Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச ரீதியாக அம்பலமாகும் மனித உரிமை மீறல் கொடூரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரீதியாக அம்பலமாகும் மனித உரிமை மீறல் கொடூரம்

தனது படைகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மிக மோச மான மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களை இழைப் பதற்கு அனுமதித்து, மறுபுறத்தில் அதைத் தூண்டிவிட்டு, பார்த்திருக்கும் கொடுங்கோன்மை ஆட்சியின் விளைவாக இன்று ஆப்பிழுத்த குரங்காகச் சிக்கித் தவிக்கிறது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுவே, அவரது அரசின் நீதி விசாரணை முறைமையின் சீத்துவத்தை பொட்டுக்கேட்டை நார் நாராக உரித்து, அம்பலப்படுத்தி விட்டது.

இறைமையுள்ள சட்டரீதியான அரசு என்று கூறிக்கொள்ளும் கொழும்பு ஆட்சித் தலைமை, தமிழர் தாயகத்தின் மீது மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்மண் தெரியாமல் கட்டவிழ்த்து விட்டுப் பெரும் கொடூரம் புரிந்து வருகின்றது என்றும் இந்த அரச பயங்கரவாதத்தில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுவதுடன் அவர்களுக்கு குற்றங்களில் இருந்து விலக்களிக்கும் விசேட சட்ட விலக்களிப்பு வழங்கப்பட்டு, அதன்மூலம் தமிழர்களுக்கு எதிரான கொடூர குற்றங்களை இழைப்பதற்குச் சிங்களப்படைகள் தூண்டப்படுகின்றன என்றும் பரவலாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

2005 நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலம் முதல் சிங்களப் படைகள் ஈழத் தமிழருக்கு எதிராக மிகக் கொடூரமான குரூரமான மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு, ஆள்களைக் கடத்தி, கப்பம் அறவிட்டு, பலவந்தமாகக் காணாமற் போகச்செய்து, படு கொலைகளிலும் சர்வசாதாரணமாக ஈடுபட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டு மனித உரிமை அமைப்புகளால் புள்ளி விவரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது.

இத்தகைய மனித குலத்துக்கு எதிரான குரூரக் குற்றங்களை இழைக்கும் படையினருக்கு எதிராக மஹிந்தரின் அரசு துரும்பைத் தூக்கிப்போடும் தண்டனையைக் கூட வழங்கத் தயாரில்லை என்பதும் சர்வதேசத்துக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றது.

இது தொடர்பாக உலக நாடுகளின் மட்டத்திலிருந்து எழுந்த பல்வேறு கண்டனக் குரல்களை அடுத்து அவற்றைச் சமாளிப்பதற்காகத் தற்காலிக ஏற்பாடாகத் தந்திரம் ஒன்றைச் செய்தார் அதிபர் மஹிந்தர்.

நாட்டில் தொடர்ந்து இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களில் முக்கியமான 16 விவகாரங்கள் குறித்தேனும் விசாரிக்க வழமைபோல ஓர் ஆணைக்குழுவை நியமித்தார் அவர். அந்தக் கண்துடைப்பு நடவடிக்கை, தமிழர்களுக்கு எதிரான ஆட்கடத்தல்கள், காணாமற்போகச் செய்தல், படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வழி செய்யவே செய்யாது என்பதை சர்வதேசம் புரிந்திருந்ததால் அதைச் சமாளிப்பதற்காக, அந்த விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைச் செயற்பாடுகளைக் கண்காணிக்க உலகப் பிரசித்தி பெற்ற பிரமுகர்களைக் கொண்ட உயர்பாதுகாப்பு அவதானிகள் குழு ஒன்றை அவர் நியமிக்க முன்வந்தார்.

அந்தக் குழு, இலங்கை அரசின் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்த நடவடிக்கைகளின் சீத்துவத்தை சிறப்பியல்பை மீண்டும் ஒரு தடவை தனது அறிக்கை ஒன்றில் வாங்கு வாங்கென வாங்கித் தள்ளியிருக்கின்றது.

"இந்த மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதாகக் கூறிய இலங்கை அரசு, உண்மையில் அச்சம்பவங்கள் பற்றிய உள்விவகாரங்களை மூடி மறைப்பதிலேயே தனது தந்திரங்களைப் பயன்படுத்துகின்றது. நவம்பர் 2006 இல் தொடங்கப்பட்ட இந்த ஆணைக்குழு இற்றைக்கு சுமார் ஒருவருடமாகியும் தனது செயற்பாட்டை முன்நகர்த்தி ஏதேனும் செய்யவேயில்லை. இற்றைவரை சர்வதேச வழமைகள் மற்றும் தரத்துக்கு ஒப்ப தனது விசாரணைகளை முன்னெடுப்பதில் எந்த அர்த்தமுள்ள செயற்பாட்டையும் அது காட்டவேயில்லை. இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தும் விதத்தில் முக்கியமாக அமையவேண்டிய பக்கச்சார்பற்ற போக்கு மற்றும் தேசிய, சர்வதேசத் தரங்களை விசாரணைகளில் பின்பற்றுதல், சுயாதீனத்தன்மை, வெளிப்படையான செயற்பாடு போன்றவற்றைக் காட்ட விசாரணை ஆணைக் குழு தவறிவிட்டது" இவ்வாறு ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் பி.என்.பகவதியைத் தலைவராகக் கொண்ட அந்த சர்வதேசப் பிரமுகர் குழு தனது அறிக்கையில் வெட்ட வெளிச்சமாகத் தெரிவித்திருக்கின்றது.

இந்த ஒரு வருட காலத்துக்குள் இவ்வமைப்பு இலங்கை அரசின் போக்கை இவ்வாறு அப்பட்டமாக அம்பலப்படுத்திய மூன்றாவது அறிக்கை இதுவாகும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான தனது மோசமான செயற்பாடுகளை மூடி மறைக்கவே அத்தகைய சம்பவங்கள் பற்றி விசாரிக்க ஆணைக்குழு என்ற நாடகத்தை அரசு அரங்கேற்றுகின்றது என மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தி வந்தன; வருகின்றன. அக்குற்றச்சாட்டை நிரூபித்திருக்கின்றது அத்தகைய ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட அணியின் அறிக்கை.

இலங்கை அரசின் மோசமான மனித உரிமைச் செயற்பாடுகள் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் அக்குவேறு, ஆணி வேறாகப் பிய்த்து உதறப்படும் இச்சமயத்தில் இந்த அறிக்கை சமயம் பார்த்து, கனகச்சிதமாகப் பொருந்தி வந்திருக்கின்றது என்றே கூறவேண்டும்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்துக்கு பக்கத்துணையாக அக்கூட்டத்துக்குப் புறம்பாக அங்கு இலங்கை மனித உரிமைகள் விவகாரம் குறித்துத் தனியான ஓர் கலந்தாய்வுக் கூட்டமும் நாளை இடம்பெறுகின்றது.

நீதிக்கும் ஜனநாயகத்துக்குமான மையத்தின் அனுசரணையுடன், அனைத்து வடிவத்திலுமான இனவாதம் மற்றும் இனப்பாகுபாடு ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச இயக்கம், மனித உரிமைகள் மற்றும் மனித விடுதலைக்கான இலங்கை மற்றும் சர்வதேச லீக் ஆகியவற்றின் ஏற்பாட்டில் "இலங்கையில் அறிவிக்கப்படாத யுத்தத்துக்கு மத்தியில் மனிதநேயச் செயற்பாடுகள்" என்ற தலைப்பில் நடை பெறும் இந்தக் கலந்தாய்வில் இலங்கை விவகாரம் விரிவாக ஆராயப்படும்போது இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாட்டுப் பெறுபேறுகள் மேலும் ஊன்றிக் கவனிக்கப்படப் போகின்றன என்பது நிச்சயம்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.