Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் சென்ற மூன்று நாட்டு தூதுவர்கள் – இராணுவ தளபதியுடன் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சென்ற மூன்று நாட்டு தூதுவர்கள் – இராணுவ தளபதியுடன் சந்திப்பு

adminDecember 14, 2023

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை   சென்றுள்ளனா்.

சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சென்று யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

32-3-2.jpg?resize=625%2C39932-5.jpg?resize=601%2C39932-6.jpg?resize=571%2C395

இந்த சந்திப்பின் போது, இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக அறிய முடிகிறது.
 

https://globaltamilnews.net/2023/198579/

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஜப்பான், தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து தூதுவர்கள் முகாம் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை குறித்து கலந்துரையாடல்

16 DEC, 2023 | 09:33 PM
image
 

ஆர்.ராம்

வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான்,  தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து தூதுவர்கள் யாழில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றதோடு,  உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி,  இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வொல்ட் மற்றும் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் ஷால்க் ஆகியோர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பது பிரதான விடயமாக இருந்தாலும், அந்நிகழ்வுக்கு அப்பால் பல்வேறு சந்திப்புக்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் சார்ந்து செயற்படும் குரலற்றவர்களுக்கான அமைப்பு,  வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான வடக்கு, கிழக்கு சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் உறவினர்கள், நேரடிச் சாட்சியங்கள் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக,  தென்னாபிரிக்கா, சுவிட்சர்லாந்து,  ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்தல்,  நடைமுறையில் அதனை வெற்றி பெறச் செய்தல் என்பதில் கடுமையான பிரயத்தனம் செய்துவருகின்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மேற்படி தூதுவர்கள் முயற்சிகளை எடுத்துள்ளனர். அதனடிப்படையில் வடக்கில் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதோடு,  விசேடமாக சரணடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சாட்சியாளர்களை அழைத்து சரணடைந்த பகுதியை அடையாளம் காணும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா அதற்கான ஆலோசனைகளையும்,  சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகியன நிதிப் பங்களிப்பையும் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/171839

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.