Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும்.! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும்.!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் அதிரடி.

தமிழினி

சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற்று தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை நினைவு கூருவதற்காக தாயகம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட  உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழர்கள்  உணர்வழிச்சியுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில்  சமரசமின்றி  நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபியை சுற்றி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சிவப்பு நிற மின் ஒளிகளால் நினைவுத் தூபி ஒழிர்ந்தது.

இதேவேளை தமிழர் தாயகத்தில் சிறீலங்கா பேரினவாத அரசு எப்படியாவது மாவீரர் நாளை திட்டமிட்டு முடக்க வேண்டும் என்பதற்காக மாவீரர் நாள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதில் தனது இனவழிபு காவல்துறையை தீவிரமாக களமிறக்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து  எமது செய்திப் பிரிவுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

ஜ.நாவில் இலங்கை குறித்து 2015 இல் கொண்டுவரப்பட்ட  30/1 தீர்மானத்தை  இலங்கை அரசு ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை தாம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறுகால நீதியின் வழியே இழப்பீட்டு உரிமை என்பதற்குள் நினைவேந்தல் உரிமையை ஏற்றுக் கொள்வதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது அவ்வாறு இருக்கும்போது தற்போது தமிழ் மக்களின்  மாவீரர் நாள் நினைவேந்தல் உரிமையை சிறீலங்கா அரசு  நீதிமன்றங்களின் ஊடாகவும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் மாவீரர் நாள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தம் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதானது சிறீலங்கா அரசு தானே ஒப்புக்கொண்ட ஐ.நா தீர்மானத்தை மீறும் செயலாகும்.

அரசின் இத்தகைய நடவடிக்கையானது அரசு கூறும் நல்லிணக்கத்தை எப்படி புரிந்து கொள்வது என்று மாணவர்களாகிய நாங்களே  குழப்பத்தில் இருக்கின்றோம். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களை மட்டுமல்ல ஐ.நா உள்ளிட்ட பன்னாட்டு சமூகத்தையும் ஏமாற்றும் செயலாகும் இன்று அவர் பதிலளித்தார் அவர் மேலும் கூறுகையில்.

எம்மைப் பொறுத்தவரை இறந்தவர்களை இறைவனுக்கு நிகராக வழிபடும் மரபு வழியில் வந்தவர்கள் நாங்கள் அந்த வகையில் எமது உரிமைகளுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த ஒவ்வொரு மாவீரர்களையும் உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை நினைவு கூறுவான் என்று அவர் மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு தெரிவித்தார். (ச)

உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும்.! (newuthayan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.