Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வை பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள போதிலும் அது சாத்தியப்படவில்லை.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இதற்கு 30 வருட குத்தகைக்கு புதிய காணியை  பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 30 வருடத்துக்கான குத்தகை தொகையையும்  வழங்க ஏற்பாடு  செய்துள்ளார்.
 
IMG-20240129-WA0002.jpg
 
கிழக்கு ஆளுநரின் இந்த செயற்பாட்டை வரவேற்றுள்ள பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இப்பாடசாலைக்கு  காணி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்த பாடசாலையில் நீண்டகாலமாக  காணிப்பிரசினை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை எனவும், பாடசாலைகளுக்கான காணியை உடனடியாக பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழரசு கட்சியின் செயலாளர் குகதாசன்   ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்து இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்வினை வழங்கினேன் என செந்தில் தொண்டமான் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இரா. சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழரசு கட்சியின் செயலாளர் குகதாசன்

ஆஹா,ஆஹா ....இந்த கூட்டணியை மத்திய அரசு மிகவும் நேசிக்கின்றது போல....
நிரந்தர தீர்வை பெற்று கொடுத்த மாதிரி படம் காட்டுறீயள் ....30 வருட குத்தகைக்கு எடுத்து கொடுத்திருக்கின்றார் ...குத்தகை பணத்தை வெளிநாட்டு பழைய மாணவ சங்கம் தான் கொடுக்கும் என நினைக்கிறன்....

அது சரி போறபோக்கை பார்த்தால் அமெரிக்கா வின் டெக்சாஸ் மாநில முதல்வரை (தெரிவு செய்யப்பட்டவர்) மிஞ்சிவிடுவார் போல தெரிகிறது இந்த அரச சேவையாளர்.....இரண்டு கிழமையில் மத்திய அர்சுக்கு எதிராக போர் தொடங்குவேன் என அறிக்கை விட்டாலும் விடுவார் ....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

ஆஹா,ஆஹா ....இந்த கூட்டணியை மத்திய அரசு மிகவும் நேசிக்கின்றது போல....
நிரந்தர தீர்வை பெற்று கொடுத்த மாதிரி படம் காட்டுறீயள் ....30 வருட குத்தகைக்கு எடுத்து கொடுத்திருக்கின்றார் ...குத்தகை பணத்தை வெளிநாட்டு பழைய மாணவ சங்கம் தான் கொடுக்கும் என நினைக்கிறன்....

அது சரி போறபோக்கை பார்த்தால் அமெரிக்கா வின் டெக்சாஸ் மாநில முதல்வரை (தெரிவு செய்யப்பட்டவர்) மிஞ்சிவிடுவார் போல தெரிகிறது இந்த அரச சேவையாளர்.....இரண்டு கிழமையில் மத்திய அர்சுக்கு எதிராக போர் தொடங்குவேன் என அறிக்கை விட்டாலும் விடுவார் ....

மேலே குறிப்பிடட கூடடணியில் சங்கிகள் யாருமில்லை. சங்கிகள்  இல்லாத கூடடணியை  நீங்கள் கூறியது போல அரசு ஆதரிக்கிறது போல தெரிகிறது. அதாவது இந்திய இல்லாத கூடடணி. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Cruso said:

மேலே குறிப்பிடட கூடடணியில் சங்கிகள் யாருமில்லை. சங்கிகள்  இல்லாத கூடடணியை  நீங்கள் கூறியது போல அரசு ஆதரிக்கிறது போல தெரிகிறது. அதாவது இந்திய இல்லாத கூடடணி. 

ரணிலும் அமெரிக்காவும் விரும்பும் கூட்டணி...காலம் பதில் சொல்லட்டும்...வரும் பொது தேர்தலில் தமிழ் தேசியத்துடன் சுமத்திரன் நிற்பரா அல்லது சிறிலங்கா தேசியத்துடன் நிற்பாரா..என்று..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

ரணிலும் அமெரிக்காவும் விரும்பும் கூட்டணி...காலம் பதில் சொல்லட்டும்...வரும் பொது தேர்தலில் தமிழ் தேசியத்துடன் சுமத்திரன் நிற்பரா அல்லது சிறிலங்கா தேசியத்துடன் நிற்பாரா..என்று..

வரும் பொது தேர்தலில் தமிழ் தேசியத்தில்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் என்ன நடக்குமென்று இப்போதைக்கு ஊகிக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

வரும் பொது தேர்தலில் தமிழ் தேசியத்தில்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் என்ன நடக்குமென்று இப்போதைக்கு ஊகிக்க முடியாது. 

சுமாவுக்கு பிடிக்காத ஒன்று தமிழ் தேசியம் கண்டியாலோ , 2010 இல் வந்ததே அதை அழிக்க தானே

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழன்பன் said:

சுமாவுக்கு பிடிக்காத ஒன்று தமிழ் தேசியம் கண்டியாலோ , 2010 இல் வந்ததே அதை அழிக்க தானே

அதாவது அவர் வந்த காரியம் முடிந்து விட்ட்து இனி அவர் பெரும் தேசிய அரசியலில் இறங்கலாம் என்று சொல்லுகிறீர்கள்.

நான் அதையே  எனது முன்னைய கருத்துக்களில் தெரிவித்திருந்தேன். அந்த பெரும் தேசிய அரசியல்   தமிழர்களில் எவ்வகையான தாக்கங்களை உருவாகும் என்பது பிரச்சினைக்குரிய விடயமே. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.