Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன்

adminJanuary 7, 2024
32-2-1.jpg?fit=1170%2C615&ssl=1

தன்னை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்மணியை தான் மன்னித்து விட்டதாகவும், அவரது விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி, அவரது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம்தொடர்பில், அவசரகாலச் சட்டவிதியின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்.

அவ்வாறிருக்க, வழக்கு விசாரணையின்போது கொழும்பு மேல்நீதிமன்றம் இவருக்கு ‘15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, இரன்டாண்டுகால சிறைதண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும்‘ என்கின்ற நிபந்தனையுடன் 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்துள்ளது.

எனினும் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருப்தியுற்றிராத சட்டமா அதிபர் திணைக்களம் அத்தீர்மானத்தை ஆட்சேபித்து மேல்முறையீட்டு நீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தது.

அந்த வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றமானது மேல் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து, அரசியல் கைதியான சத்தியலீலாவுக்கு 2023 இல் மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் அவர், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு அளித்த தண்டனத் தீர்ப்பை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி வழக்கிலிருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றில் மீ்ண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 இவ்வாறிருக்கையில் சத்தியலீலா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரலுயர்த்தி வருகின்ற, ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு ஒரு கருணை மனுவினை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் அவர், “என்னைப் பொறுத்தமட்டில் 14வருடங்களாக பட்ட துன்ப துயரங்களுக்குப் பின்னரும் ஒரு மரணதண்டனைக் கைதியாக மீண்டும் சிறைக்குச் செல்வதை இந்த ஜென்மத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது.

அதைவிட உயிரை மாய்த்துக் கொள்வதே மேல். எனவே, ஜனாதிபதி அவர்கள், பிள்ளைகளையும், பெற்றோரையும் பிரிந்து14 ஆண்டுகாலம் சிறையில் வாடி விடுதலையான பின்பும் மரணதண்டனைத் தீர்ப்பிற்கு ஆளாகியுள்ள எனக்கு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி எனது இயல்பு வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கருணை மனு தொடர்பில்  நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்போது, ஜனாதிபதிக்கு அருகிலிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், “அந்தப் பெண்மணியை எப்போதோ நான் மன்னித்துவிட்டேன். ஆகையால், இந்த விடயம் சம்மந்தமாக நான், சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அவரது துரிதமான விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் ” என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
 

https://globaltamilnews.net/2024/199463/

  • கருத்துக்கள உறவுகள்

ம் .... ஏமாற்று, கடத்தல், கொலை, கொள்ளை செய்பவரெல்லாம் ஜனாதிபதிக்கு பக்கத்தில் அமைச்சர் பதவி. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை. உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க  வக்கத்த நீதித்துறை. இவர்களை அழைத்து பக்கத்தில் வைத்து அமைச்சர் பதவி கொடுத்தவர்களின் யோக்கியதை என்னவென்று இதிலிருந்து தெரிகிறது. இதில, இவர்வேற மன்னித்து புனிதராகி விட்டாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் குற்றவாளியே அல்ல. குற்றம்சாட்டப்பட்டு சோடிக்கப்பட்டு உள்ளே.. தள்ளப்பட்டவர்.

இவர் செய்த கொலைகளுக்கு இவரை இவர் சார்ந்த மக்களே.. வாக்குப் போட்டு தெரிவு செய்து சிங்கள ஏஜென்டாக செயற்பட வைச்சிருக்கும் நிலையில்..

இவர் ஒரு அப்பாவியை தன்னும் காப்பாற்ற முடியாமலா.. வழக்கு இவ்வளவு இழுபடுது..??! கருணை மனு போடப்பட்டும்.. இவர் இப்ப தானாம் சட்டமா அதிபரோடு கலந்துரையாடப் போறார்..?? ஏன் இதனை முன்னமே செய்யவில்லை. செய்திருந்தால்.. மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட வேண்டி வந்திருக்காதே..??!

அவர் உண்மையான கொலையாளியாக இருந்திருந்தால்.. ஈபிடிபியே சிங்கள இராணுவப் புலனாய்வாளர்களோடு சேர்ந்து அவரை எப்பவோ கடத்தி போட்டுத்தள்ளி இருப்பார்கள். இப்படி வழக்கு கிழக்கு என்று இழுபட்டிருக்க விடமாட்டார்கள். 

சூளை மேட்டு வழக்கில்.. தான் தண்டனையில் இருந்து தப்பி இருப்பது எப்படின்னு தெரியவில்லைப் போலும்.. 

ஒரு அப்பாவியின் விடுதலையிலும்.. சுயநல ஆதாய அரசியல். என்ன ஜென்மங்களோ..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் செய்த தவறுக்கு பாதிக்கப்படடவர் மன்னிப்பு வழங்கினால் சடடம்  என்ன செய்யும்? மன்னிப்பு வளங்களினாலும் சடடப்படி தண்டிக்கப்படுவாரா?

இவருக்கு சடடபடி தீர்ப்பு வழங்கினாலும் சடடமா அதிபர் திணைக்களம் இதில் மிகவும் கரிசனை காட்டிட காரணம் என்னவோ? தமிழ் பெண்மணி என்பதால் அப்படி இருக்கலாம். 

Edited by Cruso

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.