Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாடு, மழை, வானிலை
படக்குறிப்பு,

மழையால் புதுச்சேரி தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது

3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது

தமிழ்நாடு, மழை, வானிலை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'அந்தமான் - நிகோபார் தீவுகளின் மேலேயும் அருகில் உள்ள அந்தமான் கடற்பகுதியிலும் தென்கிழக்கு வங்கக் கடலிலும் காற்றுச் சுழற்சி ஏற்பட்டிருப்பதால் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியிலும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியிலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது,' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 'இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நவம்பர் 16ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்" என்று கூறப்பட்டிருக்கிறது,' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பருவ மழையைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழை மூலமாகவே தமிழ்நாட்டிற்கு அதிக அளவிற்கு மழைப் பொழிவு கிடைக்கிறது. வடகிழக்குப் பருவமழை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி வாக்கில் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் பருவமழை துவங்கவில்லை. பருவமழை துவங்கிய பிறகும் மிகக் குறைவாகவே பெய்தது.

தமிழ்நாடு, மழை, வானிலை
படக்குறிப்பு,

மழையால் புதுச்சேரி தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

இன்று (செவ்வாய், நவம்பர் 14) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் இரவில் இருந்தே விட்டுவிட்டு மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இன்றும் மழை நீடிக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் மழை நிலவரம்

கடந்த இரு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றிலிருந்தே (திங்கள், நவம்பர் 13) டெல்டா மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியிலும் நாகப்பட்டினத்திலும் தலா 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நன்னிலம், கடலூர், பரங்கிப்பேட்டை, புதுச்சேரியில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை
படக்குறிப்பு,

நாகப்பட்டினம்

தமிழ்நாடு, மழை, வானிலை
படக்குறிப்பு,

கள்ளக்குறிச்சியில், உலரவைத்த தானியங்களை மழையிலிருந்து பாதுகாப்பாகப் போர்த்திவைக்கும் விவசாயிகள்

மழை காரணமாக விடுமுறை

இன்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டிருப்பதால் கடலூர், விழுப்புரம், மயிலாடுறை, நாகப்பட்டனம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி, காரைக்காலிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய இரு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இன்று நடப்பதாக இருந்த டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தமிழ்நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கும்படி 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1913 என்ற எண்ணை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மழையின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டனம் ஆகிய இடங்களில் சில வீடுகள் சேதமடைந்துள்ளன. மழையின் காரணமாக வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டால், அங்கு வசிப்பவர்களைத் தங்க வைக்க கடற்கரையோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 4,967 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

மழையால் பேரிடர் ஏற்பட்டால், மீட்புப் பணியில் ஈடுபட அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக தலா 25 பேரைக் கொண்ட பத்துக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cv2zn401yyro

  • கருத்துக்கள உறவுகள்

பலமாத உழைப்பை வெறும் வீதியில் போட்டு மூடுகிறார்கள், அவர்களின் மனம் என்ன பாடுபடும், ஆனால் அவர்களும் வேறு என்னதான் செய்வது ........!  😴

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:
 
தமிழ்நாடு, மழை, வானிலை

படக்குறிப்பு,

கள்ளக்குறிச்சியில், உலரவைத்த தானியங்களை மழையிலிருந்து பாதுகாப்பாகப் போர்த்திவைக்கும் விவசாயிகள்

 

 

2 hours ago, suvy said:

பலமாத உழைப்பை வெறும் வீதியில் போட்டு மூடுகிறார்கள், அவர்களின் மனம் என்ன பாடுபடும், ஆனால் அவர்களும் வேறு என்னதான் செய்வது ........!  😴

இது எமக்கு ஒரு சேதி மட்டுமே, அவர்களின் நிலையில் சொல்ல வார்த்தையில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு மழை நிலவரம்: எத்தனை நாள் மழை பெய்யும்? எங்கெங்கு பாதிப்பு?

மழை
56 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டி உள்ள கேரள மாநிலத்தின் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை முதல் முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேனியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மழை

நீலகிரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதன்கிழமை இரவு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. இதேபோல மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 
ரயில் பாதை

ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

உதகை - குன்னூர் மலை ரயில் பாதையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் பாறைகள், மண் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் கிடக்கின்றன.

இதன் காரணமாக உதகை - குன்னூர் இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே துறையினர் ஈடுபட்டு வ்ருகின்றனர்.

மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை இரயில் சேவை வருகின்ற 25 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cl7p4kg48ego

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.