Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் வழக்கத்துக்கு மாறான ஆட்டமிழப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
06 NOV, 2023 | 08:18 PM
image

சி.சி.என்

2023 உலகக்கிண்ணத் தொடர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்த முறை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆடுகளத்தில் நுழைந்த அவர் தனது தலைக்கவசம் பிரச்சினை கொடுத்ததால் சுமார் மூன்று நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாட தயாராகவில்லை. இதையடுத்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோர ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் படி TIME OUT முறையில் மெத்யூஸ் ஆட்டமிழந்தவராக கருதப்பட அவர் ஆட்டமிழப்பு தீர்ப்பை வழங்கினார்.

ஒரு நாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளைப்பொறுத்தவரை இந்த முறையில் முதன் முதலாக ஆட்டமிழந்த வீரர் என்ற பெருமையையும் வேதனையையும் சுமந்து மீண்டும் ஆடை மாற்றும் அறைக்கு திரும்பினார் மெத்யூஸ். இந்த சம்பவத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

வர்ணணையாளராக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் இது கிரிக்கெட்டுக்கு அழகல்ல எனத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வீரர் கவஜா இது எப்படி Time Out ஆட்டமிழப்பாகும் என தனது ட்வீற்றர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

சில கிரிக்கெட் வீரர்கள் பங்களாதேஷ் அணித் தலைவர் சகீப் அல் ஹசனின் செயற்பாட்டுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இவ்வாறு வழக்கத்துக்கு மாறான ஆட்டமிழப்புகள் (Unusual dismissals) பன்னிரண்டு தடவைகள் இடம்பெற்றுள்ளன. அவை எவை என இங்கு பார்ப்போம்.

இந்த வழக்கத்துக்கு மாறான ஆட்டமிழப்பில் முதலில் சிக்கிக்கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் மொகிந்திர் அமர்நாத் ஆவார். 1986 ஆம் ஆண்டு மெல்பேர்ன் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 15 ஓட்டங்களை பெற்றிருந்த போது பந்தை கையில் தடுத்ததால் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்பட்டார். 

(Handled the Ball) 

1987 ஆம் ஆண்டு கராச்சியில் இடம்பெற்ற இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் ரமிஸ் ராஜா 99 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது களத்தடுப்பிற்கு இடையூறு விளைவித்த காரணத்தினால் ஆட்டமிழந்தவராக அறிவிக்கப்பட்டார்.

(Obstructing the field)

1989 ஆம் ஆண்டு அஹமாதபாத்தில் இடம்பெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய வீரர் மொகிந்திர் அமர்நாத் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களத்தடுப்பிற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு ஆட்டமிழந்தார்.

1999 ஆம் ஆண்டு டேர்பனில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் டிரயல் கலினன் 46 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது பந்தை கைகளால் தடுத்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார்.

2006 ஆம் ஆண்டு பெஷாவரில் இடம்பெற்ற இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இன்சமாம் உல்– ஹக் 16 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்தினால் ஆட்டமிழந்தார்.

2013 ஆம் ஆண்டு டேர்பனில் இடம்பெற்ற தென்னாபிரிக்கா– பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் மொகமட் ஹாபிஸ் பந்தை கையில் தடுத்தமைக்கு ஓட்டமெதுவும் பெறாது ஆட்டமிழந்தார்.

2013 ஆம் ஆண்டு க்கெர்போஹாவில் இடம்பெற்ற தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் அன்வர் அலி 7 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார்.

2015 இல் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார்

2015 ஆம் ஆண்டு புலவாயோவில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் சிம்பாப்வே அணியின் சிபாபா 18 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பந்தை கைகளால் தடுத்தமைக்கு ஆட்டமிழந்தார்.

2019 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் ஐக்கிய அமெரிக்க அணியின் மார்ஷல் 34 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார்.

2021 ஆம் ஆண்டு நோர்த் சவுண்ட் மைதானத்தில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு தற்போது 2023 ஆம் ஆண்டில் அஞ்சலோ மெத்யூஸ் குறித்த நேரத்துக்கு துடுப்பெடுத்தாட காரணத்திற்காக ஆட்டமிழந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168690

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி ஏராளன் ......!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.