Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   18 JAN, 2024 | 03:48 PM

image

சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பதற்கு ஏதுவான நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (18) முற்பகல் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில்  கலந்துரையாடலொன்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது

குறித்த கலந்துரையாடலில் சுயதொழில் முயற்சியாளர்கள் தாம் எதிர் நோக்கியுள்ள தொழில்சார் நடைமுறை பிரச்சினைகளையும், வங்கிகள் ஊடக கடன் வசதிகளை பெற முற்படும் போது ஏற்படும் இறுக்கமான நடைமுறைகளால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறித்த சுயதொழில் முயற்சியாளர்களின் கருத்துக்களில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் எனதெரிவித்திருந்தார்.

அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முற்சிகளை ஊக்குவிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகளையும் வழங்க முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் துறைசார் அதிகாரிகள், வங்கிகளின் முகாமையாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

f3216c9e-777a-401e-bc8f-e1f25333e961.jpe

36a53e8c-1cb5-4f96-ad3d-1e96f27f7ca6.jpe

21e7b1f8-d835-4e37-b5d4-6b9d59cc1cc3.jpe

https://www.virakesari.lk/article/174250

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை ஓடிய பின் லாயத்தை பூட்டுவது மாதிரி...
இப்படியான நிலைமை வரும் முன்பே... சம்பந்தப் பட்ட அமைச்சர்களும், 
அதிகாரிகளும் சிந்திக்கத் தவறியது ஏன்?

இப்போ.... ஊட்டச் சத்து இல்லாத உணவை உண்ணும் மக்கள்,
எதிர்காலத்தில் தமது உடல் ஆரோக்கியத்தையும் இழக்கும் போது 
அதற்குரிய பாதிப்பையும் அரசே முகம் கொடுக்க வேண்டி வரும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

குதிரை ஓடிய பின் லாயத்தை பூட்டுவது மாதிரி...
இப்படியான நிலைமை வரும் முன்பே... சம்பந்தப் பட்ட அமைச்சர்களும், 
அதிகாரிகளும் சிந்திக்கத் தவறியது ஏன்?

இப்போ.... ஊட்டச் சத்து இல்லாத உணவை உண்ணும் மக்கள்,
எதிர்காலத்தில் தமது உடல் ஆரோக்கியத்தையும் இழக்கும் போது 
அதற்குரிய பாதிப்பையும் அரசே முகம் கொடுக்க வேண்டி வரும். 

அந்தந்த நேரத்துக்கு அந்தந்த பதில்களும் , செயட்பாடுகளும். இங்கு அரசு என்றெல்லாம் ஒன்றுமில்லை, எப்படி பதவியை வைத்து கொள்ளையடிக்கலாமோஅப்படி கொள்ளையடிப்பதுதான் நோக்கம்.

எதிர் காலத்தையும் , சுகாதாரத்தையும் பற்றி எந்த அரசு(?) சிந்திக்கிறது. கொண்டு வரும் மருந்துகளிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதையும் விட பெரிய மோசடி என்ன இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Cruso said:

அந்தந்த நேரத்துக்கு அந்தந்த பதில்களும் , செயட்பாடுகளும். இங்கு அரசு என்றெல்லாம் ஒன்றுமில்லை, எப்படி பதவியை வைத்து கொள்ளையடிக்கலாமோஅப்படி கொள்ளையடிப்பதுதான் நோக்கம்.

எதிர் காலத்தையும் , சுகாதாரத்தையும் பற்றி எந்த அரசு(?) சிந்திக்கிறது. கொண்டு வரும் மருந்துகளிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதையும் விட பெரிய மோசடி என்ன இருக்கிறது?

நேற்றைய ஒரு செய்தியில்…. மீன் விலை பாதியாக குறைந்து விட்டது என்றிருந்தது. காரணம் மக்களிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி இல்லாமல் போய் விட்டதாம். இவை எல்லாம் வளரும் பிள்ளைகளின் ஊட்டச் சத்து சம்பந்தப் பட்ட விடயம். 
ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் இதனைப் பற்றி பெரிதாக சிந்திப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நேற்றைய ஒரு செய்தியில்…. மீன் விலை பாதியாக குறைந்து விட்டது என்றிருந்தது. காரணம் மக்களிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி இல்லாமல் போய் விட்டதாம். இவை எல்லாம் வளரும் பிள்ளைகளின் ஊட்டச் சத்து சம்பந்தப் பட்ட விடயம். 
ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் இதனைப் பற்றி பெரிதாக சிந்திப்பதாக தெரியவில்லை.

இவர்கள் மீனின் விலை குறைந்து விட்ட்து என்று சொல்வதெல்லாம் அதன் விலை ஆயிரத்துக்கு மேலேதான். நான் பேலியகொடையில் வாங்குவதால் அந்த விலைகளைத்தெரியும். மற்ற இடங்களில் வாங்கினால் அதனையும் விட ஒன்றரை இரண்டு மடங்கு அதிகம்.

உண்மையாகவே பிள்ளகைளின் ஊடட சத்து என்பது பாரதூரமானது. முடடையின் விலையும் அப்படி.

அரசு எப்படியோ வரி வரி என்று போட்டு மக்களை வதைக்கிறது. எப்படியாவது IMF இடம் நல்ல பெயர் எடுத்து கடன் வாங்கத்தான் முயட்சிக்குதே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. தேர்தலின் பின்னர் ஒரு மாற்றம் நிச்சயமாக வரும். ஆனால் அதன் விளைவுகள் எப்படியோ , பொறுத்திருந்து பார்ப்பம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.