Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக வங்கி குழு யாழ்ப்பாணத்திற்கு பயணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக வங்கி குழு யாழ்ப்பாணத்திற்கு பயணம்!

adminOctober 30, 2023
spacer.png

spacer.png

இலங்கை சென்றுள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம் திங்கட்கிழமை (30.10.23) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ளது.

அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு சென்று பார்வையிட்டது.

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினருடன், உலக வங்கியின் உயர் மட்ட குழு, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் குறித்த பயணத்தின் போது கலந்துகொண்டனர்.

https://globaltamilnews.net/2023/196734/

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி – உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் நாளை சந்திப்பு

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் அன்னா பிஜேர்ட் நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் தலைமையிலான குழு நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது.

அவர்கள் நேற்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரை சந்தித்தனர்.

உலக வங்கியின் உதவியுடன் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல பிராந்தியங்களுக்கும் பிரதிநிதிகள் குழு பார்வையிட்டது.

குறித்த குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கு இடையிலான வட்ட மேசை விவாதத்தில் உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் நாளை கலந்து கொள்கிறார்.

ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

https://thinakkural.lk/article/279120

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு

Published By: DIGITAL DESK 3    01 NOV, 2023 | 10:43 AM

image

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  திங்கட்கிழமை (30) உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்திருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதுடன், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதைக் கண்டறிவதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாகவும், கல்வி, சுயதொழில் உட்கட்டமைப்பு மற்றும் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் வடக்கு மாகாணத்திற்கு ஆதரவளிக்குமாறும் உலக வங்கி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். 

இவற்றைக் கேட்டறிந்த உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் கவனத்தில் கொள்வதாகவும் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு தாம் கைகொடுப்பதாகவும் கூறியிருந்தார்,. வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் எனவும் உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்காலத்தில் வடமாகாண மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் என உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதியளித்தார்.

https://www.virakesari.lk/article/168216

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.