்ற  இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்பட்டது. அயலகத்துக்கு முதலிடம் கொடுப்பதும் எமது தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாகும். 

இந்தியாவின் ஜி-20 மாநாட்டின்போது, இந்தியா-மத்திய, கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்பட்டது. இது ஒரு முக்கியமான இணைப்பு வழித்தடமாகும். இது முழு பிராந்தியத்துக்கும் சாதகமான பாரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். இலங்கை /- இந்திய இரு நாடுகளுக்கிடையிலான பலதரப்பட்ட தொடர்பை வலுப்படுத்துவதால் இலங்கை மக்களும் இதன் மூலம் பயனடைவர்.

படகுச் சேவையை இன்று வெற்றிகரமாக ஆரம்பித்தமைக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றி கூறுகின்றோம். 

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான படகு சேவையை மீள ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்ககப்பட உள்ளது. இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி மேலும் கூறினார்.

https://www.virakesari.lk/article/166879

  • கருத்துக்கள உறவுகள்

Passenger ferry service between India and Sri Lanka begins - Top Story | Daily Mirror

இந்த செய்தியின் கீழ் இடப்பட்ட பின்னூட்டங்களை வாசித்துப் பாருங்கள். இந்தியா இலங்கைக்கு இடையிலான படகு சேவை குறித்து சிங்களவர்கள் எவ்வளவு இனவாதக் கருத்துகளை பகிர்ந்து இருக்கின்றார்கள் என அறிய முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.