Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்த்துப் போகும் நீதிப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    07 NOV, 2023 | 11:26 AM

image

ஆர்.ராம்

வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் சங்கம் ஆரம்­பிக்­கப்­பட்டு, அதன் தொடர்ச்­சி­யான செயற்­பா­டு­க­ளின்­போது ஏற்­பட்ட முரண்­பா­டுகள் பொது­வெ­ளிக்கு வந்­துள்ள நிலையில், நிர்­வாகப் பத­வி­களில் இருந்­த­வர்கள் முக்­கிய பொறுப்­புக்­களில் இருந்­த­வர்கள் தமக்கு கீழ்­ப­டி­யாது முரண்­டு­பி­டித்­த­வர்­களை களை­யெ­டுக்கும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன என்­பதை கடந்­த­வாரம் பார்த்­தி­ருந்தோம்.

P01.jpg

களை­யெ­டுக்கும் முத­லா­வது அத்­தி­யாயம் வவு­னி­யாவில் அரங்­கேற்­றப்­பட்­ட­தோடு அதற்கு அடுத்­த­ப­டி­யாக முல்­லைத்­தீவு, மன்னார் மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் முன்­னெ­டுப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. இருந்­த­போதும், முத­லா­வது முயற்­சியே சந்­தி­ சி­ரிக்கும் நிலையை அடைந்­த­மையால் இப்­போது அடுத்­த­கட்டம் சம்­பந்­த­மாக தற்­போ­தைய நிர்­வா­கத்­தி­னரும், அவர்­க­ளது புலம்­பெயர் ஆத­ரவு அணி­யி­னரும் திட்­ட­மி­டல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

Neerthu_Pogum_Neethi_Porattam.jpg

உண்­மையில், வவு­னியா கூட்­டத்தில் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­க­ளி­டையே கைக­லப்பு இடம்­பெ­று­வ­தற்­கான பின்­னணி என்­ன­வென்­பதை சுருக்­க­மாக பார்த்­து­ விட்டு, இந்த உணர்வு ரீதி­யான விட­யத்­தி­னையும் அது­சார்ந்­துள்ள அமைப்­பையும் எவ்­வாறு மீள­மைக்­கலாம் என்­ப­தையும் இந்தப் பத்­தியில் பார்க்­கலாம்.

தற்­போது வடக்கு, கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் சங்­கத்தின் தலைவர் மற்றும் செய­லாளர் பத­வி­களில் உள்­ள­வர்கள் இரு­வ­ரி­னதும் ஏகோ­பித்த தீர்­மா­னத்­துக்கு அமை­வாக, வவு­னியா மாவட்­டத்தின் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் சங்­கத்தின் தலை­விக்கு திடீ­ரென ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விப்­பொன்று விடுக்­கப்­பட்டு, அவ­ரு­டைய பொறுப்­புக்­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தாக கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, குறித்த வவு­னியா மாவட்டத் தலைவி, அவ்­வாறு ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்கும் தீர்­மானம் எப்­போது எடுக்­கப்­பட்­டது, அவ்­வாறு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இருந்தால், தான் இழைத்த தவ­றுகள் என்ன என்று வினாக்­களைத் தொடுத்­துள்ளார். அது­மட்­டு­மன்றி அவ­ருக்கு ஆத­ர­வாக, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை ஆகிய ஆறு மாவட்­டங்­களின் பிர­தி­நி­தி­களும் இருந்­துள்­ளனர்.

இந்த நிலையில், வவு­னியா மாவட்ட தலைமைப் பத­வியில் உள்­ள­வரை பதவி நீக்­கினால் ஏனை­ய­வர்கள் அதனை முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு முரண்­டு­பி­டிக்க மாட்­டார்கள் என்ற ஆலோ­சனை புலம்­பெயர் தேசத்­தி­லி­ருந்து தற்­போ­தைய தலைமை நிர்­வா­கி­க­ளுக்கு வழங்­கப்­ப­டவும், அதனை ஏற்­றுக்­கொண்­ட­வர்கள் திடீ­ரென வவு­னியா மாவட்டக் கூட்­டத்­திற்­கான அழைப்­பினை விடுத்­தார்கள்.

இந்தக் கூட்­டத்­திற்கு வவு­னியா மாவட்­டத்தில் உள்ள வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வுகள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போதும், தற்­போது பத­வியில் இருக்­கின்ற தலை­வ­ருக்கு அழைப்பு விடுக்­க­வில்லை. இதனால், தற்­போ­தைய தலை­வ­ருக்கு ஆத­ர­வான அணி­யினர் கூட்­டத்தில் பங்­கேற்­பதா இல்­லையா என்ற குழப்­பங்­க­ளுக்குள் உள்­ளா­கிய நிலையில், குறித்த கூட்­ட­மன்று நேரில் சென்று நியாயம் கேட்­ப­தென அவர்கள் தீர்­மா­னித்­தார்கள்.

இதனால் தான், கூட்டம் கூட்­டப்­பட்ட தரு­ணத்தில் வவு­னியா மாவட்­டத்தின் தற்­போ­தைய தலைவி மற்றும் அவர் சார்ந்து செயற்­ப­டு­ப­வர்கள் நேரில் சென்று நியாயம் கேட்க முற்­பட்ட சம­யத்தில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் கைக­லப்­பாக மாறி­யது. இறு­தியில் பொலி­ஸாரின் கால்­களில் விழும் நிலை­மையும் ஏற்­பட்­டது.

இதன்­பின்­னரும் கூட, பரஸ்­பர சாடல்­களும், புலம்­பெயர் தேசத்தில் உள்­ள­வர்­க­ளி­டத்தில் முறை­ப்பா­டு­களை தெரி­வித்து அவர்­களின் தலை­யீ­டு­க­ளி­லான உரை­யா­டல்­களும் இன்­னமும் நீண்­டு­கொண்­டி­ருக்­கின்­றன.

வவு­னியா மாவட்டத் தலைவி தவ­று­களை இழைத்­தாரா இல்­லையா என்­பது வாத­வி­வா­தங்­க­ளுக்கு உரி­ய­தொரு விட­ய­மாக இருக்­கையில், மாவட்ட நிர்­வா­கப்­ப­த­வியில் இருந்து அவரைத் தூக்கி எறி­வது அனைத்­துக்­கு­மான தீர்வு அல்ல.

ஏனென்றால், வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய அலு­வ­ல­கத்தை நிரா­க­ரிக்கும் வவு­னியா மற்றும் யாழ்ப்­பாண போராட்­டங்­க­ளிலும், இறு­தி­யாக ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நல்லூர் போராட்­டத்­திலும் அவ­ரது பங்­க­ளிப்பு கன­தி­யா­னது.

வவு­னியா மாவட்­டத்­த­லைவி மட்­டு­மல்ல, நிர்­வாகப் பத­வி­களில் அல்­லாத எந்­த­வொரு உற­வையும் புறந்­தள்ளி தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கோ அல்­லது தீர்­மா­னங்­க­ளுக்கு இசைய­வில்லை என்­ப­தற்­காக அவர்­களை ஒதுக்கி வைப்­ப­தற்கோ வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் சங்­கத்­துக்கு எந்­த­வொரு அதி­கா­ரமும் கிடை­யாது.

குறித்த சங்­க­மா­னது, நீதி, நியா­யத்­துக்­கான தேட­லுக்­காக உணர்­வு­க­ளாலும், உற­வு­க­ளாலும் தாமா­கவே உரு­வா­கிய மக்கள் அமைப்­பாகும். அது, தனி­ந­ப­ருக்கோ அல்­லது குறிப்­பிட்ட குழு­வி­ன­ருக்கோ,அல்­லது குறித்­த­வொரு அமைப்­பி­ன­ருக்கோ மட்டும் சொந்­த­மா­னது அல்ல.

அவ்­வி­த­மான சங்கம், மலி­னப்­பட்டுச் செல்­வ­தா­னது, தமி­ழின விடு­த­லைக்­கான பய­ணத்தின் உத்­வே­கத்­தையும், சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான நிரந்­த­ர­மான தீர்­வுக்­கான கோரிக்­கை­யையும் நிச்­ச­ய­மாக நீர்த்­துப்­போகச் செய்­வ­தா­கவே அமையும்.

ஆகவே, வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் சங்­கத்­தினை பிரிக்­க­மு­டி­யாத, பிள­வு­ப­டாத, அற்­ப­சொற்ப சலு­கை­க­ளுக்­காக சேரம்­போ­காத, தனி­ந­பர்­க­ளி­னதோ அல்­லது குழு­வி­னர்­க­ளி­னதோ ஆதிக்­கத்­துக்கு உட்­ப­டாத அல்­லது கைப்­பாவை நிலை­மைக்கு ஆளா­கா­த­வாறு வலு­வான கட்­ட­மைப்­பாக பேணிப்­பா­து­காக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

அவ்­வி­த­மா­ன­தொரு அமைப்­பாக வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் சங்­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தாக இருந்தால் பின்­வரும் மறு­சீ­ர­மைப்­புக்­களை உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

முத­லா­வ­தாக, வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் சங்­கத்தின் தலைவர், செய­லாளர் மற்றும் மாவட்­டங்கள் தோறும் காணப்­படும் தலைவர், செய­லாளர் பத­விகள் உடன் நீக்­கப்­பட வேண்டும். அதற்குப் பதி­லாக, வடக்கு ,கிழக்கின் எட்டு மாவட்­டங்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் 'வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் தலை­மைத்­துவ சபை' என்ற கட்­ட­மைப்பு தோற்­று­விக்­கப்­பட வேண்டும். இந்தக் கட்­ட­மைப்பில் மாவட்­டங்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் தலா ஒரு­வரோ அல்­லது இரு­வரோ அங்­கத்­தவம் வகிக்க முடியும்.

எனினும், குறித்த சபை­யி­னது ஆயுட்­காலம் என்­பது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருக்க வேண்டும். அதன் பின்னர், புதிய உற­வு­களே பத­வி­நி­லைக்கு வரு­வார்கள். ஏலவே பத­வி­களில் இருந்­த­வர்கள் அவர்­க­ளுக்­கான செயற்­பாட்டு வழி­காட்­டி­க­ளாக இருக்க முடியும்.

இந்த சபையே அனைத்­து­வி­த­மான தீர்­மா­னங்­க­ளையும் இறுதி செய்யும் அதி­கா­ரத்தைக் கொண்­ட­தாக இருப்­ப­தோடு அந்த தீர்­மா­னங்கள் அனைத்தும் எட்­டு­ மா­வட்­டங்­க­ளிலும் உள்ள வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் அனைத்து உற­வு­க­ளி­னது ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற்­ற­தாக இருக்க வேண்டும்.  

இரண்­டா­வ­தாக, உரு­வாக்­கப்­படும் மேற்­படி 'வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் தலை­மைத்­துவ சபை­யா­னது' வினைத்­தி­றான செயற்­ப­டு­வ­தற்­காக, அர­சி­யல்­கட்­சிகள் மற்றும் ஏனைய தொழிற்­சங்க அமைப்­புக்­க­ளுடன் தொடர்­பு­ப­டாத வகையில் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் விட­யங்­க­ளுடன் அர்ப்­ப­ணிப்­பா­கவும், அது­சார்ந்த அனு­ப­வங்கள் நிறை­வாக காணப்­ப­டு­வ­தோடு, வடக்கு, கிழக்கை மையப்­ப­டுத்­தியும், புலம்­பெயர் தேசங்­களை மையப்­ப­டுத்­தியும் பத்­துப்­பே­ருக்கு மேற்­ப­டாத வகை­யி­லான 'வழி­காட்டல் சபை அல்­லது ஆலோ­சனை சபை­யொன்றை' அமைக்க வேண்டும்.

மூன்­றா­வ­தாக, 'வடக்கு - கிழக்கு வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் தலை­மைத்­துவ சபையில்' மாவட்­டங்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் அங்­கத்­து­வத்­தினை கொண்­டி­ருப்­ப­வர்­களின் தலை­மையில் மாவட்­டங்கள் தோறும் ஐவரைக் கொண்ட 'காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களின் மாவட்டச் செயற்­கு­ழு­வொன்றை' ஸ்தாபிக்க வேண்டும்.

இந்தக் குழு­வா­னது, மாவட்ட ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற செயற்­பா­டுகள் மற்றும், பரிந்­து­ரைகள், கோரிக்­கைகள் உள்­ளிட்ட அனைத்­து­வி­த­மான விட­யங்­க­ளையும் தலை­மைத்­துவ சபைக்கு கொண்டு செல்­வ­தற்கும், தலை­மைத்­துவ சபையின் விட­யங்­களை சாதா­ரண உற­வு­க­ளி­டத்தில் கொண்டு சேர்க்கும் பால­மாக செயற்­பட வேண்டும்.

அத்­துடன், மாவட்­டங்கள் தோறும் உள்ள சிவில் அமைப்பின் பிர­தி­நி­திகள், மதத்­த­லை­வர்கள், மற்றும் சமூக ஆர்­வ­லர்கள் ஆகி­யோ­ரையும் இணைத்துச் செயற்­ப­டு­வ­தற்­கான நிலை­மை­க­ளையும் பரந்­து­பட்ட வகையில் முன்­னெ­டுத்தல் வேண்டும்.

அதே­நேரம், அர­சி­யல்­வா­திகள், தொழிற்­சங்க அமைப்­பி­னரின் பங்­கேற்பை நிரா­க­ரிக்­கா­தி­ருப்­ப­தோடு, அவர்­களின் பங்­கேற்­பா­னது, அர­சியல் சாயம் பூசப்­ப­டா­தி­ருப்­ப­தையும், நிகழ்ச்சி நிர­லுக்குள் சிக்­கா­தி­ருப்­ப­தையும் உறுதி செய்­து­கொள்ள வேண்டும்.

நான்­கா­வ­தாக, நிதி விட­யத்தைக் கையாள்­வ­தற்­காக தனி­ந­பர்­களின் வங்கிக் கணக்கு இலக்­கங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது முழு­மை­யாக நிறுத்­தப்­ப­டு­வ­தோடு, அது­பற்­றிய உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பை விடுக்க வேண்டும்.

அடுத்­த­ப­டி­யாக, மாவட்­டங்கள் தோறும் தெரிவு செய்­யப்­பட்ட எட்டு அங்­கத்­த­வர்­களை உள்­ள­டக்­கி­ய­தாக நிதிச் சபை­யொன்றை ஸ்தாபிப்­ப­தோடு, அச்­ச­பையின் அங்கத்தவர்களின் கூட்டில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும். மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக புலம்பெயர்ந்த தேசத்தில் நிதிச் சேகரிப்பில் ஈடுபவர்களின் பூரண விபரங்கள் அடங்கிய வகையில் நாடுகள் தோறும் நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டு பகிரங்கப்படுத்த வேண்டும்.

அதேபோன்று அவ்வாறு நிதிச் சேகரிப்பில் ஈடுபடுபவர்கள் நிதிகளை பெறுகின்றவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் உரியவாறான சான்றிதழை வழங்க வேண்டும். அந்த நிதி, தாயகத்தில் உள்ள வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும் வேண்டியது அவியமாகின்றது.

ஐந்தாவதாக, கவனயீர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அறிக்கைகள், உள்நாட்டு, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்புகள், ஜெனிவா அமர்வுகளில் பங்கேற்றல் உள்ளிட்ட அனைத்திலும் பங்கேற்பவர்கள் தலைமைத்துவ சபை, வழிகாட்டல் சபை, மற்றும் இணைந்து செயற்படும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டாக இருப்பது கூடுதல் பலமாகும்.

ஆகக்குறைந்தது இந்த விடயங்களை முன்னெடுப்பதன் ஊடாக, கறைபடிந்துள்ள, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் காத்திரமான பயணத்தை மேற்கொள்வதற்கான முதற்படியில் அடியெடுத்து வைக்க முடியும்.

https://www.virakesari.lk/article/168714

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.