Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தின் நடவடிக்கைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தின் நடவடிக்கைகள்

-சங்கரன் சிவலிங்கம்-

ஜனாதிபதி மகிந்தர் மீண்டும் ஒரு சர்வதேச சுற்றுலாவை தனது ஏகப்பட்ட பரிவாரங்களுடன் ஆரம்பித்து விட்டார். சுமார் 85 பேர் வரை அவருடன் செல்வதாக செய்திகள் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காகவே பயணத்தினை மேற்கொள்கின்றார். இவர் பயணம் செய்யும் காலத்தில் தான் ஐ.நா.சபை மனித உரிமை மையத்தின் தொடர் கூட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக் கூட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பாக கடுமையான கண்டனங்கள் இலங்கை மீது எழுப்பப்பட்டதுமல்லாமல் ஐ.நா.வின் கண்காணிப்பு அலுவலகம் இலங்கையில் கட்டாயம் அமைக்கப்படல் வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.சபையுடன் கடுமையான மோதல் போக்கினை தொடர்ந்து கடைப்பிடித்ததனால் இந்தப் பயணத்தில் பலத்த நெருக்கடிகளை அவர் எதிர்நோக்கக் கூடும். இதற்கு முகங்கொடுப்பதற்காகவே பெரும் பரிவாரங்களுடன் அவர் பயணத்தினை ஆரம்பித்திருக்கின்றார். இப்பரிவாரங்கள் அவர் மீதான நெருக்கடிகளை எவ்வளவிற்கு குறைக்கும் என்பது சந்தேகமே. ஏனெனில் இவர்களின் கைகளுக்கு அகப்படாத நிலைக்கு சர்வதேசம் சென்று விட்டது.

மகிந்தரின் இந்தப் பயணக் காலகட்டம் சர்வதேச ரீதியாக அவருக்கு ஏற்றதாக இல்லை. ஸ்ரீலங்கா அரசின் மீது அழுத்தங்களைக் கொடுப்பதற்காக ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரித்து அதற்கேற்ப சர்வதேசம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு கட்டத்திலேயே அவரது பயணம் இடம்பெறுகின்றது. இதனால் முன்னைய பயணங்களைப் போல காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாய உறுதிமொழிகளை சர்வதேசத்திற்கு வழங்குவது இந்தத் தடவை மகிந்தருக்கு கடினமாகவே இருக்கும். இன்றைய நிலையில் கால நிர்ணயிப்புடன் கூடிய செயல் ரீதியான உத்தரவாதங்களையே சர்வதேசம் எதிர்பார்க்கும்.

சர்வதேசம் மனித உரிமைகள் தொடர்பாகவும் சமாதான முயற்சிகள் தொடர்பாகவும் பல்வேறு அழுத்தங்களை தற்போது கொடுக்கத் தொடங்கிவிட்டது. மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றது. சமாதான முயற்சிகள் தொடர்பாக அரசியல் தீர்வு முன்வைக்கப்படல் வேண்டும் என்றும், யுத்தத்தினை வடக்கு வரை விஸ்தரிக்க வேண்டாம் என்றும் வற்புறுத்துகின்றது.

இதற்கான அழுத்தங்களை ஒவ்வொரு படிமுறையாகவே கொடுத்து வந்தது. முதலாவது நிலையில் அறிக்கை ரீதியான அழுத்தத்தினைக் கொடுத்தது.

இணைத்தலைமை நாடுகள் உட்பட சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் அறிக்கை ரீதியாக கடும் அழுத்தங்களை கொடுத்து வந்தன. ஷ்ரீலங்கா அரசாங்கம் இவ்வழுத்தங்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் காட்டாததனால் இரண்டாவது நிலையில் செயல் ரீதியான அழுத்தங்களைக் கொடுத்தது. பொருளாதார உதவிகள் நிறுத்தம் இந்ந வகையிலேயே இடம்பெற்றது. பிரிட்டன், ஜேர்மனி என வளர்ந்து இன்று சுவீடனும் உதவிகளை நிறுத்தும் முயற்சிகளை ஆரம்பித்துவிட்டது. சுவீடன் இலங்கைக்கு அதிகளவு பொருளாதார உதவிகளை வழங்கும் நாடுகளில் ஒன்றாகும்.

மூன்றாம் நிலையில் இராணுவ உதவிகள் நிறுத்தம் என்பதையும் முடுக்கிவிட இருக்கின்றது. அமெரிக்கா ஏற்கனவே அந்த முடிவினை எடுத்துவிட்டது. அமெரிக்க செனட் சபை இதற்கான நிபந்தனைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்காவைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் இந்தநடவடிக்கைகளில் இறங்கலாம்.

எனினும் அமெரிக்க, ஐரோப்பிய வட்டகைக்குள் வராத சீனா,பாகிஸ்தான் என்பவற்றிடமிருந்து இலங்கை தொடர்ந்து இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டே இருக்கும். தற்போது இவ்விரு நாடுகளும் இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்குவதில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.

இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்தை புறக்கணித்து வருமானால் ஐ.நா.சபையின் நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டியநிலை ஏற்படலாம். அவ்வாறு நடவடிக்கை எடுக்க முற்பட்டால் சீனா, பாகிஸ்தான் போன்றனவும் அதற்கு கட்டுப்பட வேண்டிய நிலையே ஏற்படும். சர்வதேசத்தைப் பொறுத்தவரை அரச பயங்கரவாதத்தினை ஒரு எல்லைக்கு மேல் வளர விடுவது சர்வதேச ஒழுங்கு விதிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அதனைத் தொடர்ந்தும் அனுமதிக்கப் போவதில்லை.

சர்வதேசத்தின் நான்காம் நிலையிலான செயற்பாடு இதுவாகத்தான் இருக்க முடியும். இச் செயற்பாடு நடைமுறைக்கு வருமா, இல்லையா என்பதை இந்தப் பயணத்தின் போது மகிந்தர் வழங்குகின்ற செயல்ரீதியான உத்தரவாதங்களே தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.

சர்வதேச ஆதிக்க சக்திகள் தென்னாசியாவில் சீனாவுக்கெதிராக புதிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா ஆகியவை இணைந்து உருவாக்கும் கூட்டணியே அதுவாகும். தற்போது அதற்கான முயற்சிகள் முழு அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற கடற்படை ஒத்திகைகள், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி உடன்பாடுகள் என்பனவெல்லாம் இக்கூட்டு முயற்சிகளுக்கான வெளிப்பாடுகளேயாகும்.

இலங்கை விடயத்தில் இலங்கை முழுவதையும் இக்கூட்டணிக்கு ஆதரவாகவும் கூட்டணியின் கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதையே சர்வதேசம் விரும்புகின்றது. இதனாலேயே இலங்கையில் பிரிவினையை சர்வதேசம் விரும்பவில்லை. புலிகள் தங்களது நிகழ்ச்சி நிரல்களுக்கு புறம்பாக தனித்து ஓடுவதையும் விரும்பவில்லை. மாறாக புலிகளும் கூட்டணியின் கட்டுப்பாட்டினுள் அதன் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றே விரும்புகின்றது.இலங்கை என்ற அரச அமைப்பிற்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகளைக் காண்பதன் மூலம் முழு இலங்கையையும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கலாம் என அது நம்புகின்றது. யுத்த நிறுத்த உடன்படிக்கை, சமாதான முயற்சிகள் எல்லாம் அந்த நோக்கின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டன. இம் முயற்சிகளுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இலகுவாக இருக்கும் என்பதினாலேயே அக்கட்சி ஆட்சியிலிருப்பதை விரும்பியிருந்தது.

இவ்வாறு இலக்கில் கவனமாக இருந்து சர்வதேசம் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் பேரினவாதம் பற்றிய சரியான மதிப்பீட்டினை சர்வதேசம் மேற்கொள்ளவில்லை. அதனை இலகுவாக கட்டுப்படுத்தலாமென்ற மேம்போக்கான கருத்தே அதனிடமிருந்தது.சிங்கள சமூக உருவாக்கம் பேரினவாத மயப்பட்டிருப்பதனையோ அதனடிப்படையில் சிங்கள அரசுருவாக்கமும் பேரினவாத மயப்பட்டிருப்பதனையோ சர்வதேசம் கவனிக்கத் தவறியது. இந்திய அனுபவம் காரணமாக புலிகளையே அது பிரச்சினையாக பார்த்தது. இதற்காகவே சர்வதேச வலைப்பின்னல்களை உருவாக்கி புலிகளைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பேரினவாதம் தொடர்பாக இந்தியாவிற்கும் நிறைய அனுபவங்கள் இருந்தன என்பதை இது விடயத்தில் சர்வதேசம் கவனத்திற் கொள்ளவில்லை.

சர்வதேசத்தின் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பேரின வாதம் இவர்களது நிகழ்ச்சி நிரல்களையெல்லாம் சிதறடித்து ஆட்சியினைக் கைப்பற்றியது. ஷ்ரீலங்கா அரசுருவாக்கத்தின் பேரினவாதத் தன்மைகளை சர்வதேசம் நேரடியாக தரிசிக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களைக் கட்டுப்படுத்துகின்ற சர்வதேச நிகழ்ச்சி நிரல்களிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகவும்,தங்களை நோக்கி வருகின்ற சர்வதேச அழுத்தங்களையெல்லாம் ஸ்ரீலங்கா அரசின் மீது திருப்பிவிட வேண்டும் என்பதற்காகவும் புலிகளும் பேரினவாத ஆட்சியினைக் கைப்பற்ற ஒத்துழைத்தனர்.

பேரினவாதம் ஆட்சிக்கட்டிலில் ஏறியதைத் தொடர்ந்து சர்வதேசத்தின் கண்முன்னாகவே சமாதான அடித்தளங்களெல்லாம் ஒவ்வொன்றாக தகர்ந்து விழுந்தன. யுத்தநிறுத்த உடன்படிக்கை செயலற்றதாக்கப்பட்டது. சமாதானச் செயற்பாட்டிற்கு அரசியல் அடித்தளமாக இருந்த வடக்கு, கிழக்கு இணைப்பு நீதிமன்றத்தின் மூலம் பிரிக்கப்பட்டது.யுத்தநிறுத்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.