Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை!

spacer.png

யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்தை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகை வளாகம் 29 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள நிலையில், 12 ஏக்கரில் கட்டிடத் தொகுதி அமைந்துள்ளது.

எஞ்சிய நிலம் அகுறித்த பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான 12 ஏக்கர் காணியை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், உரிய குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் ஜனாதிபதி மாளிகை வளாகம் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் கையளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

http://www.samakalam.com/யாழ்-ஜனாதிபதி-மாளிகையை-க/

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை!

spacer.png

யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்தை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகை வளாகம் 29 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள நிலையில், 12 ஏக்கரில் கட்டிடத் தொகுதி அமைந்துள்ளது.

எஞ்சிய நிலம் அகுறித்த பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான 12 ஏக்கர் காணியை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், உரிய குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் ஜனாதிபதி மாளிகை வளாகம் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் கையளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

http://www.samakalam.com/யாழ்-ஜனாதிபதி-மாளிகையை-க/

டெய்லி மிரர் செய்தியை கொப்பி அடித்த சமகாலம் ஒரு முக்கிய செய்தியை விட்டு விட்டது.

அரச காணி 12 ஏக்கர் மட்டும் அல்ல. மக்களிடம் பறித்த 17 ஏக்கரும் SLIIT க்கே வழங்கப்படுமாம். அவர்கள் மக்களுக்கு வருமானம் கொடுப்பார்களாம். எவ்வளவு என்ற விபரம் இல்லை.

அரசுக்கு என காணியை சுவீகரித்து தெற்கின் வியாபாரிகளுக்கு கைமாற்றி விடுகிறார் காணி புரோக்கர் ரணில்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஜனாதிபதி மாளிகை 50 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது !

Published By: DIGITAL DESK 3

16 OCT, 2023 | 02:52 PM
image

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

இதன் முதலீட்டு மதிப்பு அண்ணளவாக 5000 பில்லியன் ரூபாய்கள். கனேடிய முதலீட்டாளருடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (16) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி அலுவலகத்தின் தேசிய பாதுகாப்பு பிரதம ஆலோசகரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகையின் நிர்மாணப் பணிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது 2010-2015 ஐந்தாண்டுகளுக்குள் இருந்தது. இந்த ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்கும் போது புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இங்கு கடந்த  காலத்தில் கட்டுமான பணிகள்  நிறுத்தப்பட்டது.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த மாளிகை வளாகம் 30 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது, அதில் 12 ஏக்கரில் இந்தக் கட்டிடத் தொகுதிகள் அமைந்துள்ளன.

எஞ்சிய நிலம் அப்பகுதி மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்டதுடன், அரசுக்கு சொந்தமான 12 ஏக்கரை SLIIT நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முதலில் முடிவு செய்யப்பட்டது.

மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட எஞ்சிய 17 ஏக்கர் காணியை வருமானத்தின் அடிப்படையில் SLIIT நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) இந்த ஜனாதிபதி மாளிகையின் பணிகளை விரைவாக முடித்து முழு அளவிலான தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றும் என நம்புகிறது. இந்த தகவல் தொழில்நுட்பம் பல்கலைக்கழகம் northern Uni. IT பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும்.

ஆண்டுதோறும் சுமார் 1500 மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் திறன் கொண்டது. மேலும், இந்த தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கட்டப்பட்டதன் பின்னர், வடக்கிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு தகவல் தொழில்நுட்பம் படிக்க கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை.

இதன்படி முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண பிள்ளைகளின் தகவல் தொழில்நுட்ப அறிவு விருத்தியடைந்து அவர்கள் தமது அறிவை பூரணப்படுத்த முடியு மாதலால் அவர்கள் எதிர்கால நவீன உலகிற்கு பொருந்துவார்கள் என இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர,   தலைவர் இண்டி பத்மநாதன் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் எல். ரத்நாயக்க மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/166990

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.