Jump to content

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலியவின் விளக்கமறியலில் நீடிப்பு!

தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301022

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Published By: VISHNU

20 MAY, 2024 | 06:33 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கிலேயே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184075

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

03 JUN, 2024 | 03:26 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (3) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் 4 ஆவது சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/185209

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

14 JUN, 2024 | 06:28 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (14) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/186096

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2024 at 02:39, ஈழப்பிரியன் said:

அங்க வைத்து ஐயாவுக்கு பழுதான மருந்துகளை ஏற்ற வேண்டும்.

 

On 2/3/2024 at 01:56, ஏராளன் said:

அவரது உடல்நலக்குறைவு தொடர்பில் நீதிமன்றத்துக்கு போலியான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியர்  தொடர்பில் கட்டளையை பிறப்பிக்குமாறும் குறிப்பிட்டார்.

மருந்தேதும் ஏற்றாமலேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.  பலரை கொல்லும்போது மரண பயம் தெரிவதில்லை, அப்பாவிகளை சிறைக்கு அனுப்பும்போது அவர்களின் நோய்கள், கவலைகள், நிஞாயங்கள் புரிவதில்லை. தமக்கென்று வரும்போது அத்தனையும் வந்துவிடும் அரசியல்வாதிகளுக்கு. என்ன...... இத்தனை வாதிப்பிரதிவாதங்கள் நடந்து அவர்களை சிறைக்கு அனுப்பினாலும் நாளைக்கு எதுவும் நடவாததுபோல் நாட்டுக்காக சிறை சென்ற வீரர்களாக வரவேற்கப்பட்டு இன்னொரு அமைச்சு கொடுக்கப்பட்டு இன்று இழந்ததை நாளை மீட்டுக்கொள்வார்கள். நாட்டிலே அனர்த்தம், தட்டுப்பாடு, போராட்டம் இப்படி ஏதும் நடந்தாலே அரசியல் வாதிகளின் வங்கிக் கணக்குகளில் பணமழை பொழியும். இவருக்குப்பின்னால் மறைந்திருக்கும் முதலைகள் அகப்படுவார்களா அல்லது வெறும் நாடகந்தானா? இல்லை ..... இப்படி எத்தனையோ கொலை வழக்குகள் பிரபல்யமாக நடந்து தண்டனை அறிவித்து இன்று பதவி சுகத்தோடு இருக்கிறார்கள். வெறும்  காலம் சக்தி பண வாத விரையம்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

28 JUN, 2024 | 06:08 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 12  ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (28) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் சந்தேக நபரான மருந்துகள் விநியோக பிரிவின் அதிகாரியொருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/187206

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலியவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

02 JUL, 2024 | 04:33 PM
image
 

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நீக்கி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற  தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா மற்றும் பிணை தொடர்பான தீர்ப்பு ஆகியன தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

https://www.virakesari.lk/article/187500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலிய மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துக்களுக்கு இடைக்கால தடை

Published By: DIGITAL DESK 3    05 JUL, 2024 | 11:49 AM

image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் 93.125 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வங்கிக்கணக்குகள் மற்றும் காப்புறுதிப் பத்திரங்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டில் 3 மாதங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை (IVIG) கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில், ஜூன் 19ஆம் திகதி, ரம்புக்வெல்லவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/187735

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

12 JUL, 2024 | 05:46 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (12) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (12) ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/188323

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

25 JUL, 2024 | 05:58 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரை ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (25) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/189378

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்து விளக்கமறியல் - இருவருக்கு பிணை

Published By: DIGITAL DESK 7   08 AUG, 2024 | 05:47 PM

image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை (08) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/190598

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

22 AUG, 2024 | 04:27 PM
image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (22) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/191723

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

29 AUG, 2024 | 05:17 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/192330

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு

Published By: DIGITAL DESK 3   04 SEP, 2024 | 02:37 PM

image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவை மீண்டும் ஒத்தி வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம், இந்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உரிய தீர்மானத்தை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 03ஆம் திகதி வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/192831

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை

11 SEP, 2024 | 05:28 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிணை மனு கடந்த 7 மாத காலமாக விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (11) இந்த பிணை உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/193430

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய

12 SEP, 2024 | 07:57 PM
image

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலையாகியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகள் தொடர்பாகவே அவர் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/193527

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.